மணல் வீடு
--------------------
சீமான்கள் வாழ்வைச் சிந்தையிலே நிறுத்தி
தாமுமவர் போலத் தகுதியெனக் காட்ட...
கடன்பற்று அட்டை கைகொடுக்கும் என்று...
உடன்செலவு , உதவாத ஊதாரித்  தனத்தினால்.....
அத்திவாரம் பலமான ஆணித்தரக் கட்டிடத்தை
மொத்தமாகச் சுனாமி, சூறாவளி  தாக்குமெனில்....
உழைப்பற்ற பொருளாதார ஊசலாடும்  மனிதனுக்கு
மழைநீர் பொழிந்தபின் மணல்வீடு  நிலைதான்!.
வள்ளியம்மை சுப்பிரமணியம்
 
 
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்