"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Tuesday, October 20, 2009

என் அன்னை சிறீலங்காவுக்கு .......முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின் கதவைத் திறந்து........

என் அன்னை சிறீலங்காவுக்கு .......
---------------------------------
மக்களின் ஐக்கியம் ஒன்றேநாட்டின் பலமாக
மதபேத இனபேத பிரதேச பேதமிலா
மக்கள் மனதில் வன்முறையை விதைகாத
தக்கநீர் வளத்தைத் தரமாக உயர்த்திட
விக்கினம் இல்லாத விவசாயம் மேம்பட
தரணிசூழ் உப்புநீர் ந்ன்னீராய் மாற்றிட
அறிஞர் பலரின் ஆலோசனை பெற்றால்
அனைத்து மாகாணங்களும் செழிப்புடன் வளருமே!



எண்ணிக்கையில் குறைவான இனத்திலே உதித்துக்
கண்ணியமாகக் கடமைகள் ஆற்றிய நாதன்....
நண்ணியே அவரை நாட்டின் தலைவனாய்ப்
பண்ணிய சிங்கையைப் பார்த்தே மகிழ்வாய்
மண்ணின் அளவில் சிறிதாக இருந்தாலும்
திண்ணமான சாதனைத் திறமைகள் மிளிரும்
விண்ணுலகம் என்பது மானிடர் வாழ்கின்ற
மண்ணில் தானன்றோ மலர்ந்து சிரிக்குது!

‘தம்மபதம்’ கூறுகிற புத்தரின் தத்துவச்
செம்மை நெறியினைச் சிரமேற் கொண்டு
வன்முறை ஒழித்து வரண்ட நிலங்களை
நன்செய் நிலமாக்க இதயச் சுத்தியுடன்
நம்மை நன்னெறியில் செம்மையாய்ப் பயிற்றிட
உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க
இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால்
அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள்!


போட்டி பொறாமை மன உழைச்சல் இல்லாத
வாட்டி வதைக்கும் வன்முறை அற்ற
ஆட்டிப் படைக்கும் அகந்தை ஒழிய ஆன்றோர்
காட்டிய வழியில் கருணை நெறியில்
ஈட்டிய செல்வங்கள் ஊறுபடாமல் புதுமை
காட்டிடும் கட்டொழுங்கு நல்லாட்சி நிலைக்க
தீட்டிடும் புத்தியைத் திடமான வெற்றிக்கு
ஊட்டுவோம் பலத்தைப் புதிய சந்ததிக்கே!

ஆசிய வட்டார நாடுகளில் தங்கி
பேசிடும் இன மத நல்லிணக்க மகிமையை
ஊசிமுனையில் உள்நுழைந்து வேரோடி
ஊடறுக்கும் பூசல்களை முளையிலே கிள்ளி
பேசிடும் ஒற்றுமை, சமாதானம் காத்து
பொறுப்புடன் நாட்டை நிர்வகிப்பதிலே
மாசில்லாத் திறனாளரை வருக’வென வரவேற்று
மாட்சிமையாய் ஆட்சியை மனதாரப் போற்றுவோம்!


ஆதியில் நாட்டில் இருந்தது போலவே
சாதிசமயப் பூசல்கள் இல்லாச் சகோதர
நீதிவழுவா நெறிமுறை பூண்ட புதுமையொன்று
மேதினியில் மீண்டும் வரவேண்டும் கட்டாயம்
மானிடத்தைப் பேணுகிற மனித விழுமியங்கள்
கானகத்தில் காய்ந்த நிலவாகப் போகாமல்
தானெடுத்துச் செல்லத் தராதரம் பெற்ற
நானிலமாம் இலங்கைக்கு இணையான நாடுமுண்டோ?.


