"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, December 6, 2010

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கே.ஏ.சுப்பிரமணியம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தின நிகழ்வு

கருத்தில் ஒருமித்த தோழர் சோ. தேவராஜா   

காலத்தால் அழியாத எண்ணங்கள்.........

நன்றி : பகீரதன் அழகரத்தினம்

Wednesday, December 1, 2010

கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் மூன்று நூல்கள்-வள்ளியம்மை சுப்பிரமணியம்


கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின்  மூன்று நூல்கள்


எங்கள் கவிதைநதி ந- வீ- விசயபாரதி அவர்களின் 

(1) பூக்கள் உடையும் ஓசை
                                                                                           
(2)பூட்டுகள்
                                                                                           
(3) புலமைக்கு மரியாதை  
   
ஆகிய மூன்று நூல்களைப் பற்றிய இந்தத் தாயின் கணிப்பீட்டினைச் சிலவரிகளில் கூறுவதற்கும்,அதனை அனைவரும் செவிமடுப்பதற்கும் முதலில் அனுமதி பெற்றுக் கொள்ளுகின்றேன்.
(1)பூக்கள் உடையும் ஓசை;........பண்டிதர் முதல் பாமரர் வரை மிக இலகுவாக வாசித்து கருத்தினை ஏற்றுக்கொண்டு நடைமுறை
சாத்தியமான ”வாழைப்பழத்தின் மருத்துவக் குணங்களை கொண்டிருக்கிறது” என்று வியப்பர்.
(2) பூட்டுகள்:---------ஒரு தடவை வாசித்து விட்டு, திரும்பவும் ஒருமுறை வாசித்து......ஓகோ! இவ்வளவு கருத்துக்கள் இதற்குள் இருக்கிறதே! என்று வியக்க வைப்பதுடன் ( சிரிக்கவேண்டாம் ) இனிப்பு நீர் உள்ளவர்கள் ....அதிகம் உண்ணலாமா? என்று சிந்திக்க வைக்கும் மாம்பழச் சுவையை கொண்டது.
(3) புலமைக்கு மரியாதை :--------இது பலாப்பழத்தின் சுவையைக் கொண்டது. உடனே சாப்பிடமுடியாது. பழத்தை வெட்டி.....கட்டுக்குலையவிடாமல் காக்கும் வரப்பினைக் கடந்து....பாதுகாக்கும் ( வைக்கோல் போன்ற) நார்களை அகற்றி.....அப்பொழுதும்
சாப்பிடமுடியாது....உள்ளேயிருக்கும் விதைகளைப் பத்திரமாகப் பிரித்தெடுத்து (ஏனெனில்  அவை வம்சவிருத்தி செய்பவை) ...அதன் பின்னர் தான் உண்ணவேண்டும். இந்நூலினை வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பள்ளியில் படித்து மறந்து போன ப்ற்பல அறிஞர்களின்
படைப்புக்கள் கண்முன் வரக்கிடைக்கிறது.அக்காலத்திலிருந்து-- இக்காலம்வரை இராமாயணம்....மகன் இறந்தபோது தாயின் நிலை, பாரதம்
-----பாஞ்சாலி சபதம், சிலப்பதிகாரம்,நற்றிணை,குறிஞ்சித்திணை....பெருவழுதியார்,பிசிராந்தையார், வீரமாமுனிவர்,தேவநேயப் பாவாணர்,
பாரதியார், பாரதிதாசன்,ந்ம்முடன் வாழும் கவிப்பேரரசு. வைரமுத்து வரை எடுத்துக் கூறி மரியாதை செலுத்தியது புதுமையானதே!
 மொத்தத்தில் முக்கனிகளையும் அதன் சுவைகளையும் ஒரே நேரத்தில் கொடுத்த கவிதை ந. வீ. விசயபாரதிக்கு ஒரு  கவிதை:--
         கொஞ்சமும் அலுப்பின்றி குதூகலமாய் வாசிக்க...
         துஞ்சாமல் கண்விழித்துத் தூயதமிழ் தந்தவரே!
         பஞ்சாமிர்தம் செய்ய முக்கனிகள் அவசியமே....
         எஞ்சிய காலங்கள் எல்லாமே ஏற்றந்தான்!..........................அன்புடன்........அம்மா.


 தாய் மடியில்  தலை சாய்த்து சொர்க்கம் காணும் சுகம் போல அன்னை உங்கள் விமர்சன வாழ்த்தில் ஆன்மா நெகிழ்ந்தேன்;
 பட்டறிவு மிக்க உங்கள் விமர்சனத்தில் பாசத்தின் விகிதம் கொஞ்சம் கூடுதலாகவே தொனித்தது. இந்தத் தாய்மை
அன்புக்கும் தமிழாய்ந்த விமர்சனத்துக்கும் என்றும் என் நன்றிகளைக் காலத்தாற்காட்டுவேன்.
                                                                                                                    என்றும் உங்கள் பாசமகன் 
                                                                                                                     ந.வீ.விசயபாரதி