"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, June 21, 2010

மெல்பேர்ண் மணியின் -- கவிதைப் பூங்கா

மெல்பேர்ண் மணியின் -- கவிதைப் பூங்கா
------------------------------------------------------------------------------
கண்டேன் ’மெல்பேர்ண்மணி’ கவிதைப் பூங்காவை
கொண்டேன் மனவுறுதி ஒரேமூச்சில் படிக்கவென..........
உண்டேன் தமிழ்ப்பழப் பஞ்சாமிர்தக் கலவையதை
விண்டேன் விழுமியப் பொருளுணர்ந்து கொண்டேன்.

தெய்வ வழிபாடுகள் தீம்பாலிற் சர்க்கரைபோல்..........
உய்யும் வாழ்வுநெறி உயர்வுக்கு வழிகாட்டல்
எய்யும் அம்புகூட எதிரிக்கும் நோய்தீர்க்கும்
வையத்துள் செம்மைவழி வார்த்தைகளிற் தொக்கிநிற்கும்.

மண்வாசனை சொல்கிறது மனமகிழ்வைக் காட்டி.........
எண்ணத்தில் சிலிர்ப்பு !....தெம்பினை ஊட்டி......
பள்ளத்தை நோக்கிய பாசவெள்ளம் கூட்டி.....
அள்ள அள்ளப் பெருக்கெடுக்கும் செந்தமிழ்ப் பாட்டி ..(து)

தாயக நினைவுகளைத் தாங்கிநிற்கும் தாயே!
நீயகலாதே!..கவிச்சுரங்கம் பெற்றெடுத்த சேயே!
நாயகி மெல்பேர்ண் நகரினிலே பெண்ணின
காயகற்றும் சதுரங்க சகலகலா வல்லிநீயே!

வள்ளியம்மை சுப்பிரமணியம்.
சிங்கப்பூர்.