"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, December 2, 2013

Jaffna Memorial Event 1st December 2013 யாழ்ப்பாண நினைவு நிகழ்வு

K.A.Subramaniam 24th Anniversary Memorial Event  held at 330pm @ 405 Stanley Road Jaffna  on Sunday 1st December 2013

தோழர் மணியம் அவர்களின் நினைவு நிகழ்வு யாழ்ப்பாணத்தில் புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி பணிமனையில் வடபிராந்தியச் செயலாளர் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சமகாலச் சூழலில் பொதுவுடமை இயக்கத்தின் தேவையும் அவசியமும் என்ற தலைப்பில் தோழர் அ.சீவரத்தினமும்  வெகுஜன இயங்கு தளங்களில் வேலைகளை முன்னெடுத்தல் என்ற தலைப்பில் தோழர் த. பிரகாஸ் அவர்களும் உரையாற்றினர்.
 தோழர் சி.நவரத்தினத்தின் மனைவி திருமதி ச.நவரத்தினம் அமர்ந்து இருப்பதையும் காணலாம்
 தோழர் அ.சீவரத்தினம்
 தாயகம் ஆசிரியர் தோழர் க.தணிகாசலம் அமர்ந்து இருப்பதையும் காணலாம்
தோழர்  சோ. தேவராஜா

Wednesday, November 27, 2013

K.A. Subramaniam: 24th Anniversary Event கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு


 கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு நிகழ்வில் தலைமையுரையினை பேராசிரியர் சிவசேகரமும் தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும் என்ற தலைப்பில் நினைவுரையினை இந்திய கம்யுனிஸ்ட் மார்க்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் தோழர் சன்ஜே சிங்வி அவர்களும் ஆற்றினர். 

தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்அவர்கள்
அறிமுகவுரை: சோ. தேவராஜாஅவர்கள் 
Introduction by Mr. S. Thevarajah

Professor S. Sivasegaram


நினைவுச் சொற்பொழிவு: 
Memorial Lecture:
தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும்
 Imperialism and the Left movement in the South Asia
இந்திய கம்யுனிஸ்ட் மார்க்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளர் தோழர் சன்ஜே சிங்வி அவர்கள்

புதிய-ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா. செந்திவேல் அவர்கள்

Professor S. Thillanathan
பேராசிரியர் சி.தில்லைநாதனும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டார்


தோழர் கே ஏ சுப்பிரமணியத்தின் மனைவி திருமதி வள்ளியம்மை



நன்றியுரை: வே. மகேந்திரன் அவர்கள் 
Vote of Thanks by Mr. V. Mahendran






Saturday, November 23, 2013

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 24வது நினைவு நிகழ்வு Comrade K. A. Subramaniam: 24th Anniversary Event

23.11.2013 சனிக்கிழமை பி.ப.05 மணிக்கு 
தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடம் 
(121, ஹெம்டன் ஒழுங்கை, வெள்ளவத்தை)
தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்
அறிமுகவுரை: சோ. தேவராஜா
நினைவுச் சொற்பொழிவு:  
தென்னாசியப் பிராந்தியத்தில் ஏகாதிபத்தியமும் இடதுசாரி இயக்கமும்
நன்றியுரை: வே. மகேந்திரன்
கொழும்பு 23.11.2013 கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு
Thanks: http://ndpfront.com/tamil/index.php/viewsonnews/231-2013/2176-2013-11-21-10-16-34 

Comrade K.A. Subramaniam: 24th Anniversary Event

23.11.2013 Saturday at 05 pm
Venue:
National Arts Council of Literary's
Kailasapathy Auditorium 
(121, Hampden Lane, Wellawatte Colombo 06)
Head: Professor S. Sivasegaram
Introduction: S. Thevarajah
Memorial Lecture: Imperialism and the Left movement in the South Asia
Vote of Thanks: V. Mahendran
KA  Subramaniam Memorial Committee,  
Colombo 23.11.2013

