"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Sunday, November 30, 2014

The book “Memories of Comrade Maniam” in Tamil by Comrade S K Senthivel தோழர் சி.கா.செந்திவேல் எழுதிய "தோழர் மணியம் நினைவுகள்" நூல்

The Comrade KA Subramaniam Commemoration Committee organized a public event in the evening of 29th November 2014 to commemorate the 25th Death Anniversary of Comrade KA Subramaniam (Comrade Maniam), founder General Secretary of the New-Democratic Marxist-Leninist Party, then Communist Party of Sri Lanka (Left), at the Auditorium of the Colombo Tamil Sangam in Wellawatte.
Comrade S Thevarajah delivered the welcoming address of the meeting which was followed by the address from the chair by Dr S Sivasegaram. Prof. Jayadeva Uyangoda delivered the Commemoration Lecture titled “Irreconcilability of Reconciliation. Reconciliation after War: Thinking beyond Solitudes”. Summary translations were provided in Sinhala by S Sivagurunathan and in Tamil by Dr S Sivasegaram.
The book “Memories of Comrade Maniam” in Tamil by Comrade S K Senthivel was launched after the Commemoration Lecture. Comrade Siva Rajendran reviewed the book presenting the political life of Comrade Maniam based on thirty years of togetherness of the author with him.
The first copy was issued to Mrs Valliammai Subramaniam, wife of Comrade Maniam, who briefly addressed the audience about the integrity of Comrade Subramaniam in both private and political life. The author, SK Senthivel in his address of acknowledgment highlighted key events in the life of Comrade Maniam.





  • அறிமுகம்
  • குடும்பச் சூழலும் இளமைக்காலமும்
  • ஐம்பதுகளில் பொதுவுடமைக்கட்சியும் அதன் வட புலத்து வளர்ச்சியும்
  • வடபுலத்துச் சமூக அமைப்புச் சூழலும் பொதுவுடைமைவாதிகளும்
  • அறுபதுகளின் ஆரம்பத்தில் தோழர் மணியம்
  • 1960-64 காலத்திற் கட்சியும் தோழர் மணியமும்
  • தோழர் மணியத்தின் அழியா நினைவுகள்
  • 1963-64 ஆண்டுகளின் முக்கியம்
  • 1965-70 காலத்தில் தோழர் மணியம்
  • 1966 ஒக்டோபர் 21 எழுச்சியும் தோழர் மணியத்தின் பங்களிப்பும்
  • போராட்டங்களின் போது தோழர் மணியம்
  • 1967ன் காங்கேசன்துறை வாலிபர் மாநாடு
  • சங்கானைப் போராட்டத்தில் தோழர் மணியம்
  • மாவிட்டபுரம் ஆலயப் பிரவேசப் போராட்டத்தில்
  • 1972 முதல்1978 வரை
  • வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் போது
  • 1977ன் பின் மாறிய நிலைமைகள்
  • எமது கட்சியும் ஆயுத இயக்கங்களும்
  • எண்பதுகளிற் கட்சியும் தோழர் மணியமும்
  • தோழர் மணியமும் அவரது இறுதி ஆண்டும்
  • புத்தக திருத்தம்
பொதுவுடைமை இயக்க புரட்சிகர முன்னோடிகளில் ஒருவரான கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுதினக் கூட்டம் கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. மு.மயூரன் தொகுத்தளிப்பதையும் முனைவர் சி.சிவசேகரம் சோ.தேவராஜா பேராசிரியர் ஜெயதேவ உயங்கொட சிவ.ராஜேந்திரன் உரையாற்றுவதையும் தோழர் மணியம் நினைவுகள் நூல் எழுதிய சி.கா.செந்திவேல் அதன் முதற்பிரதியை திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியத்திற்கு வழங்குவதையும் கூட்டத்தில் கலந்துகொண்டேரில் ஒரு பகுதியையும் காணலாம்.



Thursday, November 27, 2014

தோழர் மணியத்தாரின் 25வது ஆண்டு நினைவும் அவரிடம் கற்ற 25 பாடங்களும் - சோ.தேவராஜா

 தோழர் மணியத்தாரின் 25வது ஆண்டு நினைவும்

அவரிடம் கற்ற 25 பாடங்களும் -சோ.தேவராஜா-


சமகாலம் என்பது வர்க்கப் பிளவின் ஆளுகைக்குரியது. தொழிலாளர்கள் எனும் உடல், மூளை உழைப்பாளர்கள் ஏறத்தாழ 95 சதவீதப் பெரும்பான்மையினராகவும் மூலதனத்தை முதன்மைப் படுத்தும் பெருமுதலாளிகள் ஐந்து சதவீதத்திற்குட்பட்ட மிகச் சிறுபான்மையினராகவும் சர்வதேசச் சமூகத்தில் உள்ளனர்.

பூவுலகில் மிகச் சிறுபான்மையினரான பெருமுதலாளிகளே இப் பெரும் பூமியை ஆளும் வல்லமை பெற்றோராகத் தம்மைத் தகவமைத்துக் கொண்டனர். அவர்களின் மூலதனம் சகல தேசங்களின் எல்லைகளைக் கடந்தும் ஆட்சி புரிகின்றது.

ஆதிக்க நிதியங்கள், இப் பெரு முதலாளிகளின் ஆட்சி நீடிப்புக்கும் தொடர்ச்சிக்குமாகப் பிரித்தாளும் சூழ்ச்சி மூலம் உலகின் உழைப்பாளர்களின் ஒற்றுமைக்குக் குந்தகமாகச் சாதி, இனம், மொழி, மதம், பிரதேசம், பால், நிறம் ஆகிய வேறுபாடுகளைப் பகை முரண்பாடுகளாக ஊட்டி வளர்த்து, ஊடகங்கள் மூலம் ‘மக்கள் சமூகம்” என்பதையே மறுதலித்து நிற்குமாறு, இப் பூமியை உருமாற்றிக் கொண்டிருக்கும் சர்வதேச ஏகாதிபத்தியச் சதியை நாம் அனைவரும் சமகாலத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

மறுபுறத்தில் ஏகப் பெரும்பான்மையினராகிய உழைப்பாளர் சமூகம் தனது தொழிலாளி என்ற அடையாளத்துக்கு அப்பால் மூலதனத்தை உலகமயமாக்கிய ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிக்குப்பலியாகி குறுகிய அடையாளங்களுக்குள் தம்மை முடக்கிக் கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது.

இக் குறுகிய அடையாளங்களினுள்ளும் குறித்த ‘பெரு முதலாளி” வர்க்கமே தன்னை முதன்மைப்படுத்தித் தலைமைத் தானங்களைத் தன் வசப்படுத்தியுள்ளது. இக் கொள்ளையினால் ஏகப் பெரும்பான்மையையுடைய தொழிலாளி வர்க்க சமூகம் தனது சர்வவியாபகமான அடையாளத்தை தற்காலிகமாக இழந்துள்ளதுடன் ஒடுக்கலுக்குள்ளான சாதி, இனம், மதம், பிரதேசம், பால், நிறப் பாதிப்புக்களுக்குள்ளாகிப் பாரிய ஒடுக்கலுக்குள் மேலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளி என்ற சொற் பாவனையையே துடைத்தெறியுமளவுக்கு நுகர்வுப் பண்பாட்டுச் சுழியில் சிக்கியுள்ள மக்கள் சமூகத்தில் ‘உற்பத்தி” ‘உழைப்பு” என்பவற்றின் அர்த்தம் மழுங்கடிக்கப் பட்டுள்ளது.

