"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, April 25, 2010

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்

சிங்கையில் சித்திரையின் பூக்களும் பழங்களும்
--------------------------------------------------------------------------------------
தமிழ்மணக்கச் சிங்கையிலே நான்காண்டு முன்னர்
அமிழ்தான சித்திரைத் தமிழ்விழா தொடங்கி..........
அறிஞர்கள் பங்கெடுத்து வழிநடத்தும் செய்கையால்..........
குறிப்பாக மணக்கிறது பூக்களும், பழங்களும்.

பாலர்பள்ளி ஆடல் பாடல் விநோத உடை மல்லிகை.
உயர்நிலைப் பள்ளி சொற்களமோ இதழ்விரித்த தாமரை.
திருக்குறள் விழாவிலே திகழ்ந்தவைகள் றோசாமலர்.
மாதவி இலக்கிய மன்றத்தில் மணத்தது சாமந்திப்பூ.!

முப்பது ஆண்டுக்குப் பின்னர் தேக்காவிற்கு
மதியுரை அமைச்சர் வருகை புரிந்ததும்........
திறந்த வெளியரங்கில் வணக்கம் முழக்கம்
சிறந்தபல சொற்பொழிவு பலாப்பழத்தின் சுவைதானே!

நாளிதழின் செய்தியேடு நாவற்பழச் சுவையாம்
ஒலி 96.8 ஓங்குதமிழ் வாழைப்பழ இனிமை.
வசந்தத்தின் ஒளிபரப்பு மாதுளம் பழம்போல
கவிமாலை நிகழ்ச்சிகளோ மாம்பழத்தின் ருசியினிலே!

”அடுத்த வருடமும் சித்திரைக்குச் சிங்கைக்கு
விடுப்பு எடுத்து வரவேண்டும் விமானத்தில்.............”
ஆசிய வட்டார அயலிலுள்ள நாட்டவரின்
தேசியக் குரலாக ஒலிக்கிறது எம்காதில்.

வள்ளியம்மை சுப்பிரமணியம்.

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்