"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, December 6, 2010

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

கருத்தில் ஒருமித்த தோழர் சோ. தேவராஜா   

காலத்தால் அழியாத எண்ணங்கள்.........

நன்றி : பகீரதன் அழகரத்தினம்

Wednesday, December 1, 2010

கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் மூன்று நூல்கள்-வள்ளியம்மை சுப்பிரமணியம்


கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின்  மூன்று நூல்கள்


எங்கள் கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் 

(1) பூக்கள் உடையும் ஓசை
                                                                                           
(2)பூட்டுகள்
                                                                                           
(3) புலமைக்கு மரியாதை  
   
ஆகிய மூன்று நூல்களைப் பற்றிய இந்தத் தாயின் கணிப்பீட்டினைச் சிலவரிகளில் கூறுவதற்கும்,அதனை அனைவரும் செவிமடுப்பதற்கும் முதலில் அனுமதி பெற்றுக் கொள்ளுகின்றேன்.
(1)பூக்கள் உடையும் ஓசை;........பண்டிதர் முதல் பாமரர் வரை மிக இலகுவாக வாசித்து கருத்தினை ஏற்றுக்கொண்டு நடைமுறை
சாத்தியமான ”வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்களை கொண்டிருக்கிறது” என்று வியப்பர்.
(2) பூட்டுகள்:---------ஒரு தடவை வாசித்து விட்டு, திரும்பவும் ஒருமுறை வாசித்து......ஓகோ! இவ்வளவு கருத்துக்கள் இதற்குள் இருக்கிறதே! என்று வியக்க வைப்பதுடன் ( சிரிக்கவேண்டாம் ) இனிப்பு நீர் உள்ளவர்கள் ....அதிகம் உண்ணலாமா? என்று சிந்திக்க வைக்கும் மாம்பழச் சுவையை கொண்டது.
(3) புலமைக்கு மரியாதை :--------இது பலாப்பழத்தின் சுவையைக் கொண்டது. உடனே சாப்பிடமுடியாது. பழத்தை வெட்டி.....கட்டுக்குலையவிடாமல் காக்கும் வரப்பினைக் கடந்து....பாதுகாக்கும் ( வைக்கோல் போன்ற) நார்களை அகற்றி.....அப்பொழுதும்
சாப்பிடமுடியாது....உள்ளேயிருக்கும் விதைகளைப் பத்திரமாகப் பிரித்தெடுத்து (ஏனெனில்  அவை வம்சவிருத்தி செய்பவை) ...அதன் பின்னர் தான் உண்ணவேண்டும். இந்நூலினை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்து மறந்து போன ப்ற்பல அறிஞர்களின்
படைப்புக்கள் கண்முன் வரக்கிடைக்கிறது.அக்காலத்திலிருந்து-- இக்காலம்வரை இராமாயணம்....மகன் இறந்தபோது தாயின் நிலை, பாரதம்
-----பாஞ்சாலி சபதம், சிலப்பதிகாரம்,நற்றிணை,குறிஞ்சித்திணை....பெருவழுதியார்,பிசிராந்தையார், வீரமாமுனிவர்,தேவநேயப் பாவாணர்,
பாரதியார், பாரதிதாசன்,ந்ம்முடன் வாழும் கவிப்பேரரசு. வைரமுத்து வரை எடுத்துக் கூறி மரியாதை செலுத்தியது புதுமையானதே!
 மொத்தத்தில் முக்கனிகளையும் அதன் சுவைகளையும் ஒரே நேரத்தில் கொடுத்த கவிதை ந. வீ. விசயபாரதிக்கு ஒரு  கவிதை:--
         கொஞ்சமும் அலுப்பின்றி குதூகலமாய் வாசிக்க...
         துஞ்சாமல் கண்விழித்துத் தூயதமிழ் தந்தவரே!
         பஞ்சாமிர்தம் செய்ய முக்கனிகள் அவசியமே....
         எஞ்சிய காலங்கள் எல்லாமே ஏற்றந்தான்!..........................அன்புடன்........அம்மா.


 தாய் மடியில்  தலை சாய்த்து சொர்க்கம் காணும் சுகம் போல அன்னை உங்கள் விமர்சன வாழ்த்தில் ஆன்மா நெகிழ்ந்தேன்;
 பட்டறிவு மிக்க உங்கள் விமர்சனத்தில் பாசத்தின் விகிதம் கொஞ்சம் கூடுதலாகவே தொனித்தது. இந்தத் தாய்மை
அன்புக்கும் தமிழாய்ந்த விமர்சனத்துக்கும் என்றும் என் நன்றிகளைக் காலத்தாற்காட்டுவேன்.
                                                                                                                    என்றும் உங்கள் பாசமகன் 
                                                                                                                     ந.வீ.விசயபாரதி   

Tuesday, November 30, 2010

பண்டத்தெருப்பு சாந்தைத் தலைவர் தோழர் பொ. துரைராசா (பாவைக்கிளி)







பண்டத்தெருப்பு சாந்தைத் தலைவர் தோழர் பொ. துரைராசா
18-05-1946 (பாவைக்கிளி) 30-11-2010

யாழ்ப்பாணத்தில் சாதி எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்று இருந்த 1970களின் கால கட்டத்தில் நடந்த அப்போராட்டத்தில் கலந்து கொண்ட முன்களப் போராளி
பண்டத்தெருப்பு சாந்தைத் தோழர் வை. இராசையாவின் "பேப்பர் மாமா" கே. ஏ. சுப்பிரமணியம் பாடல்
















 

Saturday, November 27, 2010

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்…!!!

தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்…!!!



தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத் தயார் என சி.கா செந்திவேல் ரிபிசியில் தெரிவித்துள்ளார்.

பொதுவான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் அரங்கம் முன் வைக்குமானால் அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியிருக்குமானல் கட்சியில் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று ஆதரிக்கத் தயார் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா செந்திவேல் தெரிவித்தார்

இன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தங்களின் சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சுயநலன்களுக்காகவும் எனவும் தெரிவித்த அவர்  புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளவே எனவும் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் கூட தொழிளார்களின் உரிமைப் பிரகடணத்தை  செய்யவில்லை எனவும் அதேபோல மேற்குலக முதலாளித்துவத்திற்கு எதிரான போக்குகளைக் கொண்டிருப்பதாக கூறினாலும் அதில் எவ்வித நேர்மையும் இல்லை  எனவும் குறிப்பிட்டார்

புலியின் முக்கிய உறுப்பினர்களை விடுதலை செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் இந்த அரசாங்கம் அவசரகாலசட்டம் பயங்கரவாதசட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகள் குறிப்பாக ஜம்பதுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தொடர்பாக  எந்தவித சட்ட நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை எனவும் குற்றசாட்டிய அவர் அவர்களுக்காக தமது கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.வேட்டியைக் கட்டிக் கொண்டு திருநீறை பூசிக்கொண்டு செல்வது அல்ல எனவும் மாற்றுக் கருத்துடைவர்களுடைய கருத்தினை அங்கீகரித்து சமூகங்களுக்கிடையே நட்பு உறவை ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் தற்போது மிகமோசமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார அழிவினை நிறுத்த முடியும் எனவும். சி.கா செந்திவேல்; குறிப்பிட்டார்.

அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைகுழுவானது  ஒரு மாயையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது எனவும் அதேபோன்றே ஜ.நாவினால் உருவாக்கப்பட்ட விசாராணை குழுவும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கலாமே தவிர வேறு ஏதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.

இன்று சீன அரசாங்கம் உண்மையான சோசலிச நெறிமுறைகளைப் பின் பற்றவில்லை என்பதை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன எனவும் சீனாவில் தீடீர் என ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அது உலகச்சந்தையை நோக்கி சென்றமையே அடிப்படைக்காரணம் என்றும் அதே போன்றே இந்தியாவில் உள்ள மாக்சிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாரளுமன்ற அரசியல் நோக்கி தங்களின்  நடைமுறையை மேற்கொண்டுள்ளதாகவும் இவை பாட்டளி மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார்.

வியாழக்கிழமை இரண்டரை மணியத்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொது செயலாளார் சி.கா செந்திவேல் மற்றும் ரிபிசி அரசியல் ஆய்வாளர்களான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜெகநாதன் பணிப்பாளர் வீ.இராமராஜ் மற்றும் தோழர் ஜெயபாலனுடன் பல நேயர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

 நன்றி : அலெக்ஸ் இரவி
பிற்குறிப்பு
கடந்த கால தவறுகளை மறந்து தமிழ் தலைமைகள் இணைந்து கொள்ள சந்தற்பம் வாய்த்துள்ளது, "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்பது போல ஒற்றுமையே பலம் என உரத்துக் குரல் கொடுக்கும் நேரம் இப்போதாவது கனிந்துள்ளதே! -வள்ளியம்மை சுப்பிரமணியம்

Friday, November 26, 2010

கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை


கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினம் 28-11-2010 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு தேசிய கலை இலக்கிய பேரவை தலைமைப்பணிமனை மண்டபத்தில்  நடைபெறவுள்ளது.

K.A.Subramaniam's 21th Anniversary Memorial Lecture will be held at 5pm 
on Sunday 28 November 2010
Venue: 571/15 Galle Road Colombo 06, Sri Lanka

குறிப்பு: தேசிய கலை இலக்கியப் பேரவையின் தலைமைப் பணிமனையானது Roxy திரையரங்கிற்கு முன்னால், Cherry Fish கடையை அண்டிய ஒழுங்கையினுள் அமைந்துள்ளது

மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் போராளிகளை நினைவு கூர்ந்து........27 கார்த்திகை 2010


  மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் மரணித்த அனைத்து இயக்கப் 
போராளிகளை  நினைவு கூர்ந்து........
"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!"  

வள்ளியம்மை சுப்பிரமணியம் http://sathiamanai.blogspot.com/


Wednesday, November 10, 2010

மணல் வீடு - வள்ளியம்மை சுப்பிரமணியம்



மணல் வீடு
--------------------
 
சீமான்கள் வாழ்வைச் சிந்தையிலே நிறுத்தி
தாமுமவர் போலத் தகுதியெனக் காட்ட...
 
கடன்பற்று அட்டை கைகொடுக்கும் என்று...
உடன்செலவு , உதவாத ஊதாரித் தனத்தினால்.....
 
அத்திவாரம் பலமான ஆணித்தரக் கட்டிடத்தை
மொத்தமாகச் சுனாமி, சூறாவளி தாக்குமெனில்....
 