ஏற்றத்தாழ்வுகட்கு ஆட்பட்டுள்ள இப் பூவுலகில் உலகத் தொழிலாளர் ஒன்றுபடும் சாத்தியம் அருகிக் காணப்பட்டாலும், யதார்த்தத்தில், நீறுபூத்த நெருப்பாகக் குறுகிய அடையாளங்களைக் கடந்து சர்வதேச மட்டத்தில் ஆங்காங்கு பல முயற்சிகள் நடக்கின்ற தகவல்கள் நமக்கு நம்பிக்கை தருவன.

எனவேதான் தோழர் மணியத்தாரின் 25வது ஆண்டு நினைவு நாளிலே நாம் அவரிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்களை மீட்கும் தேவையும் கட்டாயமும் எமக்கு ஏற்பட்டுள்ளது.

முதவாவதாக, நாம் யார் எனில், தொழிலாளி வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் என எவ்விதக் கூச்சமுமின்றி உரத்துப் பிரகடனப் படுத்திக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஒடுக்கலுக்குள்ளான மக்கள் என்ன வடிவத்தில் (சாதி, இனம் போன்ற பிறவும்) ஒடுக்கலுக்குள்ளாகிறார்களோ அந்த வடிவத்திலேயே தொழிலாளி வர்க்கம் தன்னை அடையாளப்படுத்திக் கால, தேச, வர்த்தமானங்களுக்கமைய வர்க்கக் கண்ணோட்டத்தில் சர்வவியாபக உண்மையான மாக்சியத்தைப் பிரயோகித்துப் போராடும் வல்லமையை வளப்படுத்தும் செய்நிரலை வகுக்கவேண்டும்.

மூன்றாவதாக, ஏகாதிபத்திய-பெருமுதலாளித்துவ-நிலமானியக் கூட்டுச் சேர்கையின் கபடச் செயற்பாட்டுச் செய்நிரலுக்குள் தொழிலாளி வர்க்கமோ கட்சிகளோ அகப்பட்டுப் பலியாகிப்பிளவுபடாமல் தம்மைத் தற்காத்துக் கொள்ளவேண்டும்.

நான்காவதாக, வெகுசனங்கள் மத்தியில் தொழிலாளி வர்க்கக் கட்சியாக ‘இருத்தல்’ அன்றி ‘இயக்கம்’ ஆகச் செயற்படும் ஆளுமை பெறவேண்டும்.

ஐந்தாவதாக, ஒருமுனைவாதம், கதவடைப்புவாதம், சந்தர்ப்பவாதம், தாராளவாதம, திரிபுவாதம் என்பவற்றைத் தாண்டி வெகுசனங்கள் மத்தியிலான வேலைகளில் ஈடுபடுவதன் மூலம் எந்தப் பெருங் கப்பலும் வந்து செல்லக்கூடிய மகா சமுத்திரம் போல ஒவ்வொரு மாக்சிஸ்ற்றும் கொம்யூனிஸ்ற்றும் விரிந்து பரந்த நெஞ்சுடன் பணிபுரியும் வல்லமை பெறவேண்டும்.

ஆறாவதாக, விரக்தி, தோல்வி, நம்பிக்கையீனம் என்பவற்றில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்கள் மத்தியில் நம்பிக்கையையும் வெற்றிகளையும் காணுமாறு வெகுசனங்களின் நம்பிக்கை நட்சத்திரமாகக் கட்சி எனும் ஸ்தாபனம், செல்வாக்குச் செலுத்தி அன்றாட வாழ்வில் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும்.

ஏழாவதாக, கொம்யூனிற் கட்சிக்குள் இருப்போர் மட்டுமே கொம்யூனிஸ்ற்றுக்கள் என்று குறுக்கிப் பார்க்காமல் கட்சிக்கப்பாலும் வேறு கட்சிகளிலும் பல்வேறு தளங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் வாழுகின்ற கொம்யூனிஸ்ற்றுக்களை அடையாளங்கண்டு உறவு பூண்டு மாக்சிச லெனினிச ஸ்தாபனத்தைப் பலப்படுத்தி வேலைகளை விரிவுபடுத்தி முன்செல்லும் தைரியம் பெறவேண்டும்.

எட்டாவதாகக், கட்சி ஸ்தாபனத்துக்குள் விமர்சனம்-சுயவிமர்சனம், ஐக்கியமும் போராட்டமும் என்பவற்றைத் தொடர்ந்து நடத்துவதன் மூலம் உயிர்த்துடிப்புடன் கட்சியை இயங்கச் செய்யவேண்டும். நாளாந்தம் இயக்கம் உருப்பெறவேண்டும்.

சகலதும் கட்சியின் ஐக்கியத்துக்கான அவாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படவேண்டுமே தவிர பிளவுகளுக்கு வழிகோலக் கூடாது.

ஒன்பதாவதாக, கட்சிக்குள் குறுங்குழு மனப்பாங்கற்று, ஒளிவு மறைவின்றி, முற்கற்பிதமின்றி, முடிந்த முடிவுகளின்றி, முற்சாய்வின்றி, சனநாயக மத்தியத்துவத்துடன் திறந்த மனதோடு நிலமானியத் தலைமை விசுவாசத்துக்கப்பால், ஸ்தூல நிலமைகளைச் சரியாகக் கையாளவும் உண்மைகளைக் கண்டறியும் வகையிலும் விவாதங்கள் நடாத்தவும் கோபதாபங்களின்றியும் விருப்பு வெறுப்பற்றும் வெற்றி தோல்வி மனப்பாங்கின்றியும் பூரண சுதந்திரத்துடன் அமைதியான முறையில் நிதானமாகக் கலந்து பேசும் தோழமை உறவு பேணும் வல்லமை அனைவரும் பெறவேண்டும்.

பத்தாவதாக, மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள், துன்ப துயரங்கள், பாகுபாடு, புறக்கணிப்பு எவையாகவிருப்பினும் அவற்றைக் கண்டறிந்து உடனுக்குடன் மக்கள் மத்தியில் நின்று, மக்களுக்கு நம்பிக்கையூட்டி, ஒன்றுபடுத்தி முறையான செயற்பாட்டைத் தூண்டி, வலுவூட்டி அவர்கள் அவற்றிலிருந்து விடுபடவும் பாதுகாக்கப்படவும் வெற்றி பெறவும் வல்ல பல்முனைகளிலும் போராட்ட சூழல்களைக் கண்டறிந்து உருவாக்கி நடைமுறைப் படுத்த வேண்டும்.

பதினொன்றாவதாகக், கட்சி இயங்கும் சூழலிலுள்ள முதலாளித்துவ ஜனநாயகச் சட்டங்களையும் ஏற்பாடுகளையும் பயன்படுத்திக் கட்சியின் வளங்களையும் உட்கட்டமைப்பையும் பொறிமுறைகளையும் உருவாக்கிக் கட்சியைப் பலப்படுத்த வேண்டுமே தவிர ‘வறியவர்களின் கூடாரமாகக்” கட்சியைப் பலவீனப்படுத்தக் கூடாது.

பன்னிரண்டாவதாகக், கட்சி அரசியல் என்பது கட்சியின் சுலோகங்கங்களுடனும் கட்சியின் வருடாந்த நிகழ்வுகளுடன் மட்டும் திருப்திகொள்ளாது பல தளங்களிலும், பல முனைகளிலும் மக்கள் பரந்து வாழும் சகல இடங்களிலும் கடலுள் வாழும் மீன்களைப் போல் கம்யூனிஸ்டுகள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் உயிர்ப்புடன் இருந்து அன்றாடம் புரட்சிர நடவடிக்கைகளை உருவாக்கவும் கொண்டு நடத்தவும் ஆற்றல் பெற வேண்டும்.