Tuesday, October 8, 2013

சிவப்பு முட்டையிலிருந்து திருவள்ளுவர் - எனது சின்னப்பேரன்


சிவப்பு முட்டையிலிருந்து திருவள்ளுவர்

அவசரமாகத்தட்டும் சத்தம் ஒன்று என் வீட்டின் பின்புறத்திலிருந்து கேட்டது.  உடனேயே அங்கு ஓடிச் சென்றேன்.  வீட்டின் பின் கதவை யாரோ தட்டுகின்றார்கள் என நினைத்த‌ நான், ஒரு பெரிய சிவப்பு முட்டையைக் கண்ட போது ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு அம்முட்டையையே பார்த்து முழித்தேன். அந்த முட்டையிலிருந்து தான் தட்டும் சத்தம் வந்தது என‌ உணர்ந்தேன்.  முட்டையைத் தடவிய போது செவிக்கு நாராசமான‌ சத்தத்தை உருவாக்கியது.  மறுகணம் முட்டையிலிருந்து ஒரு கதவு திறந்து கொள்ள ஒரு ஆடவர் நடந்து வந்தார்.  அவர் பார்ப்பதற்குப் புகைப்படங்களில் நான் கண்ட திருவள்ளுவரைப் போலவே இருந்தார்.  'வணக்கம், என் பெயர் வள்ளுவர்', எனக் கூறினார்.  என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை.  இவர் உண்மையாகவே திருவள்ளுவர் தான்!

"நான் இறக்க முன் கடவுள் என்னிடம் ஒரு வரம் வழங்கினார். எதிர்காலத்தில் மறுபடியும் இவ்வுலகைப் பார்ப்பதற்காக ஒரு வாய்ப்பைத் தரும்படி கேட்டேன்.  அதனால் தான் நான் இங்கு இருக்கின்றேன்", எனத் திருவள்ளுவர் விளக்கினார்.  திருவள்ளுவரை உடனேயே வரவேற்றேன்.  வீட்டினுள் அழைத்து உண்ணுவதற்கு உண‌வைக்கொடுத்துபசரித்தேன்.  அவர் ஒரு செய்தித்தாளை எடுத்துத் தன்னை விசிறத்தொடங்கியபோது மின்காற்றாடியைப் போட்டேன். "ஒரு பொத்தானை அழுத்த இவ்வளவு காற்று வருகிறதே!" என அவர் அதிர்ந்தார்.  என் நண்பனுடன் கைத்தொலைபேசியின் மூலம் பேசிய போது திருவள்ளுவர் என்னை மேலும் கீழும் ஒரு மாதிரிப் பார்த்தார. "ஏன் தம்பி, ஒரு கருங்கல்லுடன் நீ பாட்டுக்குப் பேசிக்கொண்டு இருக்கிறாயே?" என்று கேட்டார்.  என் கணினியை அவரிடம் காட்டியபோது வியப்பால் அவர் மயங்கி விழப்பார்த்தார்.  மதியமாகியபோது நானும் திரு வள்ளுவரும் வீட்டுக்கு வெளியே உள்ள விரைவு உணவுச்சாலையில் உண்டோம். உணவு இர‌ண்டு நிமிடங்களிலேயே தயாரிக்கப்பட்டதைத் திருவள்ளுவரால் நம்ப முடியவில்லை.

ஆனால் இந்த நவீன யுக‌த்திலும் பல தீமைகள் இருக்கின்றன என்பதைத் திருவள்ளுவர் சிறிது நேரத்தில் உணர்ந்தார்.  முதலில் நாம் 'சோமு சாராயக் கடையைத்' தாண்டி நடந்தோம்.  அங்கு பற்பல‌ குடிகாரர்கள் குடிபோதையில் படுத்துக்கொண்டு இருந்தார்கள்.  'எஞ்ஞான்றும் நஞ்சுண்பார் கள்ளுண்பவர்' என்பதை அவர் பலமுறை சொல்லிச் சொல்லிக் கவலையடைந்தார்.  வழியில் ஒரு மனைவி கணவனை அடித்துக்கொண்டிருந்தாள்.  "அன்பும் அறமும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது' என்று படித்துப் படித்துக் கூறினேனே எனக்கூறிக் கவலைப்பட்டார்.  பிறகு நிலத்திலிருந்த ஒரு செய்தித்தாளை எடுத்து வாசித்தார்.  முதலாம் பக்கத்தில், 'நண்பனின் மனைவியை அடைவதற்காகக் கொலை', 'கள்ளக்காதலுக்காகக் கணவன் கொலை' என செய்திகள் இருந்தன.  "ஐயகோ! பிறன்மனை நோக்காப் பேராண்மை" என்பதையும், "மகளிர் நிறை காக்கும் காப்பே தலை" என்பதையும் நான் கூறியதை ஒருவரும் பொருட்படுத்துவதில்லையா?" என வள்ளுவர் இரத்தக்கண்ணீர் வடித்தார். இப்படிப் பல தீய விடயங்களை அவர் என்னுடன் நேரில் பார்த்தார்.  வீட்டை அடைந்ததும் உலகமே இருண்டது போன்ற உணர்ச்சி யை அவரது கண்களில் பார்த்தேன்.  ஒரு சொல்லைக் கூடச் சொல்லாமல் வீட்டின் பின்புறத்துக்குச் சென்றார்.  வானிலுள்ள ஒரு நட்சத்திரத்தைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார்.  அது அவரது மனைவி அருந்ததியாகத்தான் இருக்க வேண்டும்.