உழைப்பற்ற பொருளாதார ஊசலாடும் மனிதனுக்கு
மழைநீர் பொழிந்தபின் மணல்வீடு நிலைதான்!.
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்

Sunday, October 31, 2010

கற்றுத் தரும் காடு-வள்ளியம்மை சுப்பிரமணியம்

கற்றுத் தரும் காடு



---------------------------------


உரமின்றி நீரின்றி ஊன்றுகோல் தழுவாமல்


வரமாக மனிதருக்கு வளத்தை வழங்குவதால்


வற்றாத ஈகைக்குணம் வானுயர்ந்த மரங்கள்......


கற்றுத் தரும்காடு காட்டுதே தன்செயலால்.






நிலத்தடித் தண்ணீரை வேர்களால் உறிஞ்சி.....


பலமாகத் திடமாகப் பசுமையாய் உயர்ந்து....


மழைநீரைப் பூமிக்கு வருவிக்கும் தொழிலால்...


பிழையின்றிச் செய்கின்ற பேருதவி ஒன்றினால்....






நப்பாசை சிறிதுமின்றி நலங்கருதாப் பெற்றோர்


பிற்காலத்துத் தங்களது எதிர்பார்ப்பு இன்றி.....


தப்பாது கடமைகளை தாமதியாது செய்கின்றார்


எப்போதும் கற்றுத் தரும்காடு அறிவுரைகள்!


வள்ளியம்மை சுப்பிரமணியம்

Monday, October 25, 2010

மரண அறிவித்தல் : திருமதி சின்னத்தம்பு சிவனேசம் காலமானார்

மரண அறிவித்தல் :  திருமதி சின்னத்தம்பு சிவனேசம் காலமானார் 

அன்னார் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அம்பலப்பிள்ளை  தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரியும் அமரர்களான தங்கமணி,  நடராசா,  மனோன்மணி,   கே.ஏ சுப்பிரமணியம், இலங்கைநாயகம்(J.P) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 

Sunday, October 10, 2010

முட்டை கவிதை- எனது சின்னப்பேரன்

முட்டை கவிதை-எனது சின்னப்பேரன்




காலையில் தோன்றும் மணம் நீ தான்
நித்திரையிலும் உன்னை பற்றி நினைத்தால் என் வாய் ஊறும்
நீதான் என் முட்டை
மஞ்சள் வண்ணத்தில் நீ இருப்பாய்
ஆனால் சாப்பிட்டுவிட்டால் என் மகிழ்ச்சி போய் விடும்
நவராத்திரியில் நான் உன்னை காண மாட்டேன்
ஆனால் நான் சோகம் அடைய மாட்டேன்.

Monday, October 4, 2010

பகலில் தோன்றும் நிலவு.........வள்ளியம்மை சுப்பிரமணியம்


பகலில் தோன்றும் நிலவு
--------------------------------------------
அதிகாலை வேளையிலே அழகாய்க்கண் விழித்தபின்னே
குதிக்காலில் நின்றுகொண்டு “தூக்கு”என்று கையசைப்பாய்!
உன்னைத் தொடும்போது  உள்ளம் குளிர்கிறது.
மென்மைப் பரிசத்தால் மேனியெலாம் சிலிர்க்கிறது.
கவிபாடும் புலவர்கட்கு கற்பனையை வளர்க்கின்றாய்--கைகளான
கருமேகம் மறைத்தபின்பு கண்ணாமூஞ்சி காட்டுகின்றாய்!
புலர்கின்ற விடிபொழுதின் புதுமையான வெண்ணிலவே!
மலர்ந்தும் மலராத பாதிமலராகக் கண்திறந்தாய்!
அகலாது இருக்கின்ற அருமையான பேரக்குஞ்சே!----என்னைத்தொடும்
பகலில் தோன்றும் நிலவு பாருலகில் வேறுஏது?
 
வள்ளியம்மை சுப்பிரமணியம்
07/10/2010 அன்று எனக்கு 72 வயது

Sunday, October 3, 2010

மரண அறிவித்தல் : அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ மனைவி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தாயார் இன்று அதிகாலை காலமானார்.

மரண அறிவித்தல் :  அனைவரினதும் மதிப்பிற்குரிய சிங்கப்பூர் மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ மனைவி, சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தாயார் இன்று அதிகாலை காலமானார்.

*என்னருகே நீ இருந்தால்........! வள்ளியம்மை சுப்பிரமணியம்

*என்னருகே நீ இருந்தால்........!
--------------------------------------------
தாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.
    தாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....!
வாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்
    ஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்
நோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........!
     சாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்
தோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்
     தேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.
 
காரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்
    சூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்
பேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......
    நீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....
பாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...
   சீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....
வேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்
வேராக நீயிருந்து வீரம் தந்தாய்! 
 
அந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்
  குன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்
என்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...
   என்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...?
உன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான
   பொன்மொழிகள்,கவிதைகள், போற்றும் தியானங்கள்....
என்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....
    என்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே!
 
*இம் மாதம் 13-09-2010   திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை
2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு
ஊற்றாகியது. சிங்கப்பூர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.