பதின்மூன்றாவதாகப், ‘பூரண பொருள்முதல்வாதி அச்சமற்றவன்” என்ற துணிவுடனும் கூச்சமின்றிக் கட்சியின் பத்திரிகைகளையும் வெகுசன ஸ்தாபனங்களின் சஞ்சிகைகளையும் பொது மக்களிடம் விற்கவும் காசு கேட்டுப் பெறவும் அவை பற்றிய குறை நிறைகளைக் கேட்டறியவும் அவை பற்றி குறித்த எழுத்தாளர்களுடனும் கட்சியுடனும் கலந்து பேசவும் செயலாற்றும் வல்லமையுடையோராக ஒவ்வொரு கொம்யூனிஸ்ற்றும் தன்னைத் தகவமைக்கத் தயாராக இருக்கவேண்டும்.

பதிநான்காவதாகச், சொல்லும் செயலும் ஒன்றாயிருத்தல் கொம்யூனிஸ்ற்றின் மையப் புள்ளியாகும்.

பதினைந்தாவதாக, நிலமானிய-முதலாளித்துவ சிந்தனைகள், செயல்கள் அன்றாடம் எம்மை ஆக்கிரமிக்காதபடி எம்மை நாமே, விடாது, சுயவிமர்சனத்துக்குள்ளாக்கிப் புடம்போடுவதுடன் புதிய வார்ப்புகளாக கொம்யூனிஸ்ற்றுகள் மிளிர வேண்டும்.

பதினாறாவதாகக், கொம்யூனிஸ்ற் எவரும் வர்க்க சமரசத்துக்குப் பலியாகாதவாறும் சலுகைகள், விருதுகள், பட்டங்கள், பதவிகள் மூலம் சரணடைவுக்கு இடம் கொடாது புரட்சிகர மனப்பாங்குடன் சிந்திக்கவும் செயற்படவும் துணிவு பெறவேண்டும்.

பதினேழாவதாகக், கொம்யூனிஸ்ற் என்பவர் மக்களுக்குப் பின்னால் வாலாக இழுபடாமல் மக்களோடு மக்களாக மக்களுக்கு முன்னே சென்று வழிநடத்தும் தகைமை பெற்றிருக்க வேண்டும்.

பதினெட்டாவதாகக், கொம்யூனிஸ்ற் என்பவர், தான், தனது குடும்பம், தனது பிள்ளை, தனது உறவினர், தனது பரம்பரையினர் என்ற நிலமானிய-முதலாளித்துவ சிந்தனை வரம்புக்குள் தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளாத நிதானம் பெறவேண்டும்.

பத்தொன்பதாவதாக, நான், எனது என்ற தன்முனைப்பைக் கடந்து ‘ஒருவர் எல்லோருக்காகவும், எல்லோரும் ஒரு வருக்காவும்” என்ற பொதுமையறப் பண்பைப் பூண்டிருத்தல் வேண்டும்.

இருபதாவதாகப், பிறர் எவரையும் நக்கல் நையாண்டி செய்து புண்படுத்தல் போன்ற காரியங்களைத் தவிர்ப்பதும் எல்லோரையும் மதித்து மரியாதை கொடுப்பதும் அவரவர்களது குணநலன்களைப் புரிந்து அதற்கேற்ப அவர்களுடன் உறவைப் பேணுவதும் கொம்யூனிஸ்றுகளின் நடத்தையாகும்.

இருபத்தொராவதாக, எவரெவரிடம் என்னென்ன ஆற்றல்கள் உள்ளனவோ அவ்வவ் ஆற்றல்களை அறிந்து கட்சியினதும் பொதுமக்களினதும் நன்மைக்குப் பயன்படுத்தக் கூடியவராகக் கட்சியின் ஊழியர்கள் விளங்க வேண்டும்.

இருபத்திரண்டாவதாகக், கட்சியில் பணிபுரியும் ஒவ்வொரு புத்திஜீவியையும் ஏழு தொழிலாளர்கள் சூழ்ந்திருக்கும்படியும் அவரது கருத்துக்கள் அன்றாட நடைமுறை இயக்கத்திலிருந்து வெளிவருவனவாகவும் வெறும் புத்தகவாதமாக இல்லாதும் அவதானமாக இருப்பது ஒரு கொம்யூனிஸ்ற்றின் பொறுப்பாகும். அதாவது நடைமுறையே ஒரு கொம்யூனிஸ்ற்றின் உரை கல்லாகும்.

இருபத்திமூன்றாவதாகப், பல்வேறு துறைகளிலுமுள்ள நிபுணத்துவ ஆற்றல் மிக்கோரை அரவணைத்து அவர்களின் ஆற்றல்களை ஒருமுகப்படுத்தவும் அவர்களுக்கடையிலான பேதங்களை நீக்கி ஸ்தாபன நலன் கருதி ஒருமுகமாகச் செயற்படும் திறன்களை வளர்க்கும் முயற்சிகளிலும் இடையறாது ஈடுபடல் வேண்டும்.

இருபத்திநான்காவதாகப், பயனுள்ளதாயினும், எந்தச் செயற்பாடும் ஸ்தாபனத்தின் ஒற்றுமையைச் சிதைக்குமெனில் அதை அவசரமாகத் திணிக்கும் முயற்சிகளிலிறங்காது மாற்றுக் கருத்துடைய தோழர்களும் சுயமாகவே அதை ஏற்கும் மனநிலையைப் பெறும்வரை விட்டுக்கொடுத்துப் பொறுமையாகவும் அமைதியாகவும் நிதானமாகவும் செயற்படுவதில் ஓயக்கூடாது.

இருபத்தைந்தாவதாக, எந்தவொரு கடின உழைப்பும் தியாகமும் அர்ப்பணிப்பும் அவரவரது மகிழ்வுக்கானதாக இருக்க வேண்டுமே தவிர எவரதும் நிர்ப்பந்தத்திலும் கூலி மனப்பாங்கிலும் செய்யப்படுவதாக இருக்கக் கூடாது. ஸ்தாபனத்தின் எந்தவொரு முடிவும் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்பட்டால் அம்முடிவுடன் உடன்படாவிடினும் அதனைச் செயற்படுத்துவதில் தனது பொறுப்பிலிருந்து விலகாதிருக்கவேண்டும்.

 -சோ.தேவராஜா- 2014

Wednesday, November 26, 2014

எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (சூன் 4, 1932 - நவம்பர் 26, 2014) அவர்களின் மறைவுக்கு அஞ்சலி


"தாழ்த்தப்பட்டோரின் இப்போராட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அளவு ஜனநாயக உணர்வு படைத்த ஆதிக்கசாதியினரும் கலந்து கொள்ள நேர்ந்ததற்குக் கம்யூனிஸ்ட் கட்சியே காரணமாக இருந்தது. கே. ஏ. சுப்ரமணியம், நா. சண்முகதாசன் போன்ற தலைவர்கள் அன்று தலைமறைவாக நேரிட்டது. இத்தகைய தலைவர்களின் உருவிலேயே மணியத்தாரை இக்கதையில் எஸ்.பொ. படைத்துள்ளார். இத்தொகுப்பின் முக்கியமான கதை இது. முடிவு சற்றே நாடகத்தன்மையாக இருந்த போதிலும் ஈழத் தமிழை ஆக உச்சமான வீரியத்துடன் எஸ்.பொ. கையாண்டுள்ளார். அவர் சாதி எதிர்ப்புக் கதைகளே எழுதியதில்லை என்கிற குற்றச்சாட்டு தகர்ந்து போகிறது." -அ.மார்க்ஸ்

 "தீண்டத்தகாதவன்" : எஸ்.பொ.வின் ‘களம்’,வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ்


எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (சூன் 4, 1932 - நவம்பர் 26, 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.

"தீண்டத்தகாதவன்" இல் ருந்து மிகுந்த நன்றியுடன் இங்கே மீள் ஒளி செய்கின்றோம்..























