Tuesday, July 12, 2011

மரண அறிவித்தல் : திருமதி நடேசன் சிவயோகம் காலையடி பண்டத்தரிப்பில் காலமானார்.

திருமதி நடேசன் சிவயோகம் காலையடி பண்டத்தரிப்பில் காலமானார். 

அன்னார் இளைப்பாறிய புகையிரத நிலைய அதிபர் திருவாளர் இராமலிங்கம் நடேசன்  அவர்களின் அன்பு மனைவியும்,  காலஞ்சென்றவர்களான திரு திருமதி சபாபதி விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மகளும், அழகரத்தினம் (ஓய்வுபெற்ற சுங்க பிரதிப் பணிப்பாளர்) காலஞ்சென்ற அதிபர் சண்முகலிங்கம், குமாரசிங்கம் (கனடா) ஆகியோரின்  அன்புச் சகோதரியும் ஆவார்.

இரவீந்திரன் (விரிவுரையாளர் தேசிய கல்வியற் கல்லூரி), இரமணீந்திரன் (கனடா), இந்திரகுமாரி (கனடா), மல்லிகா (அமரர்), புவீந்திரன் (கனடா) , நிர்மலா (கனடா) ஆகியோரின் அன்புத்தாயாரும்,

சத்தியமலர், விஜயலஷ்மி, செல்வராசா, விஜிதா, ரமேஸ் ஆகியோரின் அருமை மாமியாரும் ஆவார்.


 இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
 
+94776386183          +94750555333

1 comments:

  1. அமரர்-சிவயோகம் நடேசன் அவர்களின் ;------

    திதி வெண்பா
    ---------------------------
    ஆண்டு கரவருடம் அற்புத ஆனிமாதம்
    பூண்ட வளர்பிறைத் திரயோதசி -மாண்புடன்
    சிவயோகம் நடேசன் சிவனாரடி சேர்ந்த
    தவமான திருநாளென்று அறி.

    மலர்வு ;---16-06-1933 உதிர்வு 13-07-2011

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo above to download the FULL VOLUME in PDF Size 10MB