நான் ஓய்வெடுத்தால், வேகமாகச் சரிந்துவிடுவேன்: மதியுரை அமைச்சர்லீ குவான் இயூ

“சரி, எப்போது கடைசி இலை விழப் போகிறது?” என்று கேட்டார் சிங்கப்பூரைத் தனது சொந்தக் கண்டிப்பான, உணர்ச்சிவச மற்ற பாணியில் உருவாக்கிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ.
“உரமும் தெம்பும் படிப்படியாகக் குன்று வதை என்னால் உணரமுடிகிறது” என்றார் 87வது பிறந்தநாளை நெருங்கிக் கொண் டிருக்கும் திரு லீ.
இவரது “சிங்கப்பூர் பாணி” பொருளியல் வளர்ச்சியும் கண்டிப்பான சமூகக் கட்டுப் பாடும், ஆசிய வட்டாரத்தின் மிகவும் செல் வாக்குமிக்க அரசியல் தலைவர்களில் ஒருவ ரென இவருக்குப் பெயர் பெற்றுத் தந்தன.
“பொதுவாக, ஒவ்வோர் ஆண்டும், முந்திய ஆண்டிலிருந்த அதே நிலை இப்போது இல்லையென்ற உணர்வு எழுவதைப் பற்றிச் சொல்கிறேன். ஆனால் அதுதான் வாழ்க்கை” என்றார் அவர்.
சென்ற வாரம் அளித்த நீண்டநேரப் பேட்டியில், வயோதிகத்தின் வலிகளும் வேதனைகளும், தியானத்தில் கிடைக்கும் மனநிம்மதி, வளம் குன்றிய தீவைச் செழிப் பான நாடாக உருவாக்க நடத்திய போராட் டம், அடுத்த தலைமுறையினர் தனது சாதனைகளை மெத்தனமாகக் கருதி, அவற்றைக் கைநழுவிச் செல்ல விட்டுவிடு வார்களோ என்ற அக்கறை ஆகியவை பற்றி திரு லீ பேசினார்.
தனது அலுவலகத்தில் பேட்டியளித்த திரு லீயின் தோற்றத்தில் வயோதிகம் வெளிப்பட்டபோதிலும், அவரது சிந்தனை யாற்றல் கூர்மையாகவே இருந்தது.
ஆனால், 61 ஆண்டுகளாகத் தனக்கு துணை நிற்கும் தனது மனைவி, அடுத் தடுத்து தாக்கிய வாதங்களால் படுத்த படுக்கையாகி, வாய்ப்பேச முடியாமல் நோயுற்றிருப்பதால் தனது வாழ்க்கையே இருண்டுவிட்டதாக அவர் சொன்னார்.
“நான் சுறுசுறுப்பாக ஏதாவது செய்து கொண்டே இருக்க முயல்கிறேன். ஆனால், இடையிடையில் நாங்கள் சேர்ந்து வாழ்ந்த மகிழ்ச்சியான நாட்களை நினைக்கத் தொடங்கிவிடுவேன்” என்றார் திரு லீ.
“எனக்கு நானே எவ்வாறு ஆறுதலளிப் பது? வாழ்க்கை இப்படித்தான் எனக்கு சொல்லிக் கொள்வேன்” என்றார் அவர்.
“அடுத்தது என்னவென்பது எனக்குத் தெரியாது. யாரும் திரும்பி வந்ததில்லை” என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
சிங்கப்பூர் 1965ம் ஆண்டு தோற்று விக்கப்பட்டது முதல் 1990 வரை பிரதம ராகப் பொறுப்பாற்றிய திரு லீ, அவரது வார்த்தை களில் “மூன்றாம் உலக வட்டாரத்தில் முதலாம் உலகப் பசுந்திடலை” உருவாக் கினார்.
செயல்திறனுக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் பாராட்டு பெற்ற திரு லீ, அரசியல் சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தி, அவதூறு வழக்குகளின் மூலம் எதிரிகளை அச்சுறுத்தியதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றம்சாட்டின.
இப்போது மதியுரை அமைச்சராகப் பங்காற்றும் திரு லீ, தனது மகன் பிரதமர் லீ சியன் லூங் வழிநடத்தும் அரசாங்கத்தில் சக்திமிக்க அங்கத்தினராக நீடிக்கிறார்.
அவருக்குப் பிறகு, அவர் உருவாக்கிய ஆட்சிமுறை எவ்வளவு காலம் நீடித்து நிலைக்கும் என்பதே சிங்கப்பூரில் தற்போது நிலவும் கேள்வி.
எப்போதுமே சுறுசுறுப்பாக இருக்கும் திரு லீ, நீச்சல், சைக்கிளோட்டம், தசைப்பிடிப்பு போன்றவற்றின் துணையுடனும், சிங்கப்பூரி லும் வெளிநாட்டிலும் அன்றாடக் கூட்டங்கள், உரைகள், மாநாடுகள் ஆகியவற்றில் பங்கெடுத்தும் வயோதிகத்தை எதிர்த்து வருகிறார்.
“நான் ஔய்வெடுத்தால், வேகமாகச் சரிந்து விடுவேன்” என்றார் அவர்.
“நான் 87 வயதை நெருங்குகிறேன். உடற் கட்டுடன் இருக்கவும், சுறுசுறுப்பாகத் தோன்ற வும் முயற்சி செய்கிறேன். இது பெரும் முயற்சி, ஆனால் இந்த முயற்சி தேவைதானா?” என்று கேட்டார் திரு லீ.
“துணிச்சலான வெளித்தோற்றத்துடன் திகழ என்னைப் பார்த்து நானே சிரித்துக் கொள்வேன். இது எனக்குப் பழக்கமாகி விட்டது. நான் எப்படியோ தொடர்ந்து இயங்குகிறேன்” என்று குறிப்பிட்டார் திரு லீ.
ஒவ்வொரு நாள் முடிவிலும் தனது மிகவும் வருத்தமான தருணத்தை எதிர்நோக்குவதாக அவர் சொன்னார். ஈராண்டுகளுக்கும் மே லாக நடமாடவோ பேசவோ முடியாமல் படுத்த படுக்கையாக இருக்கும் தனது 89 வயது மனைவி குவா கியோக் ச்சூவின் படுக்கை அருகில் அவர் அமர்ந்திருக்கும் தருணம் அது.
லண்டனில் இருவரும் சட்டக்கல்லூரி மாணவர்களாகப் படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து, திரு லீக்குப் பக்க பலமாகவும் ஆலொசகராகவும், நம்பிக்கைக்குப் பாத்திரமானவராகவும் இருந்து வந்தவர் திருமதி லீ.
“நான் அவரிடம் பேசுவது அவருக்குப் புரிகிறது. ஒவ்வொரு நாள் இரவும் அவரிடம் பேசுவேன். எனக்காக அவர் தூங்காமல் காத்திருப்பார்; அன்றைய எனது அலுவல் களைப் பற்றி அவரிடம் சொல்வேன், அவருக்குப் பிடித்த கவிதைகளை வாசித்துக் காட்டு வேன்” என்றார் திரு லீ.