 "தீண்டத்தகாதவன்" : எஸ்.பொ.வின் ‘களம்’,வெளியீடு: நிச்சாமம் பதிப்பகம், பிரான்ஸ்

Tuesday, November 25, 2014

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 25வது நினைவு நிகழ்வு Comrade K. A. Subramaniam: 25th Anniversary Event

தோழர் கே.ஏ. சுப்பிரமணியம்: 25வது நினைவு நிகழ்வு
29.11.2014 சனிக்கிழமை பி.ப.04 மணிக்கு 
கொழும்பு தமிழ்ச் சங்கம்
(57 ஆவது ஒழுங்கை, சங்கம் ஒழுங்கை , வெள்ளவத்தை)
தலைமை: பேராசிரியர் சி. சிவசேகரம்
அறிமுகவுரை: சோ. தேவராஜா
கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு

Comrade K.A. Subramaniam: 25th Anniversary Event

29.11.2013 Saturday at 04 pm
Venue:
Colombo Tamil Sangam Auditorium 
(57th  Lane, Wellawatte Colombo 06)
Head: Professor S. Sivasegaram
Introduction: S. Thevarajah
Memorial Lecture:

Prof. Jayadeva Uyangoda

 Vote of Thanks: R.Ranjan

KA  Subramaniam Memorial Committee


பொதுவுடமை இயக்கத்தின் புரட்சிகர முன்னோடி
தோழர் கே.ஏ.சுப்பிரமணியத்தின் 25வது ஆண்டு நினைவுக் கூட்டம்
கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபம்
29.11.2014 சனிக்கிழமை பி.ப. 4.00 மணி
தலைமையுரை
முனைவர் சி. சிவசேகரம்
வரவேற்புரை
சட்டத்தரணி சோ. தேவராஜா
நூல் வெளியீடு
“தோழர் மணியம் நினைவுகள்"
(சி.கா. செந்திவேல்)
முதற் பிரதி பெறுநர்: திருமதி வள்ளியம்மை சுப்பிரமணியம்
நூல் ஆய்வுரை
சிவ. இராஜேந்திரன்
பீடாதிபதி, மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரி
ஏற்புரை
சி.கா. செந்திவேல்
நினைவுப் பேருரை
“இணக்கத்தின் இணங்க இயலாமை:
போரின் பின்னான இணக்கம்: தனிமைகள் கடந்து சிந்தித்தல்"
பேராசிரியர் ஜயதேவ உயன்கொட
நன்றியுரை
தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு

Tuesday, October 21, 2014

தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் மறைந்து 25 வருடங்களில் சில பதிவுகள் - லெனின் மதிவானம்

தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான நா. சண்முகதாசன்,  மு கார்த்திகேசன்  என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர்.  ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த பரிமாணமாகவும் இருந்தவர் கே.ஏ.சுப்பிரமணியம்.  

ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிராக ஓர் உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று பேராடிய இத்தோழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. அவர் மறைந்து 25 ஆண்டு நிறைவை அடையும் இத்தருணத்தில், இந்த இருபத்தைந்து வருடங்களில் நமது நாட்டிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலே விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய முக்கிய புருஷர்களில் ஒருவராகிய  மணியம் பொறுத்து வெளிவந்த நினைவு மலரைத்தவிர ( தோழர் மணியம் நினைவு மலர்,  கே.ஏ. சுப்பிரமணியம் நினைவுக் குழு வெளியீடு, யாழ்பாணம், 1989).   வேறு உருப்படியான  ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை.

தோழர் மணியத்தை ஆராயவும் மதிப்பிடவும் அன்னாரின் சிறப்பியல்புகளையும் பங்களிப்பையும் புறவய நிலையில் சீர்தூக்கி பார்ப்பதும் காலத்தின் தேவையாகும்.  வரலாற்றுப் பின்னணியில் இவரை முன்னிறுத்தி மதிப்பீடு செய்யும் முயற்சிகள் வெளிக் கொணரப்படவேண்டும். அவை முக்கியமாக மூன்று நிலைகளில் நடைப்பெற வேண்டும். 
  • முதலாவது அன்னாரை பல்துறை நோக்கில் அணுகி ஆராயும் மதிப்பீடுகள், ஆய்வுகள் வெளிவர வேண்டியுள்ளது.
  • இரண்டாவதாக அவர் வழி வந்த தலைமுறையும் அவர்களின் சிறப்புகளும் மணியத்தாரின் மரபு மாறியும் மாறாமலும் செயற்பட்டு வந்துள்ளமை குறித்த ஆய்வும் மிக அவசியமானதாகும்.
  • முன்றாவதாக அவர் தொடர்பில் வெளிவந்த மதீப்பீடுகள் ஓப்பிட்டளவில் மிக குறைவாக காணப்பட்ட போதினும் அவைக் குறித்த விமர்சனங்களும் அவசியமானவையாகின்றன.
இவ்வடிப்படையில் நோக்குகின்ற போது இவர் பொறுத்த நினைவுரைகள் மற்றும் நூல் சமர்பணங்கள் என்பன அவசியமானவையாக இருந்த போதினும் அதற்கு அப்பால் இவ்வாளுமைக் குறித்த ஆய்வுகளும் மதீப்பீடுகளுமே காலத்தின் தேவையாக உள்ளது. பிரபல்யங்களுக்கு அப்பால் மக்கள் மத்தியில் இவர் முன்னெடுத்த விலைமதிப்பற்ற செயற்பாடுகளை அவர்கள் எந்தளவு மதித்திருந்தார்கள் என்பதற்க்கு அவரது "விடை பெறுகின்றேன்" என்ற ஒலி ஒளி நாடா சாட்சியமாக இவர் பற்றிய மேலும் பல தகவல்களை தருவதாக அமைந்திருக்கின்றது. இடதுசாரி இயக்க வளர்சிக்கு குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இவ்வாளுமை கொடுத்த நம்பிக்கை குரல் ஒரு பலமாகும்.   அவர் செயலாற்றி நன்மதிப்பை பெற்றிருந்த பொது மக்கள் தொழிலாளர்கள், விவசாயிகளாக இருந்தமையால் அவர்களால் தமது உணர்வுகளை எழுத்தில் பதிய முடியாமல் போய்விட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். பொது மக்கள் மத்தியில் செயற்பட்ட பல ஆளுமைகள் இவ்வாறு மறைக்கப்பட்டமைக்கு மேற்குறித்த காரணி முக்கியமானதாக காணப்படுகின்றது.         என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் வளத்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்தது.


இத்தோழரின் அரசியல் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம்,  விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு ஆகும். அவருடைய ஆளுமை பல்துறைசார்பானது. அவரில் வெளிப்பட்ட அரசியல்   பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும்  சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்தார். குறிப்பாக இலங்கை இந்திய இடதுசாரிகள் பலர்,  தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில்  சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். தோழர் மணியம் இதனைப் புரிந்து கொண்டு தமது ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.

அந்தவகையில் அவர் முன்னின்று முன்னெடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகும். இந்தியாவிலே ஏ. கே. கோபாலன்  முதலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் முன்னெடுத்த கோயில் நுழைவுப் போராட்டத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டு நமது சூழலுக்கு ஏற்றவகையில் அவ்வனுபவங்களை முன் வைத்து  தமது போராட்டங்களை முன்னெடுத்தார்.  