"பல விடயங்களைக்காட்டியுள்ளீர்கள். உங்கள் விருந்தோம்பலுக்கும் நன்றி.  உலகம் இன்னும் முற்றாகத் திருந்தவில்லை தான்..." எனக் கூறி விட்டுச் சிவப்பு முட்டையினுள் காலை வைத்தார்.  என்னால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.  கதவைப் பூட்ட முன்,
'வசதியும் சொகுசுமுள்ள இவ்வுலகு - வன்முறையால்
தகுதியில் குறைந்ததாம் கொல்' எனக் கூறி விட்டுக் கண்ணிலிருந்து ஒரு கண்ணீர்த்துளியைத் துடைத்து விட்டுக் கதவை மூடினார்.  மறுநாள் அந்த முட்டை மறைந்து விட்டது.  அடடா! இவ்வுலகுக்காக அவர் ஒரு புதிய குறளையல்லவா கொடுத்துவிட்டுப் போயுள்ளார்?  இதை எவ்வாறு நான் உலகத்துக்குத் தெரிவிப்பேன்? நான் கூறுவதை மற்றவர்கள் நம்புவார்களா?
-எனது சின்னப்பேரன்




Sunday, October 6, 2013

வள்ளியம்மை சுப்பிரமணியம் 75வது பிறந்தநாள் 7 / 10 / 2013

வள்ளியம்மை சுப்பிரமணியம்,  தனது 75 வருடங்களை மிகச் சிறப்பாக கடந்துள்ளார். இன்னும் பல் ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள்.!

தமிழின் மேலும் ,இலக்கியத்தின் மேலும் தீராக் காதல் கொண்டு   ' பண்டிதர் ' படிப்பை தொடர்ந்த காலத்தில் 1955 இல் கே .ஏ. சுப்பிரமணியத்துடன் அறிமுகம் .
சாதீய,பொருளாதார ,பிற்போக்கு  எல்லைகளைத் தாண்டிய - காதல்
ஆச்சாரமான ,சடங்கு சம்பிரதாயங்களுடன் வளர்ந்து பின்  - வடபுலத்தின் மார்க்கசிய இடதுசாரியுடன் - -சீர்திருத்தக் கல்யாணம் 1962.
தாலியாக 'அரிவாள் சம்மட்டி சுமந்து  , உப்புச் சிரட்டையும் தாங்களே தேடி -அந்நிய ஊரில் தனிக்குடித்தனம் ..
சாதி எதிர்ப்புப் போராட்டம் 1966, மேதின மறுப்புப் போராட்டம் 1969
காவல் துறையினரின் எல்லை மீறிய பொல்லடிகள் , ரணமாகிய கணவர் -மூன்று  குழந்தைகள்- ஆசிரியத் தொழில் இவற்றையெல்லாம்  சிரித்த முகத்துடன் சகித்து ,வீட்டை வரும் தோழருக்கெல்லாம் உணவு பகிர்ந்து நீங்கள் வாழ்ந்த வாழ்வு மகத்தானது.அடிக்கடி தலைமறைவு வாழ்வு ,அநீதிக்கெதிரான போராட்டம் என கணவரின் வாழ்வு தொடர - கட்டாய மொழிச் சட்டத்தினால் வேலைக்கு இடைஞ்சல் வர ,முழு நேர ஊழியரான கணவர் -வருமானத்திற்காக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் -சிங்களம் படிக்க சென்று ,- அதன் தொடர்பால் ஈழப்போராட்ட முன்னோடிகளின் உறவு வளர்ந்து ,மூத்த மகன் போராளியாக, தேச ஒற்றுமையை வலியுறுத்தும் தந்தை ,தனியுரிமை கேட்கும் மகன் , என தவித்துப் புலம்பி - காவல்துறையின் அட்டகாசங்கள் குறைந்து - இராணுவத்தின் தொல்லை ஆரம்பமாகியது. 72 மணிநேர ஊரடங்கு உத்தரவின்போது 1984 மகன் சிறைப்பட - அடிபட்ட உள் காயங்களினால் நோயாளியான கணவர். - இயக்கங்களிடமிருந்தும் ,இராணுவத்திடமிருந்தும் காப்பாற்ற வேண்டிய வயதில் மற்ற இரு குழந்தைகள் ., வறுமை - நோய்  இவற்றுடன் வாரம்தோறும் இராணுவ முகாம்களுக்கு சென்று மகனின் நிலையறிய வேண்டிய நிர்பந்தம்  பல பல போராட்டங்களே  வாழ்வாகிப் போனது.4 வருடங்களின் பின்னர் மகன் 1988 சிறை மீண்டான் என சந்தோஷிக்க முடியாமல் , அச்சுறுத்தலினால் தலைமறைவு வாழ்வை மேற்கொண்ட கணவரின் மரணம் 1989. அராயகதிற்கு கட்டுப்பட முடியாமல் 1991 இடப்பெயர்வு. பின் இளைய மகனுடன் சிங்கப்பூர் பயணம் 1993.  மீண்டும் எழுத்தத் தூண்டிய சிங்கப்பூர், கணணி அறிவூட்டி , 'கவிமாலை'யில் இணைத்தது . அன்பு மகள்-திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 6 October 2013