ஒரு பெரிய தாளை எடுத்து, தனது வாசிப்புப் பட்டியலைக் காட்டினார் திரு லீ. ஜேன் ஆஸ்டின், ருட்யார்ட் கிப்லிங், லூயிஸ் கேரல் எழுதிய நூல்களையும் ஷேக்ஸ்பியரின் வரிகளையும் அவர் வாசிப்பார்.
அண்மையில், கிறிஸ்துவத் திருமண உறுதிமொழிகளைப் படித்துப்பார்த்தபோது, சில வரிகள் தன்னைக் கவர்ந்ததாகச் சொன் னார். “நோயிலும் ஆரோக்கியத்திலும், இன்பத்திலும் துன்பத்திலும், மரணம் நம்மைப் பிரிக்கும்வரை நேசித்து, துணையிருந்து, பேணிக் காப்பேன்” என்பது அவ்வாசகம்.
“என்னால் முடிந்தவரை உனக்குத் துணையிருக்க முயல்வேன்” என்று அவரிடம் சொன்னேன். இதுதான் வாழ்க்கை.
அவரும் புரிந்துகொண்டார்” என்றார் திரு லீ. ஆனால், “முதலில் போகப் போவது யார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இரவில், மனைவி படும் வேதனையின் ஒலி பக்கத்து அறையிலிருந்து கேட்கும்போது, கிறிஸ்துவ நண்பர் சொல்லித்தந்த மந்திர த்தை உச்சரித்து 20 நிமிடங்கள் தியானம் செய்வார்: “மா-ரா-நா-தா”.
“என்னிடம் வா, ஏசுநாதரே” என்பது இதன் அர்த்தம் என்று கேள்விப்பட்டதாகச் சொன் னார் திரு லீ. இறை நம்பிக்கை இல்லா விட்டாலும், மந்திரத்தின் ஔசை அவருக்குச் சாந்தமளிக்கிறது.
“குரங்கைப் போன்ற எண்ணம் அங்கு மிங்கும் அலைபாயாமல் தடுத்து வைத்திருப்பதுதான் பிரச்னை” என்றார் அவர்.
“ஒருவகை சாந்தம் மனதில் குடிகொள்ளும். அன்றாட நெருக்குதல்களும் கவலைகளும் நீங்கும். அதன்பிறகு பிரச்சினையின்றி தூக்கம் வரும்” என்றார் திரு லீ.
மனைவியின் நோய் இடைவிடாத உளைச்சல் தருவதாகச் சொன்னார் திரு லீ. இத்தனை ஆண்டுகள் அரசியலில் எதிர்நோக்கிய உளைச்சல்களைவிட இதுவே அவருக்கு அதிக சிரமமாக இருக்கிறது.
தனது வாழ்க்கையை நினைவுகூர்கையில், 1965ம் ஆண்டு மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் வெளியேற்றப்பட்டபோது, பகிரங்கமாகக் கண்கலங்கிய தருணத்தை அவர் பலமுறை குறிப்பிட்டார்.
அந்தச் சோதனைக்காலம் ஏற்படுத்திய சவாலே அவரது வாழ்க்கையை நிர்ணயித் தது. நிலையான, செழிப்பான நாட்டின் உருவாக்கத்திற்கு இட்டுச் சென்றது. சீனர், மலாய்க்காரர், இந்தியர் உள்ளடங்கிய மக்களிடையில் பூசல் நேராமல் காக்கச் செய்தது.
“ஒரு நாட்டுக்குரிய அடிப்படை அம்சங் கள் எங்களிடம் இல்லை. அதாவது ஔரின மக்கள், பொதுவான மொழி, பொதுவான கலாசாரம், பொதுவான வருங்காலம் போன்றவை” என்று இன்டர்நேஷனல் ஹெரல்டு ட்ரிபியூன் பத்திரிகைக்கு மூன் றாண்டுகளுக்கு முன் அளித்த பேட்டியில் திரு லீ குறிப்பிட்டிருந்தார்.
நவீன சிங்கப்பூரில் பாதுகாப்பான நல்வாழ்வை அனுபவிக்கும் இளையர்கள், மேலும் வெளிப்படையான அரசியலும் சுதந்திரக் கருத்துப் பரிமாற்றமும் கோருவது இவருக்குக் கவலையளிக்கிறது.
“இது இயற்கையாக ஏற்பட்ட சூழ்நிலை என்றும், இதில் உரிமையெடுக்கலாம் என் றும் அவர்கள் நம்பத் தொடங்கிவிட்டனர். தானியக்க முறையில் இதை இயக்கலாம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் இது என்றுமே உண்மை யல்ல என்பது எனக்குத் தெரியும்” என்றார் திரு லீ.
அவர்கள் கேட்கும் வெளிப்படையான அரசியல் போராட்டம் கண்டிப்பாக இனச் சார்பு அரசியலுக்கு இட்டுச் செல்லும். இதனால் “நமது சமூகத்தில் பிரிவினை ஏற்படும்” என்று திரு லீ சுட்டிக்காட்டினார்.
திரு லீ தனது எதிரிகள்மீது பல அவதூறு வழக்குகள் தொடுத்திருக்கிறார்.
ஆனால், தனது நற்பெயரைக் காக்க இந்த வழக்குகள் அவசியம் என்று அவர் கூறினார். சிங்கப்பூருக்கு “வந்து செல்லும்” மேற்கத்திய செய்தியாளர்கள் கூறும் குறைகள் “முற்றிலும் குப்பை” என்றார் அவர்.
எது எப்படி இருந்தாலும், இந்தச் செய்தி யாளர்களோ அல்லது அவர்கள் எழுதும் இரங்கல் செய்திகளோ தனது செயல்களுக் கான இறுதித் தீர்ப்பாக அமையப் போவதில்லை என்றும், அவற்றை ஆராயும் வருங்காலக் கல்விமான்களே இறுதித் தீர்ப்பளிப்பார்கள் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
“நான் செய்ததெல்லாம் சரி என்று நான் சொல்லவில்லை. ஆனால், நான் செய்த எல்லாமே மேன்மையான நோக்கம் கொண்டவை. சில விரும்பத்தகாத செயல்களையும் நான் செய்திருக்கிறேன், வழக்கு விசாரணையின்றி சிலரை அடைத்திருக்கிறேன்” என்றார் அவர்.
மரத்தின் இலைகள் விழத் தொடங்கியிருந்தாலும், லீ குவான் இயூ கதை இன்னும் முடிந்துவிடவில்லை என்று திரு லீ குறிப்பிட்டார்.
“ஒருவரின் சவப்பெட்டி மூடப்படும்வரை அவரை மதிப்பிடாதீர்கள்” என்ற சீனப் பழமொழியைக் கூறினார் திரு லீ.
“சவப்பெட்டியை மூடிவிட்டு, பிறகு தீர்மானம் செய்யுங்கள். அதன்பிறகு அவரை மதிப்பிடுங்கள். பெட்டி என்னை மூடுவதற்குள் நான் ஏதேனும் முட்டாள்தனமாகச் செய்துவிடலாம் என்றார் திரு லீ.
-