முதலில் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய மக்களின்
கதவைத் திறந்து தொழில்நுட்பம் பலவளர
நிதமும் நெடுஞ்சாலைப் போக்கு வரத்துகளும்
மிதமாக வடிவமைத்தால் மெச்சிடும் உலகமெலாம்
குதமாகப் பயிர் வளரும் குடிநீரும் கிடைத்துவிடும்
உதவாது என்று கைவிட்ட ஓரங்குலப்
பதமான நிலமும் பயன்பாட்டைக் காட்டுகையில்
இதமான இலங்கைக்கு இணையாக நாடுமுண்டோ?

வள்ளியம்மை சுப்பிரமணியம்.சிங்கப்பூர்.

Tuesday, October 13, 2009

நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்! ...சிங்கைக் கவிச்சோலை 11 10 2009

மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
 புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
     அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
     நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?



    இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
    களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
    சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
    நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.

    கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
    முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
    வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
    நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!



சிங்கைக் கடற்கரைக் கவிமாலை 11 10 2009


  மனிதரும் விலங்கினமும் மாநிலத்துப் பறவைகளும்
     புனிதமான நிழலால் புத்துண்ர்ச்சி பெற்றிடவே
     அழியாக் கருணையுடன் ஆறுதல் அளித்தமரம்
     நிழல்தேடும் மரமாக நிலைதடு மாறியதேன்?

    இளமை உறுதியுடன் இமைப்பொழுதும் கலங்காமல்
    களைப்பை உணரவில்லை கடுமையான வெய்யிலிலும்...
    சுழற்காற்றுத் தாக்கிக் கிளைமுறிந்து..முதிர்வயதில்..
    நிழல்தேடும் மரமொன்று நிம்மதிக்கு யாசிக்குது.

    கட்புலனும் கைகாலும் கறுத்துச் சிறுத்தாலும்
    முட்கம்பி அடைப்புக்குள் முடங்கிக் கிடக்கும்..
    வழிபிறக்கும் நம்பிக்கையில் வாசலை நோக்கியபடி
    நிழல்தேடும் மரமாக நிலவுரிமைப் பிறப்புக்கள்!

           
           வள்ளியம்மை சுப்பிரமணியம். 07 Oct 2009       

Wednesday, October 7, 2009

Letter written on 7 October 2009 in Sinhala to His Excellency the President of Sri Lanka


 For the benefit of the readers, this letter was written on 7 October 2009.                                                                         Blk 101 #04-07, Tampines St 11
                                                                                                             Singapore 521101

கனம்,
பெருமதிப்புக்கு உரிய ஜனாதிபதி அவர்கட்கு,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம்
சிறீலங்கா

           வணக்கம்! ”ஆயுபோவன்”!!

இன்று 07/10/2009 எனக்கு 71 வயது.எமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்றும் அதற்குரிய ஆளுமையுடைய உங்கள் சுதந்திரக்
கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டுமெனவும் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய
கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை
இழந்த தாயாகவும் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.

எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம்
வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம்
மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர அவரவர் சொந்த இடங்களுக்கு போக வேண்டும்.அல்லது பாடசாலை
கட்டடங்களில் மாரி அடைமழைக்கு முன்பாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

ஒரு உண்மையான இலங்கை பிரசையாக உங்களிடம் உறுதியாகக் கூறுகின்றேன், இன்று மீதமாக உள்ள அனைவரும்
அடக்கி ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்களே.அவர்களின் கதவைத் திறப்பதன் மூலம் நெடுஞ்சாலைகளும்
குளங்களும் அமைக்க முடியும்.

வரண்ட நிலங்களை நன்செய் நிலமாக்க, இதயச் சுத்தியுடன் நன்னெறியில் மக்களை
செம்மையாய்ப் பயிற்றிட, உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால் அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள், அதற்கு உலக
நாடுகள் உதவ வேண்டுமென உறுதிபட சிங்கப்பூர் TV எதிரொலியில் May 2009இல் கூறினேன்.