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போரட்டம் நடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நிலப்பிரபுத்துவ சக்திகள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரினால் துப்பாக்கிச் சூடு, கைக்குண்டு வீச்சு,  சம்பந்தப்பட்டவர்களது வீடுகளைத் தீயிட்டு எரித்தல், ஒடுக்கப்பட்டோர் தமது வாழிடத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளின் பொருட்டும் வேறிடம் செல்லவிடாது தடுத்தல், அவர்களது விவசாயப் பயிர்களை நாசம் செய்தல், பிரேத ஊர்வலங்களின் மீது துப்பாக்கித் தாக்குதல்- பிரேதங்களை மயானங்களில் எரிக்கவிடாது இடையூறு விளைத்தல் போன்ற அநாகரிக நடவடிக்கைகளில் சாதிவெறியர்கள் ஈடுபட்ட காலகட்டம் அது. அத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1966 ஒக்டோபர் எழுச்சியோடு ஆரம்பமான ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1969 இன் இறுதிப்பகுதிவரை நீடித்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் உட்படப் பல ஆலயங்களும் வட பகுதியிலுள்ள சகல தேனீர்க்கடைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டு, சமத்துவம் பேணப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிபெற்று போராடிய காலத்தில் அந்த மக்களுக்கு சரியான திசை வழியைக் காட்டி, போராட்டத்தை நெறிப்படுத்திய கொம்யூனிஸ்ட் கட்சியும், தோழர் கே.ஏ.சுப்பிரமணியமும் என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் நினைவுகூரப்படுவார். (கே.சுப்பையா http://www.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm)

மணியத்தாரின் காலத்திலும் அதற்கு சிறிது முன்பின்னாகவும் சாதிப்பிரச்சனைகள் குறித்து இருவேறு போக்குளை பிரதிப்பலித்தோரைக் காணக் கூடியதாக இருந்தது. ஒருப் பிரிவினர், சாதியவாதக் கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள். இவர்களே பெரும்பான்மையினர். வழி வழி வரும்  சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இறுகப் பற்றிக் கொண்டு அதனடியாக எழுந்த சாதிய அடக்கு முறைகளின் பின்னணியில் எழுந்த கோபாவேசம் வெறுமனே ஸ்தாபன மற்றக் கலகக் குரலாக எரிந்து அனைவதாக அமைந்திருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே மேழுந்த மத்தியதர வர்க்கத்தினர் தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே உழைக்கும் மக்களிலிருந்து அந்நியப்பட்ட கலாசாரப் போராட்டத்தை முன் வைத்தனர்.  இவர்களின் போராட்டம் என்பது தலித் மத்தியதர வர்க்கம் சாந்த விடுதலையாகவே அமைந்திருந்தது.

இன்னொரு பிரிவினர் சாதிப் பிச்சனையை வர்க்கப் பிரச்சனையிலிருந்து பிரித்து நோக்கினர். இவர்கள் கொண்டிருந்த வரட்டுத்தனமான வர்க்கப் பார்வை ஒரு விதமான சமரசத்திற்கே இட்டு சென்றது. இவர்களின் பார்வையிலும் சிந்தனையிலும் இயக்கவியலின் சாயல் கூட இருக்கவில்லை. முரண்பாட்டின் அடிப்படைகளை நோக்காது ஒன்றை மட்டும் பற்றுக்கோடாக கொண்டவர்கள் இருசாராரும். இவ்வாறான சூழலில் சாதிய போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் அங்கமாக பார்த்தவர் தோழர் மணியம்.  சாதியத்தின் பரிமாணங்களையும் கொடுமைகளையும் ஒரு சேர நோக்கி பூரணவிடுதலைக்கான மார்க்கத்தை தெளிவுப்படுத்திமையே அவரது முக்கிய பங்களிப்பாக விளங்குகின்றது. சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான போரட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வெகுசன அமைப்பாக திரட்டியிருந்தமையே இவரது காத்திரமான பங்களிப்பாகும்.  இவ்வகையில் இலங்கையின் இடதுசாரிகள் எமது சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமாகும். தமிழர் பண்பாட்டு சூழலில் சாதிய முரண்பாடுகள் வர்க்கப் பிரச்சனையாக உருமாறியிருக்கின்றது என்பதை இயங்கியல் பார்வையில் அடையாளம் கண்டு கொண்டமை மணியத்தாரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.  அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைப்பாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். அவர் சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் மற்றவர்களை விட அதிக ஆர்வத்துடன் விரும்பி செயற்பட முனைந்தமையினாலேயே அவரது வாழ்வு அதனையொட்டியே அமைந்திருந்தது.

இவரது தன்னலமற்ற பங்களிப்பு பற்றி அன்றைய காலச் சூழலில் அவரோடு தொடர்பு கொண்டிருந்த போரசிரியர் தில்லைநாதன் அவர்களின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது.

"அதிகாரத்திற்கும் பதவிக்கும் பிரசித்திக்கும் அரசியலைப் பலர் பிரயோகித்த ஒரு சூழ்நிலையிலும், அவற்றில் நாட்டமின்றி, சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் ஏழைகளுக்கு விடிவு காண விழைந்த ஓர் அரசியலுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர் அவர். அந்த அரசியல் நெறி பலமடைய வேண்டிக் கடுமையாக உழைத்தமையும், தொல்லைகள் நோய்களை உதாசீனஞ் செய்தமையும், ஏனையவர்களை நேசக் கரம் நீட்டி அணைத்துக் கொண்டமையும், ஏற்ற முயற்சிகளை உற்சாகப்படுத்தியமையும் திரு. சுப்பிமணியத்தின் சிறப்புகளாயின. மரணம் நெருங்கிவருவது பற்றிய உணர்வு தோன்றிய நிலையிலும் எடுத்தக் காரியங்களைச் செவ்வனே முடிக்க வேண்டுமென்ற துடிப்பே அவரிடம் மேலோங்கியது"(மே.கு.நூ).
               
 
 இலங்கையில் தமிழர் சார்ந்த விடுதலை இயக்கங்களை தோற்று வித்து அவற்றை தவறான திசையில் இட்டுச் சென்றதில் இந்தியாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்திய விஸ்தரிப்பு வாத்தின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. இந்தியா இலங்கை தொடர்பில் மேற்கொண்டு செயற்பாடுகள் அனைத்தும் இலங்கையை இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றாக்கும் பிராந்திய மேலாதிக்க தன்மையின் அடிப்படையிலேயே அமைந்து இருந்தது.

          கம்யூனிஸ்ட் கட்சி  இடது 1977 இல் நடைபெற்ற தேர்தல்கள் வரை அவற்றை   பகிஸ்கரித்தே  வந்தது. 1989 இல்,  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரதிபலிப்பாய், இந்திய இராணுவம், எம் தேசத்தினுள் செங்கம்பளம் விரித்து , அரசாலும், தமிழ் பாஸிச சக்கிகளாலும் வரவேற்க்கப்பட்டது.  அதன் பயனாய் மக்கள் பட்ட அவஸ்தை, அழிவு, இழப்பு  நாம் அறிந்ததே .அந்தநிலையில் 1989 இல் யாழ் - பண்டத்தெருப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு   சிறிமாவோ பண்டரநயக்காவை  வரவேற்றதுக்கு ஒரே காரணம் இந்திய விஸ்தரிப்புவாதமே ஆகும். . மணியத்தார் தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் குமார் பொன்னம்பலம், மோதிலால் நேரு, வினோதன் முதலானோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பெரும் தொகையான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்கள். இக் கூட்டத்தில்  மணியத்தார் 

"தமிழ் மக்களின் பிரச்சனை எது? எப்படி தீர்வு காணவேண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இன்று நாம் போராடும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நிற்கிறோம் . தவிர சொந்த அபிலாசைகளுக்காகவோ , வேறு எதற்காவோ நாம்  இங்கு நிற்கவில்லை.. சிறிமாவோ இந்த ஒப்பந்தத்தை , இந்திய இராணுவத்தை அகற்ற முயல்வார் என்று நம்புகிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இன முண்பாட்டுக்கான தீர்வு என்பது இந்திய மேலாதிக்க நலனுக்கு அப்பால் அது இலங்iகை மக்களின் நலனை பிரதிப்பலிக்க வேண்டும் என்பதல் உறுதியாக இருந்துள்ளார். இக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கும்,  இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்கும் மத்தியில் உரையாற்றி விட்டு தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார்  என தோழர்களும் அவரது மனைவியும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். 

