"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, November 29, 2015

மரணத்தின் எல்லைகளில் வாழும் எனக்கு- உன் வாழ்வு ஓர் உந்துசக்தியே!

கானுயர்ந்த மரங்களினால் மழைநீர் பொழிவதுபோல்
வானுயர்ந்த  கோபுரங்கள் வனப்புடனே மிளிர்வதுபோல்
நாணுயர்ந்த அம்புகள்போல் நாட்டிலுள்ள தோழமையால்

தானுணர்ந்த சேவையதால் தரணியிலே வாழுகிறீர்......

கார்த்திகையின் கைவிரிப்பு - காலனையும்
கட்டி அனணத்துக் கொண்டதா?
மானுட நேசத்தின் பசுந்தளிரை
பாதியில் பிரிந்து - கால் நூற்றாண்டு ஓடினவோ?
மணியம் என்றால் மனிதம் என்றும் ;
மடமை கொண்டோர் - கண்டஞ்சும்
மாவீரன் என்றும்
மார்தட்டி கொண்டோமே!
ஆதிக்க வெறியின் கயமையை- எதிர்த்து
அஞ்சாமையின் அர்தம் சொன்னவன் - நீ !
ஒடுக்குமுறையை துவம்சம் செய்தது - வரலாறே!
இரத்தம் தோய்ந்த  வெண்கொடிக்கு -  தான்தெரியும்
வெற்றிக்கு வலிகள் தேவை என்று!
உழைப்பாளியே தேசத்தின் உந்து சக்தி
பாட்டாளியே பார் ஆளவேண்டுமென
பால்ய வயதின் - பார்வையை
தேடி படித்த நூல்களும் தூண்ட
பொதுவுடமைக்குள் ஐக்கியமானாய்!
இரும்புக்கரம் கொண்டு
துப்பாக்கிகள் - கொடும் கொலை புரிய
நிதர்சனத்தின் நிஜம் புரியாது
மந்தையாக்ப்பட்ட மனித கூட்டத்தில்
மௌனம் காப்பரண் ஆகியது!
வரலாறுகள் திரிக்கப்பட்டாலும்
உன் வாழ்வின் நேர்மை
என்றோ வரலாறாகும்!
மானிட வாழ்வியலின் உன்னதற்கான
உன் போராட்டத்தில்
நானும் எறும்பென இறும்பூதுகின்றேன்
நீளும் நினைவுகளும்
நீடிக்கும் கண்ணீருமாய் காலம் ஓட
மரணத்தின் எல்லைகளில்
வாழும் எனக்கு- உன் வாழ்வு ஓர்
உந்துசக்தியே!

வள்ளியம்மை சுப்பிரமணியம் 27 November 2015

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்