Monday, September 27, 2010

தோழமையின் தடம் நினைவு பேருரை-கனடா:- தோழர் சி.கா.செந்திவேல் (இலங்கை )

தோழமையின் தடம் நினைவு பேருரை:-  
தோழர் சி.கா.செந்திவேல்(இலங்கை ) இடம்:-Scarborough Village Rc 3600 Kingston Road/ Markham காலம்:- 02-10 -2010 சனிக்கிழமை 4.30 மணிக்கு அனைவரையும் தோழமையுடன் அழைக்கிறோம்.

தேடகம் தமிழர் வகைதுறைவள நிலையம் -கனடா
தொடர்புகளுக்கு 416 840 7335

சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராய் போராளியாய் எழுந்து தன் வாழ்நாள் முழுவதும் மானிடத்தின் முன்னேற்றத்திற்காய் உழைத்த தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர் நெல்லியடி சிவம்) அவர்களின் நினைவாய் நினைவு பேருரை.
 
 
நெல்லியடி கரவெட்டியை பிறப்பிடமாகக் கொண்ட தோழர் கணேசமூர்த்தி சிவகுமாரன் (தோழர்  சிவம்) அவர்கள், இளவயதிலேயே சமதர்ம கருத்துக்களால் உந்தப்பட்டு எம் சமூகத்தில் நிலவிய சாதிய மற்றும் சமூக அடுக்குமுறைகளுக்கு எதிராக ஒரு போராளியாக எழுந்தவர். தனது பாடசாலை நாட்களிலேயே ஏனைய முற்போக்கு மாணவர்களுடன் இணைந்து மாக்சிய மாணவர் மன்றத்தை நிறுவி சமூக மாற்றத்திற்காக போராடியவர். அவரின் பிரதிபலனற்ற செயற்பாடுகள் அனைவராலும் கவரப்பட்ட ஒன்று. 
 
பின்னர்  தேசிய கலை இலக்கியப்பேரவை, தோழர் சண்முகதாசன் தலைமையிலான இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயலாற்றியவர். 
 