72வது பிறந்தநாள் காணொளி 07/10/2010 சிங்கப்பூர்



அம்மா 
நீ நடந்த காலடி தடங்களில்,
தேங்கிய வியர்வைஉடன் 
சேர்ந்து - கண்ணீரும்  சொல்லும் 
உன் கடந்த காலம்.- 
வேலையால் வீடு திரும்பி 
உடுத்திய புடவையை 
கதவில் போட்டால்,
மறுநாள் வேலை செல்லும் வரை 
கால்களில் சக்கரம் தான்.
பச்சை தென்னம் மட்டையை 
இரவு தணித்த நெருப்பில் காய வைத்து 
பால் கறந்து , வீடு பெருக்கி 
எங்களை குளிக்க  வார்த்து 
சாப்பாடு தந்து அப்பாக்கு மருந்தும் தந்து
வீடுக்கு வரும் தோழர்களை வரவேற்று 
இன்முகம் காட்டும் அம்மா.
அனேகமாக முருங்ககை குழம்பும் 
வாழைக்காய் பொரியலும் தான் சாப்பாடு
இரண்டுமே வீட்டில் இருக்கும்.
கிணறு கலக்கி இறைத்து  சாம்பிராணி இடுவதில் இருந்து , 
மாவு இடித்து இட்டியப்பம் அவித்து 
ஓலை பின்னி வேலி அடைப்பது வரை நீதானம்மா .
 நீ தூங்கி நாம் பார்த்ததில்லை .
பலகாலம் நீ படித்தவ என்பதே எமக்கு தெரியவில்லை , 
எல்லாமே அப்பா தான் - என்று உணரவைத்தாய் .
அப்பாவை போலீஸ் தேடிய காலங்களில் 
பல பல வீடுகள் மாறினோம் .
வாடகை வீடுக்கு நீ பட்ட கஷ்டம் அன்று 
எமக்கு உணரும் வயசில்லை.
இளம் வயதில் தனி மாதாக -நீ 
பட்ட கஷ்டம் புரியவில்லை.
துரத்தும் போலீஸ் உம் , நகையாடும் உறவுமாய் 
நீ வாழ்ந்த வாழ்வு, காதலின் வெற்றி!
எமது நாட்டின் இரண்டு பெரும் சகாப்தங்களின்
 வாழ்வு நாயகி நீ.
கொள்கைக்கு மாறுபட்ட குழந்தையும் 
கோபமுறும் கணவனும் ,
பகல் பொழுதில் மார்க்சியம் பேசும் தோழர்கள் 
இருட்டில் பிரிவினை கேட்கும் குழந்தைகள்
சமையலே உன் வாழ்வாகி போனது. 
வறுமையின் உச்சத்திலும் நீ வாடி 
நாம் பார்த்ததில்லை. 
மக்கள்  கழக சுந்தரம், சந்ததியார் தன்னுடனே 

