"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Tuesday, November 15, 2011

தோழர் சங்கரப்பிள்ளை சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி

தோழர்  சிவதாசன் அவர்களின் மறைவுக்கு அஞ்சலி 

தோழர் சங்கரப்பிள்ளை . சிவதாசன் அவர்கள் 1934ம் ஆண்டு கொல்லங்கலட்டி மாவிட்டபுரத்தில் பிறந்து -கண்டி மாநகரத்தில் கல்விகற்று , தேசிய ஒருமைப்பாட்டுக்காக வாழ்நாள் முழுவதும் ஒத்துழைப்பு வழங்கியவர். 
 
 தோழர் சிவதாசன் அவர்கள், தோழர் கே.ஏ. சுப்ரமணியத்தின் அன்பு மைத்துனரும் மிக நெருங்கிய பால்யகாலத்து நண்பரும் ஆவார். இருவரும்  முற்போக்கு வாலிபர் இயக்கங்களில் இணைந்து பங்கு கொண்டவர்கள். அவர்களது உறவு , அவரது இறுதிகாலம் வரை குடும்ப உறவாக நீடித்தது. பல மொழிகளில் மிக பாண்டித்தியம் பெற்றிருந்தார். பாராளுமன்ற  உறுப்பினர் ஆக பதவி வகித்த காலத்தில் எம் மக்களுக்கு தன்னால் இயன்ற பங்களிப்பை செய்தார். அவரது ஆத்மா சாந்தி பெற, அவர் விரும்பி நேசித்த "சத்தியமனை" தனது துக்கத்தை தெரிவித்துகொள்கிறது. 

தோழர் சிவதாசன் அவர்களுக்கு.........திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம் அவர்களின் கவி-அஞ்சலி
இளமைக் காலத்தில் இணைந்தாய் பொதுவுடமைப்
பழக்க மொழியூடே பங்கேற்பில் தேர்ந்திருந்தாய்
முழுக்கச் செயற்பட மூச்சாகக் கருமமாற்ற....
மாற்றுஅணி சேர்ந்து மனமுடைந்து போகாமல்....
ஆற்றுகின்ற சேவையது ஐக்கியத்தின் வெளிப்பாடு
போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவார்
தூற்றட்டும் என்ற திடத்துடனே நாடாளுமன்றத்திலும்
உந்தன் குரலையும் உரிமையுடன் ஒப்புவித்தாய்
தலைமையேற்றாய் 'கற்பகத்தின்' வளர்ச்சியிலும்
இயன்றவரை தமிழ்மக்கள் இன்னல்பல நீக்க......
முயன்று செயற்பட்டு மூச்சையும் வெளிப்படுத்தி
முகங்கொடுத்த இன்னல்கள்..... முரணான காலத்திலும்   
உன்தன் பங்களிப்பை உரியகாலம் செய்ததனால் 
நன்றியுடன் நினைவுகூரும் நல்லுளங்களில் வாழ்கின்றீர்.

திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்15 Nov 2011

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்