         பின்னர் கடும் சுகவீனமுற்று , மருத்துவ மனையில் இருந்து வெளிவந்து யாழ் - ஸ்டான்லி வீதியில் 1989-05-01  அன்று நடைப்பெற்ற  மே தினகூட்டத்தில்  "அரசு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறதென்றால்,  நாம் ஏற்கனவே கூறிய உண்மை "உண்மைதான்' என்பதை அதன்  விளங்கிக் கொள்ள முடியும் .நாம் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோம் .அதேநேரம் அது பூச்சண்டியாக அமையக்கூடும். அது உண்மையாக இரு இனங்களும்,  எமது நாட்டில்  சுதந்திரத்துடனும்,  இறையான்மையுடனும் வாழக்கூடியதான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும்  ஏற்ற வழி அமைக்கப்படவேண்டும். அதற்க்கு முன்பாகவே, வெலியோயா தனி மாவட்டமாக அமைப்பதைக் கைவிடவேண்டும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி , ஏன் முற்றாகவே கைவிடவேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது வலியுறுத்தி நிற்கிறது . இதன் மூலம் தான் பேச்சுவார்த்தைக்கு போகக் கூடிய ஸ்தாபனங்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையைத் தரும். பரஸ்பரம் விடுக்கொடுத்து பேச்சுவார்த்தையை   நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகமுடியும் . இதனைவிடுத்து இலங்கை அரசின் விருப்பத்தின் பேரிலோ, இந்திய அரசின் பேரிலோ ,ஒருதலைப்பட்ச முடிவுகளின் பேரிலோ ஏற்படுத்தப்படக்கூடிய தீர்மானங்களும், முடிவுகளும், ஆயுதங்களும் எமது தேசத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது . இதுவே எமது நிலைப்பாடாகும் ". எனக் குறிபிட்டுள்ளமை அவரது தன் முனைப்பறற நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை அரசு, இந்திய அரசு, ஏனைய விடுதலை அமைப்புகள் மூன்றும் ஒன்றுகதைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வெற்றிகானக் கூடிய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், அதைவிட்டு ஒன்றிற்கொன்று கழுத்தறுப்பு வேலைகளை செய்வதாக அமையும்.  எமது நாட்டிற்கும். மக்களுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். ஆரம்பக் காலந் தொட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பீட்டர் கெனமன்,  விக்கிரமசிங்க போன்றோர் தலைமையிலும் சரி, பின்னர் கருத்துவேறுபாட்டு பிரிந்த பின்னரும் சரி 'அந்நிய தலையீடு ' பற்றி எச்சரித்தே வந்துள்ளனர்.  இதனை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள்,   விடுதலை இயக்கங்கள் கவனத்தில் கொள்ள தவறிவிட்டன. 1983 இனக் கலவரத்தை சாதகமாக்கி இந்தியா தன்னுடைய விஸ்தரிப்பை ஆரம்பித்தது. அதனை இலங்கை அரசும் ஆதரிப்பது போன்றே நடந்துகொண்டது. இந்தப் பின்னணியில் ஒப்பந்தம்  உருவாகினது. இது பல வகையிலும் குழப்பமான ஒன்றாகவே காணப்பட்டது. சில விஷயங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிர்காலத்திற்கும் உதவக்கூடிய அம்சங்கள் உள்ளன. ஆனால் ஒப்பந்தத்தில் காணப்படும் பெரும்பான்மையான விடயங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சகல இலங்கை மக்களையும் பாதிக்கக் கூடியதே . எனவே இவ்வகையான பாதகங்களை எதிர்க்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என்பதில் மணியத்தார் உறுதியாகவே நின்றுள்ளார்.

         இந்தியாவின் தலையீட்டை  இடதுசாரிகள் ஆரம்ப கால முதலாகவே எதிர்த்து வந்திருந்த போதினும்  இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்ந்தம் என்ற காரணத்தினால்,  சில  விட்டுக் கொடுப்பை இலங்கை மக்கள் செய்யவேண்டியிருந்தது. அந்த விட்டுக்கொடுப்பும் .முத்தரப்புப் பேச்சுவார்த்தையுமே  தீர்வாக அமைய முடியும் என்பதை வலியுறுத்திய பின் தோழர் மணியம் மீண்டும் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டு கண்டியில் இருந்த காலத்தில் விடைபெற்றுக்கொண்டார்.   

         அரசியலில் மட்டுமன்றி இலக்கியத்திலும் அத்தகைய ஈடுபாட்டினையே  கொண்டிருந்தார். தாயகம் சஞ்சிகையின் தொடர் வெளியீட்டுக்கும் காரணமாயிருந்துள்ளார். தாயகம்  சஞ்சிகையின் இதழ்களுக்கு இறக்கும் வரை தொடர்ந்து அவர் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளார் என திருமதி.வள்ளியமை சுப்பிரமணியம், திருமதி. இரவீந்திரன் (மகள்) ஆகியோரும்  சொல்லக் கேட்டிருக்கின்றேன். அப்படியாயின் அவையாவும் தொகுக்கப்பட்டு அவரது 25 நினைவையொட்டியாவது வெளியிட வேண்டியது காலத்தின் தேவையாகும். மேலும் தேசிய கலை இலக்கிய பேரவை என்ற கலை இலக்கிய பண்பாட்டமைப்பை உருவாக்கி அதனூடே சமூகம் சார்ந்த பல செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார். இவ்மைப்பின் ஊடாக பலர் தமது சமூகம் சார்ந்த அறிவை பட்டைத்தீட்டிக் கொண்டதுடன் பல புதிய தலைமுறைகள் இலக்கியத்தில் பிரவேசம் கொள்ளவும் காரணமாக அமைந்திருக்கின்றார். விடுதலை சார்ந்த இலக்கியங்களை தாம் ரசித்து கற்றதாகவும் பின் அவற்றை ஏனையோர் கற்கும் படியும் வழிகாட்டி நின்றமைக் குறித்து பலர் பதிவாக்கியுள்ளனர்.   அரசியல் வாதிகள் தவிர்ந்து கலை இலக்கிய வாதிகளுடனும் நேசப்பூர்வமான உறவினை பேணிவந்துள்ளார் என்பதை கைலாசபதி, கவிஞர். இ. முருகையன், சி. தில்லைநாதன், மௌனகுரு, பெ.சு.மணி,  கே. கணேஷ் முதலானருடனான உறவுகள் எடுத்துக் காட்டுகின்றன.  இது பற்றிய பதிவுகளை , முருகையன், கே. கணேஷ்,  சி. தில்லைநாதன், சி. சிவசேகரம், அ. சண்முகதாஸ், திருமதி. சர்வமங்களம் கைலாசபதி,சி. பற்குணம், ஏ. ஜே. கனகரட்னா, ந. இரவீந்திரன் முதலானோரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளிக்கொணர்கின்றன. 

     அந்தவகையில் ஒருநாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு இலக்கியம் உயிர் நாடி என்பதை அடிக்கடி கே. ஏ. சுப்பிமணியம் எடுத்துரைத்தார். சீனாவின் அயல் மொழிப்பதிப்பகத்தால் 1976 தொடங்கி தமிழ் நூல்களை வெளியிடாமைக் குறித்து வருந்தியதுடன் அவர்கள் மீண்டும் அவற்றை வெளிவரச் செய்வதில் ஆரவங்காட்டினார். மறைவிற்கு இரு கிழமைகளுக்கு முன்னால் கொழும்பில் நடந்த நூற்களின் பொருட்காட்சியிற் கலந்துக் கொண்டதுடன், மீண்டும் தமிழில் சீன நூற்கள் வெளிவர வேண்டும் என்பதனையும் சீனத்தினின்று வந்திருந்த குழுவினரிடம் வற்புறுத்தியதாகத் தெரிகின்றது (கே. கணேஷ் ,மே.கு.நூ).