சிங்களமொழி வகுப்பில் சேர்ந்து படித்தாய்
பீட்டர் கெனமன், சண்முகதாசன்  மாமா  இலிருந்து  
சிறிமாவோ பண்டாரநாயக்கா வரை பழகி இருந்தாய்
மக்களுக்கா  அமரர் ராஜீவ் காந்தி  இலிருந்து
மகிந்த ராசபக்ச வரை கடிதம் எழுதி இருந்தாய் 
சாதி எதிர்ப்பு போராட்டத்தில் படுகாயம் பட்ட 
அப்பாவை - மூன்று சிறு குழந்தைகளுடன் 
குழந்தையாய் காப்பாற்றினாய் .
பின் மே தினம் ஒன்றின் (1969)பெரும் போரட்டத்தில் 
சிதறிய அப்பாவின் அங்கங்களை ஒட்டவைத்தாய் .
அம்மா,
ஓய்வு பெறும் வயதில் சிறைச்சாலை தோறும் சென்று
அண்ணாவை பார்த்து வந்தாய்.
இடை மறிக்கும் போலிகள், 
உளவு சொல்லவா என்று கேலி பேசும் போது 
அரசியல்  தெரியாத அந்த கூட்டத்துக்கு 
வரலாறு சொன்னது கேட்டு மலைத்து நின்றிருக்கிறேன்.
பிரிவினையை வெறுத்த அப்பா -இந்திய இராணுவம் 
வெளிச்சத்திற்கு வந்த வேளை-இல்
கோபு மாமா உதவி கேட்டு வந்தார்
பத்திரிகை வெளி வரவும் உதவியதுடன் 
குண்டுகளின் சிதறல்களின் நடுவே  
உணவும் சமைத்து கொடுத்தாய் , பயந்தோடவில்லை.
புன்சிரிப்பும் பொறுமையும் உன் ஆயுதங்கள் 
உன் அளவுக்கு எனக்கு ஆளுமை இல்லை ,
அறிவும் இல்லை ஆனால்
இன்றுவரை உனக்காக ஏதும் நான் செய்ததில்லை.
நேற்று கூட உன் ஓய்வூதிய பணம் எனக்கு வந்தது.
உனக்கான என்  கண்ணீரை கூட -இதுவரை 
நான் காட்டியதில்லை .
எழுபதுகள் கடந்தும் ஏற்றமாக இருக்கிறாய் அம்மா.
அன்பு அனைத்தையும் வென்றிடும் என்று சொல்லுவாய் .
முயற்சிக்கிறேன் முழுமையாய் வாழ.
உங்கள் வளர்சிக்கும , மகிழ்ச்சிக்கும் காரணமான 
என் தம்பிக்கு நன்றிகள் .
இன்று அப்பாவும் அண்ணாவும் இல்லை- அனால் 
மரணத்தின் பின்பும் அவர்களை வாழ வைக்கிறீர்கள்
நிறைய வாசியுங்கள், எழுதுங்கள். 
உங்கள் வாழ்வின் வெற்றி சத்தியமனையின் வெற்றி!
நூறாண்டு   வாழ வாழ்த்துகிறேன்.
அன்பு மகள்-திருமதி.சத்தியமலர்  இரவீந்திரன் 4 October 2010

Sunday, September 8, 2013

பிரதீபன் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( ஏகாம்பரம் பார்த்தீபன் ) 12 -08 - 1966 .......... 30 -06- 1986 நினைவு

ஏகாம்பரம் பார்த்தீபன்
(12 Aug 1966 - 30 June 1986) 

பார்த்தீபனின் வீரம், தியாகம் உங்களுக்கு தெரிந்திருக்கும். அதுமட்டுமல்ல அனைவரும் விரும்பும் ஒரு இனிய பிறவி. அன்பைப் பொழிவதில் தன்னிகரற்றவர்.நாங்கள் காவியங்களிலும் புறநானூற்றிலும் வாசித்துள்ள வீரமரணம் என்பது நெற்றியிலோ மார்பிலோ விழுப் புண்ணேந்தி மாள்வது என்பது தான். பார்த்திபன் தனது நடுநெற்றியில் வீரத் திலகமேந்தித் தான் வீரமரணம் அடைந்திருந்தார். 

