"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, November 15, 2009

சிங்கப்பூர்-திருமதி-திலகவதி அன்பழகனின் பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள்




நாமறிந்த திலகவதிகள் நானிலத்தில் பலருண்டு...
நாவுக்கரசரின் தமக்கையாக நற்சமய வரலாற்றில்
தம்பியாரைத் தன்வழியில் தடுத்தாண்ட தமக்கையாகும்.-மற்றவர்
செம்மைமாதர் பாதுகாப்பில் சேவைபல செய்கின்ற
தமிழ்நாட்டின் தலைநிமிரக் குரல்கொடுத்து-மின்
குமிழான ‘அம்ருதா’வில் குறிக்கோளை எழுதிவரும்
ஐ.பி.எஸ். திலகவதி- அரிவையர்க்கு ஆணிவேராம்.
செய்கையில் தமிழுயர சிங்கையில் உழைக்கின்ற
வலதுகையான அன்பழகன் வாழ்க்கைத் துணைவியான
திலகவதி பெயருள்ள திருமகளாம்.சிங்கைவாழ்ந்த
இராமையாத் தேவரின் இளையமகள் இவரென்போம்.
இராமன் வாழுமிடம் சீதைக்கு அயோத்தியென்று
தமிழ்நாடு சென்றிருந்து தலைவன்வழி வாழந்த்வராம்.
அமிழ்தான வாழ்க்கையிலே ஆண்மக்களைப் பெற்றவராம்.
அக்டோபர் முப்பத்தொன்றில் ஆளுமையுடன் பிறந்து
அன்பழகன் இல்வாழ்வில் அரும்பணிகள் செய்தவராம்
கவிமாலை நிகழ்ச்சிகட்கு கருத்துடனே வருகைதந்து
குவிகின்ற புன்சிரிப்பால் குளிர்விக்கும் குலமகளாம்.-அவரை
புவிமேலே நீடுவாழ்ந்து புதுமைத்தேனி புகழுயர...
கவிமாலை உறவுகள் களிப்புடனே வாழ்த்துகின்றோம்.

   வள்ளியம்மை சுப்பிரமணியம்.

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்