இவ்வாறே அவர் வாழ்ந்த காலத்தில் தேசிய கலை இலக்கிய பேரவையின் மூலம் சி. சிவசேகரம், இ. முருகையன், ந. இரவீந்திரன், க. தணிக்காசலம் முதலானோரின் நூல்கள் வெளிவருவதற்கும் மணியத்தார் காரணமாக இருந்துள்ளதை  இ. முருகையன் பதிவாக்கியிருக்கின்றார். இவ்வாறு இலக்கிய நேர்மையும் திறமையும் கொண்டு செயற்பட்ட அன்னாரின் இழப்பு இலக்கிய துறையிலும் பாதிப்பை செலுத்தியது எனக் கூறின் தவறாகாது. 

         யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தெலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார். அவரது அரசியல் தத்துவம் நடைமுறை என்பன மலையகத்தில் வேர் கொண்டு கிளைப்பரப்பியது. ந. இரவீந்திரன் ஊடாக மலையககத்திலே மார்க்சிய அரசியல் சார்ந்த அணியொன்றினைக் கட்டியெழுப்பியிருந்தார்.  இது பற்றி அவரது இறப்பையொட்டி இலங்கை ஜனநாயக வாலிப முன்னணியின் மலையக கமிட்டி வெளியிட்ட செய்தியில் பின்வரும் பந்தி கவனத்தில் கொள்ளத்தக்கது:  
"1980 ஆம் ஆண்டு வாலிபர் இயக்கம் தலவாக்கொல்லையில் தமது மாநாட்டை நடத்திய போது அதில் கலந்துக் கொண்டு முக்கிய உரையாற்றினார். மாநாட்டின் தயாரிப்புக் கூட்டங்களை வாலிப இயக்கம் மலையகத்தின் பல்வேறு பாகங்களிலும் நடத்திய போது அப்பகுதிகளுக்கெல்லாம் சென்று தோட்டத் தொழிலாளர்களோடு உறவாடி உரமிட்டவர் தோழர் மணியம். பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டி மக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகளை  வாலிபர் இயக்கம் முன் வைத்த போது  அதற்கான சரியான ஆலோசணைகளை வழங்கி பல பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வழி காட்டியவர் மணியம்.
        இவ்வகையில் மலையகத்தில் பின்னாட்களில் அரசியலில் பிரவேசம் கொண்ட  திருவாளர்கள். இ. தம்பையா  , ஜோன்சன், வ.விஜயரட்ணம் இன்னும் இது போன்ற பலர் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அத்துடன் மலையகத்தில் அரசியல் தொழிற்சங்க முரண்பாடுகளை கடந்து ஒரு வெகுசன மார்க்கத்தில் மக்களை ஒன்றினைக்கும் பணியும் கட்டியெழுப்பட்டிருந்தது.  
1964 இன் முற்பகுதியில் நடைபெற்ற ‘பதுளை மாநாட்டிற்காக நடந்த ஊர்வலத்தில் தலைமைத் தோழர்களான தோழர் -பீட்டர் கெனமன், தோழர் சரத் முத்தட்டுவேகம, தோழர் தர்மதாச இவர்களுடன் வடபிரதேச வாலிபர் சங்க செயலாள்ராக இருந்த தோழர் மணியம் அவர்களும் முன்னணியில் சென்று உரை நிகழ்தினார் (தகவல் .திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை). 
      இலங்கையில் இடதுசாரி இயக்க வளர்ச்சியிலே மணியத்தாருக்கு ஓர் உயர்ந்த இடமுண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் அவர் பற்றிய நினைவுக் குறிப்புகள் மதிப்பீடுகள் ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவரது எழுத்துக்கள் எல்லாம் நூல் உருப்பெற வேண்டும். அவர் பற்றிய தேடல்களும் ஆய்வுகளும் பெருக வேண்டும். அப்போது தான் தோழர் மணியத்தின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். 
இலக்கிய- சமூக தளம்: படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்(அச்சில்) என்ற நூலிருந்து.........நமது மலையகம்  http://www.namathumalayagam.com/2013/12/blog-post_23.html

Tuesday, July 1, 2014

பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா நூற்றாண்டு உரையாடல் Respectable Comrade Pon Kandiah Centenary Dialogue


பெருமதிப்புக்குரிய  தோழர் பொன்.கந்தையா அவர்கள்

Respectable Comrade Pon Kandiah

1 July 1914 –  8 September 1960

சுதந்திரன் 1960.09.11 ஞாயிறு பதிப்பின் செய்தியின்படி பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா "வியாழன்" 8 செப்டம்பர் 1960 அன்று காலமானார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 


According to the above news from சுதந்திரன் 1960.09.11 Sunday Edition mentioned that Respectable Comrade Pon Kandiah passed away on "Thursday". 8 September 1960

பள்ளி நாட்களில் மதிப்பிற்குரிய தோழர் பொன் கந்தையா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் அவரது விடுதித் தோழரின் கூற்றுப்படி "ராஜசிங்கம்" என்று அழைக்கப்பட்டார். - ஏ.நீலகண்டன் (வேலணை மத்திய கல்லூரி ஆசிரியர்)

In School Days Respectable Comrade Pon Kandiah was known as "Rajasingam" according to his Hostel Mate at Jaffna Hindu College Mr. A . Neelakandan ( Teacher at Velanai Central College )

"வெவ்வேறு காலங்களில் வரலாறு ஒரு சமூகம் அல்லது நாட்டின் வாழ்க்கை சார்ந்த பல்வேறு கேள்விகளை முன்வைக்கிறது. இந்த நாடு தனது அரசியல் சுதந்திரத்தை வென்றபோது, ​​நாட்டின் தீர்க்கமான முக்கியமான அடுத்த கேள்வி பொருளாதார வளர்ச்சி என்று நான் கூறுகிறேன். அதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். எனவே நாட்டின் பொருளாதார நலனை மேம்படுத்தி, அது அரசியல் சுதந்திரம் மற்றும் மக்களின் நலன் மற்றும் மகிழ்ச்சியை வலுப்படுத்தும்.எமக்கு பொருந்தக்கூடிய வேறு ஏதேனும் கேள்விகள் இந்த மிக முக்கியமான மற்றும் தீர்க்கமான கேள்வியின் பின்னணியில் தீர்க்கப்பட வேண்டும். நாடு. மொழி கேள்வி அத்தகைய கேள்விகளில் ஒன்றாகும்." -பொன் கந்தையா 4 மே 1956 அன்று பாராளுமன்ற விவாதத்தின் போது.


"At different times history poses different questions on which depend the life of a community or country. When this country won its political freedom, I say that next question of decisive importance for the country was the economic development. We must take those measures which will so promote the economic welfare of the country, that it will reinforce the political independence and the welfare and happiness of the people. Any other questions that conforny us must be solved in the context of this supremely important and decisive question of the economic development of the country. The language question is one such question." -Pon Kandiah on 4th May 1956 during Parliament Debate.