இக்கடிதத்தை அவதானத்துடன் வாசித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!
இங்ஙனம்
தங்கள் உண்மையுள்ள
வள்ளியம்மை சுப்பிரமணியம்.

”சீலமும் காட்சியும் நிறைந்தவர், தருமத்தில் நிலைத்தவர், வாய்மைகளை உணர்ந்தவர், தன் கடமைகளைச் செய்பவர்,
இவர்களையே மக்கள் போற்றுவர்.” (தம்மபதம் 217)

மகிழ்வாரே சந்திராவும்.




மகிழ்வாரே சந்திராவும்.
          ...............
  
வீட்டுக்குள்ளே முடங்கி விரக்தி மனதுடனே
    பாட்டெழுதும் பக்குவமும் பதுங்கி மறைந்ததாலே
  நாட்டுக்கும் பயனின்றி நானேன் இவ்வுலகில்....
    ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதென...
  பூட்டிய வாசல்திறந்து பூவாங்கப் போனபோது
    வாட்டிடும் துயரம் போக்கும் வனிதாமணி ஒருவர்
  தீட்டிய வார்த்தை கேட்டுத் திடமொன்று மனதுள்வர
   ஊட்டிய தெம்பினாலே உள்ளூரச் சிந்தித்தேனே!



  ஆசிரியப் பணியினூடே அயராமல் சமூகப்பணி
   ஆங்கிலம், தமிழ், மலாய் அனைத்திலும் தேர்ந்தமங்கை
  ஊசிமுனைத் தராசுபோல நீதிநிறை நங்கை
 ”  பேசுகின்ற வார்த்தையிலே பெருகும் தமிழ்ப்பங்கை
  பாசமுடன் எழுதுங்க பையனின் தாள்களிவை”
   வீசிடும் தென்றலாக விளம்பினார் என்முன்னாலே
  நேசமுடன் அவர்துணையால் நிரூபணம் கிட்டியது
   கூசிநின்ற நாட்கள் குறைந்து மறைந்தனவே!

  வேண்டுவோர் உதவிகளை விரைந்துநல்கும் நாவரசி
   பூண்டு மகிழ்வீரெனப் புத்தாடை தந்த பூவரசி
  ஆண்டகை சிவராமகிருஸ்ணன் அகத்தின் மாதரசி
   காண்பவர் போற்றுகின்ற அர்விந்தின் தாயரசி
  நீண்டநாள் நீர்வாழ்ந்து சேவையிலே சீரரசி..
   வேண்டுகிறேன் தாயொருவர் உனக்கு அன்பரசி
 தூண்டுகோல் போலிருந்து திரிஒளிரச் செய்தராசி
   மாண்புறு மனத்தாலே மகிழ்வாரே சந்திரா.சி.

Sunday, October 4, 2009

அதுமட்டும் வேண்டாம்........வள்ளியம்மை சுப்பிரமணியம்

அதுமட்டும் வேண்டாம்
.....................
பங்கமில்லாது பாடுபட்டு உழைத்த பணத்தையும்
த்ங்கமான உடம்பையும் தொலைத்துச் சிதைக்க
மங்கலான செவ்விளக்கு மரணப் பகுதியா...?
அங்குசென்று கெட்டழிய.. அதுமட்டும் வேண்டாம்!

கட்டுப் பாடாகக் காத்திடும் ஆட்சியில்
திட்டம் இட்டுப்பல திருட்டு வழிகளிலே..
காவல்துறையின் கைகளிலே சிக்கி வதைபட
போதைப்பொருளா..? அதுமட்டும் வேண்டாம்!

இனபேத மதபேத மொழிபேதம் இல்லாத
சனங்களின் மனதிலே சாக்கடை அழுக்காய்..
பையவே உள்நுழையும் பயங்கர வாதமா..?
ஐயகோ!மக்களுக்கு அதுமட்டும் வேண்டாம்!

----------------------------
வள்ளியம்மை சுப்பிரமணியம்.