தான் இறக்கப் போவது உறுதி என்பது தெரிந்திருந்தும் பொதுமக்களதும் சகபாடிகளதும் உயிரைக் காப்பதற்காக தன்னுயிரை ஈந்தவர் அவர்.இறுதி மூச்சு வரை மற்றவர்களுக்காகவே வாழ்ந்த உத்தமன் அவர். தான் வாழ்ந்த இருபதே ஆண்டுகளில் சரித்திரம் படைத்து விட்ட மாமனிதன் அவர்.போராட்டம் உச்சநிலை எய்திய போது பல்வேறு காரணங்களுக்காக இயக்கங்களுடன் தங்களை இணைத்து கொண்டவர் பலர் .இருந்தும் ஆரம்ப
கால உறுப்பினர் அனைவரும் இனவிடுதலை உணர்ந்து விரும்பி இணைந்தவர்கள் .
இவரும் இணைந்து பல்வேறு பயிற்ச்சிகளின் பின் குடா நாட்டில் .சம்பவ தினம்
அங்கிருந்து மன்னார் நோக்கி ஜீப் வண்டியில் சகாக்கள் சகிதம் பயணம் .கைதடி பாலத்தை நெருங்கும் போது பஸ் வண்டி ஒன்று பொதுமக்கள் /மாணவர்கள் சகிதம்
பாலத்தின் நடுவில் பழுதடைந்து நின்றுவிட்டது .அக்காலத்தில் தினசரி காலை தோறும் ஒரு ஹெலி பலாலியில் இருந்து காரை நகர் முகாம் சென்று வருவது வழமை .அவர்கள் இவர்களின் ஜீப்பை கண்டதும் தாள பறந்து சரமாரியாக சூடு நடத்த அங்குள்ள பொதுமக்கள் + மாணவர்களை காக்கும் பொருட்டு சகபாடிகளுக்கு இவ்வாறு சொல்லி **நீங்கள் பாலத்துக்கு கீழே பதுன்கிகொள்ளுங்கள் ** நான் சமாளிக்கிறேன் என்று சொல்லி தன்னிடம் உள்ள துப்பாக்கியினால் சூடு நடத்தி உள்ளார்.ஈற்றில் நெற்றி பொட்டில்வீரத் திலகமேந்தி வீரமரணம் அடைந்திருந்தார். எங்கள் பார்த்
தீபன் அவர்கள் கனவு நிச்சயம் பலிக்கும் .......நன்றி-http://www.panncom.net/p/4874/4874

Sunday, August 25, 2013

மீரான் மாஸ்ட்ர் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் ( சுப்பிரமணியம் சத்தியராஜன் ) 1962-10-30....2001-08-25 நினைவு

மீரான் மாஸ்ட்ர் - தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்
 (சுப்பிரமணியம் சத்தியராஜன் ) 1962-10-30....2001-08-25 நினைவு
"நாட்டுக்கு உழைத்து நிற்கும் நல்ல தமிழ்த் தாய்க்குலமே
வீட்டுக்கு ஒருமகனை வீரமுடன் தாராயோ " என
உன் கையெழுத்தில் சந்திதோறும் சுவரொட்டிகள் ,
உன் பிரச்சாரத்தால் உதித்த பல ஆயிரம் போராளிகள்
என் மூத்த குழந்தை உன்னை விடுதலைக்காய் கொடுத்தேன்.

ஏற்றத் தாழ்வு இல்லாத எழுச்சியுறு அரசமைக்க.....
ஆற்றல் மிக்க தோழர்கள் அயராது பாடுபட.......
போற்றும் இளமைப் பொன்வசந்தம் சிறைக்குள்ளே......
மாற்றுச் சமுதாய அமைப்புக்காய் வெந்தோர் பலர்.!


நீயும்விதி விலக்கல்ல; மூன்றுமுழு ஆண்டுகள் சிறைக்குள்ளே....
சாயாத மனவுறுதி....சன்சலத்தைப் போக்கிவிட.......
பாயும் பாச அலை பெற்றார், சகோதரம்மேல்....
காய்தல் உவத்தலின்றிக் கடமையுணர் வுள்ளவன் நீ!