நன்றி “இனியொரு

Sunday, September 26, 2010

*என்னருகே நீ இருந்தால்........! வள்ளியம்மை சுப்பிரமணியம்

*என்னருகே நீ இருந்தால்........!
--------------------------------------------
தாய்க்குப்பின் தாரமென்று சொல்லி வைத்தார்.
    தாய்போலத் துணையாளும் வாய்த்து விட்டால்.....!
வாய்ப்பாகும் இணையர்கள் வாழ்நாள் யாவும்
    ஓய்வெடுக்கும் வயோதிபமும் வந்த பின்னர்
நோயுற்றுத் தெம்பிழந்து நொந்து போனால்.........!
     சாய்ந்திருக்க உதவிசெய்தால் இளமைக் காலம்
தோய்ந்தகாதல் குன்றாமல் தொட்டு நிற்கும்
     தேய்கின்ற எலும்புகளும் தெம்பு பெறும்.
 
**காரியங்கள் யாவற்றையும் கண்மணி செய்வதால்
    சூரியன்போல் உலகைச் சுற்றி வருகிறேன்”- கவிப்
பேரரசின் கவிதையிது. நினைத்துப் பார்த்தேன்.......
    நீர்வளமோ நிலவளமோ இல்லா நாட்டை....
பாருலகில் மூன்றாம் தரத்தை.... முதல்தரமாய்...
   சீரான நிலைமைக்கு உயர்த்திக் காட்ட....
வேரற்ற பொருளாதார விளிம்பில் நின்றேன்
வேராக நீயிருந்து வீரம் தந்தாய்! 
 
அந்நாளில் அன்பொழுகச் சட்டக்கல் லூரிதனில்
  குன்றாத புரிந்துணர்வில் குதூகலமாய்க் கற்றோம்
என்னருகே நீயிருந்து ஏற்றங்கள் தந்ததற்கு...
   என்னதவம் செய்தேனோ இங்கிதமாய்த் தலைநிமிர...?
உன்னருகே நானிருந்து உனக்குப் பிடித்தமான
   பொன்மொழிகள்,கவிதைகள், போற்றும் தியானங்கள்....
என்னால் இயன்றவரை வாசித்துக் காட்டுதற்கு....
    என்னருகே நீ இருந்தால் என் நாளும் பொன்னாளே!
 
*இம் மாதம் 13-09-2010   திங்கட்கிழமை தமிழ்முரசுப் பத்திரிகை
2ம் பக்கத்தில் வெளியான செய்தி தான் இக் கவிதைக்கு
ஊற்றாகியது. சிங்கப்பூர் அனைவரினதும் மதிப்பிற்குரிய மதியுரை அமைச்சர் லீ குவான் இயூ குரலாக அது இருந்தது.
 
**கவிப்பேரரசு- வைரமுத்து அவர்களின் ’தமிழுக்கும்  நிறம் உண்டு”
என்ற கவிதைத் தொகுப்பில் இடம் பெற்ற இரண்டு பொன் வரிகள்.

Thursday, September 16, 2010

மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகிய திலீபா, நீ தியாக தீபமானாய்!........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் கவிதை!!

மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் பழகி  திலீபா, நீ தியாக தீபமானாய்!........21 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும்  கவிதை!!






தமிழ் மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக நீர் கூட அருந்தாது உண்ணாவிரதமிருந்து, உயிர்க்கொடையளித்த தியாகி திலீபன் பற்றி 1989 இல் அமரர் சத்தியராஜன் ( மீரான் மாஸ்ட்ர்) எழுதிய கவிதை.
-----------------------------------------------------


உண்ணா விரதம் என்பது உண்மையில்....
எண்ணமும் செயலும் ஒன்றாக இணைந்ததென்று.......
காந்திமகானின் கருணை வழியினிலே......
சாந்தியளிக்கும் சமாதானம் பிறக்குமென்று




மாற்றியக்கத் தோழருடன் மதிப்புடன் நீ பழகி-”நமக்குள்
வேற்றுமை இருந்தால்--விரியுமே எதிரி பலம்
ஆற்றுப் படுத்துவோம், ஆதரவாய்க் கைகொடுப்போம்......”என்று கூறி
தோற்றுப் போனதால்தான்*, துணிந்தாயோ உயிர்துறக்க?




“அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு”என்று
அடுத்துவரும் சந்ததிகள் ஐக்கியத்தைப் பேணிநிற்க....
மாற்று இயக்கங்கூட தமிழின விடுதலைக்காய்.....
வீற்றிருக்க வேண்டுமென விட்டாயோ உன்மூச்சை?




சோற்றுப் பருக்கையல்ல: சொட்டுத் தண்ணீரே அருந்தாமல்.....
வேற்று மனிதனாகி வெளிக்கிட்டு ஓடாமல்.......
காற்றிலே மிதந்துலாவும் கருணைச் சுவாசமே......!
போற்றும் தியாகத்தால் திலீபா நீ தீபமானாய்..!




இரண்டு ஆண்டுகள் மறைந்தாலும்....
இனத்தின் ஐக்கியமே நீ கண்ட கனவப்பா!
வனத்தின் நிலவாக வாய்ப்பற்றுப் போகாமல்.....
உனக்கும் ஆத்மசாந்தி ஒற்றுமையில் கிடைக்குமப்பா!






பார்த்திபன் இராசையா ( மலர்வு கார்த்திகை 27, 1963 ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட  திலீபன்  இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர்.

ஐந்து அம்சக் கோரிக்கை

   1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
   2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
   3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
   4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
   5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள்  முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

1987 புரட்டாதி 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார்.

