"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Saturday, November 27, 2021

தோழர் கே ஏ. சுப்பிரமணியம் அவர்களின் அஸ்தியை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட நூலகத்தின் ஆரம்ப நிகழ்வாக, கட்டிட ,தொழிலாளர்கள் கௌரவிப்பு



பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரான தோழர்  கே ஏ. சுப்பிரமணியம் அவர்களின் அஸ்தியை உள்ளடக்கி உருவாக்கப்பட்ட நூலகத்தின் ஆரம்ப நிகழ்வாக, கட்டிட ,தொழிலாளர்கள் கௌரவிப்பும்,  தோழர்களின் உரையாடல்களும்  அவரது 32 வது விடைபெற்ற நாளில் 27.11.2021 சனிக்கிழமை காலை 10.00மணி தொடக்கம் 'சத்தியமனை'  சுளிபுரத்தில்  நடைபெறவுள்ளது.     கே ஏ. சுப்பிரமணியம் ஞாபகார்த்த குழு


 இலங்கையின் இடதுசாரிய மூத்த முன்னோடிகளில் ஒருவரான தோழர் K.A.சுப்பிரமணியம் அவர்களது 32வது நினைவு நாளான(27.11.2021) இன்று அவருக்காக அமைக்கப்பட்ட "சத்திய மனை" நூலக திறப்பும், அஞ்சலி நிகழ்வும் சுழிபுரத்தில் அன்னார் வாழ்ந்து, மறைந்த இல்லத்திற்கு அருகில் இன்று காலை இடம் பெற்றது...
வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் வருகைதந்த பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் தோழர்கள் செந்தில்வேல், ரவீந்திரன். யாழ் பல்கலைக்கழக மாணவி செல்வி நிவேதா, கவிஞர் நிலா, அன்னாரின் இணையாள் வள்ளியம்மை, மகள் பபி ரவீந்திரன் உட்பட பலர் நினைவுரை ஆற்றினார்கள்..
நூலகத்தை அமைத்த கட்டுமான பணியாளர்கள் கௌரவிப்பும் இடம் பெற்றது...