தேசம் நேசித்த உன் தந்தை இழந்தேன்
தமிழ் நேசித்த உனையும் இழந்தேன்
விடுதலை நேசித்த சந்ததி இழந்தோம் ,
ரணங்கள் ஆறவில்லை ,ஆறுதலும் கிட்டவில்லை 
இராசான் ...இராசா.. ராசான் ராசா ..
வாழ்ந்த ஆண்டோ முப்பத்தெட்டு.......வாயடை
த்தோம்......ராசனே.....!
ஆழ்ந்த துயரத்தில் அழுகின்றோம் ஆறுதில்லை.......மனம்.
தாழ்ந்து போகவிடாமல்.....தாயுடன், தங்கை, தம்பியும்.....என்றும்
வீழ்ந்து விடாமல் வேரெனவே நீயிருந்தாய்!
- அம்மா

உலுக்கிய கொடூர நாட்கள் 11-12 -1984-தொடக்கம் 72 மணித்தியால ஊரடங்கு 15-12-1984 நினைவு


11.12.1984 ஆம் ஆண்டு நமது ஊர் உட்பட பண்டத்தரிப்பு சித்தங்கேணி, வடக்கம்பிராய், விக்டோரியாகல்லூரி, பறாளாய்முருகன் ஆலயம், திருவடிநிலை, மாதகல், பண்டத்தரிப்பு இதற்க்குள் அடக்கப்பட்ட சகல கிராமங்களையும் உள்ளடக்கி 72 மணித்தியால ஊரடங்கு சட்டம் போடப்பட்டு தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டது. இந்த தேடுதல் ஏன் ஏற்ப்பட்டது என்பது சகலரும் அறிந்த விடயம். இந்த தேடுதல்வேட்டை முதல் நாள் சுமாரான தேடலாகவே அமைந்தது. இருந்தும் எமது ஊரைச்சேர்ந்த ஒரு காவல் அதிகாரி கொடுத்த தகவல்களின்படி நமது ஊருள் தஞ்சம் இருந்தவர்கள் பலர் தமது இடங்களை மாற்றிவிட்டனர். இருந்தும் சில பல்கலைக்கழக மாணவர்கள் இடம்மாறமுடியாமல் போனது. இரண்டாம் நாள் கடுமையாக தேடுதலும் கொலைகளும் அதிகரித்தநாளாகும்.அன்று தான் குணதிலகம் பாஸ்கரன் அவர்கள் பல்கலைக்கழக மாணவர்களை பாதுகாக்கும் பணியில் ஓடியவர் மூட்டு சந்தைக்கு அருகில் இவருக்கு காலன் அருகில் வந்து சூடுபட்டார். இவரை காயங்களுடன் பாதுகாக்கமுடியா நிலையாகும். இருந்தும் இவர் அன்றிரவு இவரது அண்ணர் இவரை பாதுகாக்க முயறச்சி செய்தும் இவர் மரணமாகிவிட்டார். இதே நாள் தான் பறாளாய் முருகன் ஆலயத்தின் முன்றலில் நடந்த எதிர்மறை போராட்டத்தில் கந்தையா ஜங்கரன் அவர்களுக்கு சூடுபட்டது. இவர் காயங்களுடன் சிறைப்பிடிக்கப்பட்டு முகாமில் வைத்தியம் கிடைக்காமல், இவர் மரணமானார். இதே நாளில் எமது ஊரில் பல அயலூரவர்கள் இறந்தனர். எமது அயல் கிராமத்தவர் பலரையும் எமது ஊர் நோக்கி நகர்த்தியவர்கள் அவர்கள் இடங்கள் தெரியாமை, மழைவெள்ளம், அவர்கள் பலர் காயங்களுடன் வைத்தியம் அற்று இறந்தவர்கள் பலர். திருநாவுக்கரசு ஜெகதீஸ்வரன், கதிரமலை நந்தீசன் இருவரும் மூன்றாம் நாள் அம்மன் கோயில் சுற்றாடலில் வைத்து சூடுபட்டு இறந்தனர்.இவர்கள் மட்டுமல்ல அன்று எமது ஊரில் 21 பேர்களுக்குமேல் உயிர்நீர்த்தனர் இதில் 4 இளைஞர்கள் எமது உறவுகள். இவர்கள் மரணித்து 28வருடங்கள்.இன்று இணைய வசதிகள் இருப்பதால் இவர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் ஞாபகம் ஊட்டுகின்றேன்.  இவர்களை நண்பர்கள்,உறவுகள், ஊர்மக்கள் மறந்திருக்கமுடியாது. அந்த 15.12,1984 அன்று காலை 7 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட நேரம்.சரியாக ஏழு மணிக்கு நான் கூறிய ஊர்கள் எல்லாமே மரண ஓலங்கள்.யார் இறந்தனர் என ஒவ்வொருவரும் தெரியாமல் அவரவர் உறவுகளை தேடும்படலம் ஒருபக்கம், இறந்தவர்கள் வீட்டில் மரணஒலம், காயப்பட்டவர்கள் தப்புவார்களா என்ற ஓலம்,கைதானோர் எங்கு என்ற கேள்விக்கு பதில் தெரியாதோர். காணாமல் போனவர் கிடைப்பாரா என்ற ஓலம். அவ்வளவு மக்களும் ஊரில் சில நாட்கள் நடைப்பிணங்களாகவே உலாவந்தனர். -நன்றி-பண் த.பாலா அவர்களுக்கு
Thanks to Source: http://saanthai.blogspot.in/2012/12/11-12-1984-15-12-1984.html

