"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, October 30, 2011

யாழ்ப்பாணத்தில் சமத்துவ நீதி ஓங்கப் போராடிய களப் போராளி சங்கானை நிற்சாமத் தோழர் பொ. றாதா

 




Birth   1952.08.18  Comrade P. Radha Death 2011.10.30


18-08-1952 தோழர் பொ. றாதா  30-10-2011










யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1970களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
சங்கானை நிச்சாமத் தோழர் பொ. றாதா
...
சங்கானைக்கு என் வணக்கம் !


"எச்சாமம் வந்து எதிரிஅழைத்தாலும் நிச்சாமக்கண்கள் நெருப்பெறிந்து
நீறாக்கும் குச்சுக் குடிலுக்குள் கொலுவிருக்கும் கோபத்தை மெச்சுகிறேன்
சங்கானை. மண்ணுள் மலர்ந்த மற்றவியட்நாமே உன் குச்சுக்குடிலுக்குள்
குடியிருந்தகோபத்தை மெச்சுகிறேன் மெச்சுகிறேன்" - கவிஞர் சுபத்திரன்







Thursday, October 6, 2011

யாருக்கு விருது?

  யாருக்கு விருது?
’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’’
காலுடைந்து போனபின்னும் சக்கர நாற்காலியில் சாதிக்க வேண்டுமென
நாலு கி.மீ  ஓட்டத்தில் முதலிடத்தில் வந்து களைத்தவர்க்கு -
 
நாலிரண்டு வருடங்கள் தோல்விமேல் தோல்விகண்டு நம்பிக்கையில்
காலூன்றி நின்ற தாய்க்கு இரட்டைக் குழந்தைகள் கிடைக்கவைத்த மருத்துவர்க்கு -
 
வாலறுந்த பட்டம்போல் வாழ்வில் குறிக்கோளற்ற ஊதாரி இளைஞனுக்கு
மேலும் மனிதனாக வாழலாமென்று வழிவகுத்த மஞ்சள்நாடா குழுவினர்க்கு -
 
சின்னஞ் சிறுவயதில் சிந்திக்கும் திறனை வளர்த்த பெற்றோரின்
சொன்னசொற் தவறாது வளர்ந்து தன்நாட்டிற்குப் பெருமைசேர்த்த மகளுக்கு -
 
விஞ்ஞான ஆராய்ச்சியினால் விண்வெளியில் தடம்பதித்து மீண்டு
அஞ்ஞானம் அகல அனைவர்க்கும் வழிகாட்டும் அணுவிஞ்ஞானிக்கு -
 
சும்மா கிடைத்தால் அதன்பெயர் விருது அல்ல; அதைக்கருதி
தம்மால் இயன்றவரை அடுத்தடுத்து முயன்றபின்னும் தோல்விவர
“அம்மா” எனப் பெருமூச்சில் அவன்கண்ணால் மழைபொழியத் துவளாமல்
நம்மால் முடியுமென்ற நம்பிக்கை நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போட்டவர்க்கே!
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்.