1987ஆம் ஆண்டு புரட்டாதி 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு  திலீபன் தியாக மரணம் எய்தினார்.




*தியாகி திலீபன், 1985/86 இல்  தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் யாழ்ப்பாண பொறுப்பாளராக  இருந்த அமரர் விஜயபாலன் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன மெண்டிஸ் வோடு மிகுந்த மதிப்பு, நட்பு பாராட்டுகிறவர்.- சத்தியராஜன் 26-09-1989.

Friday, September 10, 2010

நான் பிறந்த நாடு......வள்ளியம்மை சுப்பிரமணியம்


நான் பிறந்த நாடு
-------------------------------
நான்பிறந்த நாடுஎன்று நானிங்கு எழுதுவது.....
நான்பிறந்து வளர்ந்த மாகாணத் தொகுதியைத்தான். ....
ஊர்பற்றி எழுதும்படி உரிமையுடன் கேட்டீர்செந்தில்
ஏர்  உழுத பறாளாய் மண்ணின் எழில்மிகுந்த அழகுதன்னை....
பேர் பெற்ற ஆலயங்கள் பெருமையுறு வரலாறு....
யார் மறக்க முடியுமய்யா யாழ்ப்பாணச் சிறப்பதனை....?
மங்காத இராமாயண நாயகன் ஸ்ரீராமனின்
தங்கத் திருப்பாதம் பட்டதாம் திருவடி நிலையில்
சங்கமித்ரை பெயர்கொண்ட அசோகமன்னன் புத்திரியும்
சம்பில்துறை வந்திறங்கி சமயம் வளர்த்தகதை.....
சின்னத் தம்பிப் புலவர்கூட சிந்துகவி பாடிவைத்த
எந்நாளும் அழியாத பறாளாய் விநாயகர் பள்ளு.....
கூர்ம வடிவத்திலே கோவில்கொண்ட பொன்னாலையில்
தேர்த்திரு விழாவில் உறியடி உற்சவமும்..........
தயிர்முட்டி சிதறித் தலைமேலே கொட்டியதும்....
பயிர் விளைந்த வயல்வெளியின் பசுமைக் காட்சிகளும்....
வானம் பார்த்த பூமியென்று பேரெடுத்து இருந்தாலும்...
கூன்விழுந்த பின்னாலும் உழைத்துண்னும் உற்சாகம்....
வீட்டுக்கொரு கிணறு... வீதிதோறும் வேலி+மதில்...
பாட்டாகத் திருவாசகம் மார்கழித் திருவெம்பாவில்....
மின்விசிறி  தேவையில்லை வேப்பமரக் காற்றுவரும்.
பன்னாட்டு உணவு வேண்டாம் பனைமரமே பசிதீர்க்கும்.
யாழ்பாடிப் பரிசுபெற்ற யாழ்ப்பா வரலாறு....
பாழ்போகா உணவுமுறை  பனம்பழத்தில் கிடைக்கின்ற
ஒடியல்கூழ், பனங்கட்டி, ஒடித்துண்ணும் புழுக்கொடியல்,
மடித்தெடுத்துப் பேணிவைக்கும் பனாட்டுத் தட்டுகளும்
பதநீருள் பயறு போட்டுப் பக்குவமாய்க் காய்ச்சுகின்ற
இதமான கருப்பங்கஞ்சி.... இப்போதும் வாயினிக்கும்....
குலையாக வெட்டிக் கோவில் பந்தலிலே கட்டுகிற
விலைக்கும் கிடைக்காது விருப்பமான நுங்குகளாம்.
இலுப்பைப் பூக்காயவைத்து அல்லிதட்டி வறுத்தபின்னே
அலுக்காது உரலிலிட்டு உலைகையால் இடித்தெடுத்து...
சூட்டோடு பரிமாறிப் பலரோடு உண்டகதை....
பாட்டாகச் சொன்னால் புரியாது புதியவர்க்கு....
பிறந்ததும் வளர்ந்ததும் அறநெறிகள் கற்றதும்....
துறந்தது பிறந்த மண்ணைத் துக்கமே மகிழ்ச்சியில்லை!


வள்ளியம்மை சுப்பிரமணியம்

Saturday, September 4, 2010

பிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .....ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி! சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!

திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள் 05 09 2010.
             ............
      இலங்கை நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில்
     துலங்கும் வட்டுக் கோட்டைத் தொகுதியில்
     நீர்வளமும் நிலவளமும் உயர்ந்த பனைமரமும்
     போர் வளமும்  சூழ்ந்த பதற்றமான காலத்தில்
    “சுபாரா” பெயருடன் வந்து பிறந்த வரமிவர்.
    அபார வரலாற்றைக் கொண்ட ”சத்திய மனை” யின்
    அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று
    தப்பாது அன்புகாட்டும் அயலோர் உறவுகளும்...
    நாட்டு நிலைமையால் தமிழ்நாடு சென்று
    காட்டும் முன்னேற்றம் கல்வியில் தானென்று
    இளம்வயதில் மறைந்த பெரிய மாமாவின்
    உளம் நிறைந்த  கனவை நனவாக்க
    அமேரிக்க பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற
    உண்மைப் பேற்றினைப் பெற்ற செல்வியாம்.
 
ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி!
சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!
வள்ளியம்மை சுப்பிரமணியம்






From Sunday "Thinakkural" 13 February 2005