Tuesday, August 13, 2013

சாவு அறிவித்தல்: திருமதி மகேஸ்வரி- வைரமுத்து (1929-10-01 - 2013-8-10)




நேற்று திடீரென ஒரு இழப்புச் செய்தி - மகேஸ்வரி- வைரமுத்து (1929-10-01  - 2013-8-10) எங்கள் 'சைலு'வின் (சைலகாந்தன் வைரமுத்து) அம்மா. 


                                         சைலகாந்தன் வைரமுத்து (சாஜகான்)   
                                அம்மாவிலிருந்து 1966 ........இந்து மா சமுத்திரத்தில் 1986

 1986-ஆனி 29 அன்று PLOTE அமைப்பிலிருந்து பயிற்சி முடித்து வந்த 33 வீரர்கள் இந்து மாசமுத்திரத்தில் படகுடன் சேர்த்து, இலங்கை இராணுவத்தினால் அழிக்கப்பட்டனர். ஒருவரது உடலும் கிடைக்கவில்லை (போட்டி இயக்கத்தினரின் காட்டிக்கொடுப்பினால் இது நிகழ்ந்ததாகவும் ஒரு ஆதாரமற்ற கதை உண்டு ) நாமிழந்த 33 வீரர்களில், பலர் பழகிய உறவுகள். வேதனையின் வலிகள் சொல்லி மாளாதவை. ‘தினமுரசு’ ஆசிரியர் ரமேஷ் தோழருடன் திண்ணையில் இருந்து பேசிக்கொண்டு இருந்த போதே இச்செய்தி எமக்குக் கிடைத்தது……அந்த வலியுடன், தோழர் எப்படி அந்த உரையாடலைத் தொடர்ந்தாரோ? தெரியவில்லை. இராசன் சிறைச்சாலையில், கீர்த்தி உயர்கல்விக்காக வெளியூரில் , எமக்கு எல்லாமாக இருந்தது சைலகாந்தன் வைரமுத்து (சாஜகான்தான் . 5 பெண்பிள்ளைகளின் கடைசிப் பையனாக பிறந்து கீர்த்தியின் உயிர் நண்பனாக 'சத்தியமனை'யில் உண்டு உறங்கி வளர்ந்த உறவு. அவனுடன் ஏற்பட்ட உறவுக்கு அவனின் விதவைத் தாயின் , அவனின் 5 சகோதரிகளின், எம் மீதான நம்பிக்கையே காரணம். வட்டுக்கோட்டை தொழில்நுட்ப கல்லூரியில் கணனியியல்  படித்துக் கொண்டிருந்தார் . எங்களுக்கும் சொல்லாமல் திடீரென முடிவெடுத்துச் சென்றான். போராளி சுந்தரத்தின் மிக நெருங்கிய உறவு. வறுமையும் , குடும்பப் பொறுப்பும் நிறைந்த அவனையும் விடுதலை வேட்கை விட்டுவைக்கவில்லை. எப்பொழுதுமே அவனின் நினைவு எம்முடனே இருந்து வந்தது. அவனின் அம்மா திருமதி மகேஸ்வரி- வைரமுத்துவின் (1929-10-01 - 2013-8-10)  இழப்பு பலத்தை மீட்டுத் தந்தது. அவர்களுடனான குடும்ப உறவு எப்போதும் தொடரும்!