தனிச் சிங்களச் சட்டத்தின் மீது பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா அவர்கள் ஆற்றிய உரை
சில தமிழ் இனவாதிகள் கம்யூனிஸ்ட்டுகள் இலங்கைத் தமிழ் மக்களின் இனப் பிரச்சினை சம்பந்தமாக எதுவும் செய்யவில்லை என்று அன்றும் இன்றும் கூறி வரலாற்றைத் திரித்து வருகிறார்கள். உண்மை அதுவல்ல என்பதற்கு எண்ணற்ற உதாரணங்கள் இருக்கின்றன.
உண்மையில் உலக வரலாற்றை எடுத்துப் பார்த்தால், ரஸ்யாவில் லெனின் தலைமையில் அமைந்த முதல் சோசலிச அரசுதான் சிறுபான்மை தேசிய இனங்களுக்கு முதன்முதலாக சுயநிர்ணய உரிமை வழங்கியது. அதன் பின்னரே சுயநிர்ணயம் என்ற சொல் அகராதியில் இடம் பெற்றது என்றுகூடத் துணிந்து கூறலாம்.
இலங்கையில் 1956இல் ஆட்சிக்கு வந்த பண்டாரநாயக்க அரசு நாட்டின் ஆட்சி மொழியாக சிங்களம் மட்டும் இருக்க வேண்டும் என்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தது. அந்தத் ‘தனிச் சிங்கள’ சட்டத்தை நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த இரண்டு இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியும், லங்கா சமசமாஜக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. அப்பொழுது அந்தச் சட்ட மூலம் சம்பந்தமான விவாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் பொன்.கந்தையா அவர்கள் நிகழ்த்திய உரையின் சில முக்கியமான பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன. இது கம்யூனிஸ்ட்டுகள் தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சினை சம்பந்தமாக மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒரு உதாரணம் மட்டுமே.- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள்
30 நவம்பர் 1989 இல் தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவேந்தல் கூட்டத்தின் போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) தோழர் சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள் உரையாற்றினார் .

“இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான எனது கருத்து நோக்கு நான் ஒரு தமிழனாக இருக்கிறேன் என்ற உண்மையை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகிறேன். எனது கடந்த காலத்தினையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கிறது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம் சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும்.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது. எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியைப் பிரயோகிக்கக்கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற, கொண்டிருக்கக்கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கிறீர்கள்.
நான் ஒரு கம்யூனிஸ்ட்டாக இருப்பதில் பெருமையடைபவன். இப்போதைய சமூக பொருளாதாரக் கட்டமைப்பாலும், இதனைப் பாதுகாக்கின்ற அரசியல் நிறுவனங்களாலும் நசிபட்ட, காயப்பட்ட மக்களைக் கொண்ட அமைப்புத்தான் எமது கட்சி. சுரண்டலிலும் கொடுங்கோன்மையிலும் நிலைகொண்ட அநீதியான சமூகங்கள் அறியாமையிலும் விரக்தியிலும் அவலங்களிலும் வாழ்கின்ற ஆயிரமாயிரம் மக்களைக் குப்பைக் குவியல்களில் வீசியெறிந்து கொண்டிருக்கின்றன. குருட்டாட்ட சக்திகளின் நிரந்தர துன்புறுத்தலுக்கு இலக்காகும் அவர்கள் அவற்றைப் பற்றிப் புரிந்து கொண்டு துடைத்தெறிய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். இவ்வாறு உரிமை மறுக்கப்பட்டவர்களின் கட்சிதான் கம்யூனிஸ்ட் கட்சி. அரசியல், பொருளாதார, சமூக ரீதியான எல்லா மட்டங்களிலும் அவர்களது உரிமைகளுக்காக இது போராடுகின்றது. ஒடுக்குமுறை என்ன வடிவத்தில் தோன்றினாலும் அதற்கெதிராக எமது கட்சி போராடுகின்றது.
எமது அரசியற் தத்துவத்தின் இந்த அடிப்படை காரணமாகத்தான் கம்யூனிஸ்ட் கட்சியினரான நாங்கள் முழுப் பலத்துடன் இந்த மசோதாவை எதிர்க்கின்றோம். இந்த நாட்டில் வாழ்கின்ற எல்லாத் தேசிய இனத்தவர்களும் தமது மொழியைப் பியோகிக்கவும், தங்களைத் தாங்களே தமது மொழியில் ஆளவும், தமது மொழியையும் பண்பாட்டையும் வளர்க்கவும் விருத்தி செய்யவும் இயல்பானதும் தலையிடப்படாததுமான உரிமையைக் கொண்டுள்ளார்கள் என நம்புகிறோம். மற்றெந்த மொழிக் குழுக்களையும் விட, எந்த மொழிக் குழுவும் கூடுதலாகவோ குறைந்ததாகவோ கொண்டிருக்க முடியாத ஒரு உரிமைதான் இது.”-பொன்.கந்தையா

பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா அவர்கள் பற்றி பெருமதிப்புக்குரிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் எழுதிய அஞ்சலிக் கட்டுரை

பெருமதிப்புக்குரிய  தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள்

பெருமதிப்புக்குரிய தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள்

கம்யூனிஸ்ட் கட்சியின் பருத்தித்துறை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1956இல் தெரிவான தோழர் பொன்.கந்தையா அன்றைய இலங்கை அரசு கொண்டு வந்த ‘தனிச் சிங்கள’ சட்டத்தை எதிர்த்து நாடாளுமன்றத்தில் நிகழ்த்திய உரையின் ஒரு பகுதியை எனது முன்னைய பதிவில் பிரசுரித்திருந்தேன். அதைப் பலரும் வரவேற்றுப் பாரட்டியிருந்ததோடு பகிர்ந்தும் இருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எனது நன்றி.
ஆனால் இன்றைய தலைமுறையைச் சேர்ந்த பலருக்கு பொன்.கந்தையா அவர்களின் வாழ்க்கை வரலாறு தெரிந்திருக்கவில்லை. எனவேதான் இந்தப் பதிவில் கந்தையா அவர்களின் உற்ற தோழரும், கம்யூனிஸ்ட் கட்சியில் அவருடன் ஒன்றாகப் பயணித்தவருமான காலஞ்சென்ற தோழர் மு.கார்த்திகேசன் அவர்கள் பொன்.கந்தையா காலமான (1914 – 1960) போது “தியாகச் சுடர்” என்ற தலைப்பில் எழுதிய அஞ்சலிக் கட்டுரையைக் கீழே பதிவிட்டுள்னேள்.
நன்றி.- இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) சண்முகம் சுப்பிரமணியம் அவர்கள்

"தனது 46ம் வயதில் தோழர் பொன்.கந்தையா மரணம் அடைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியும், சுதந்திரம், ஜனநாயகம் முதலிய முன்னேற்ற நோக்கங்களுக்கான பரந்த முற்போக்கு இயக்கமும் பெரும் நஸ்டமடைந்துவிட்டன. இந்நஸ்டம் சுலபமாக நிவர்த்தி செய்யக் கூடியதொன்றல்ல.
1915ல் வடமராட்சிப் பகுதியிலுள்ள கரவெட்டி என்ற கிராமத்தில் ஒரு கீழ் மத்தியதரக் குடும்பத்திலே கந்தையா பிறந்தார். அவர் வாழவிருந்த சரித்திரக் காலத்திற்கும், அவர் நடத்தவிருந்த வாழ்வுக்கும் அவர் பிறந்த காலகட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது. அது முதலாம் உலக யுத்தம் நடந்த காலம். முதலாளித்துவ தத்துவத்தின் நெருக்கடியான நிலை உத்வேகமடைந்து வந்த காலகட்டம். இன்னும் இரு வருடங்களில் உலக சரித்திரத்தின் முதல் சோசலிசப் புரட்சி உத்வேகமடைந்து, முதலாளித்துவ நெருக்கடியிலிருந்து விடுதலை பெறுவதற்கு வேண்டிய இயக்கம் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. என்றும் மறக்க முடியாத, போற்றித் துதிக்கப்படும் லெனினுடைய தலைமையிலும், சக்தி வாய்ந்த போல்ஸ்விக் கட்சியின் தலைமையிலும், மகோன்னதமான ருஸ்யப் புரட்சி உருவாகிக் கொண்டிருந்தது.
மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெரும்பாலான மாணவர்களைப் போல நாளடைவில் கந்தையா ஆங்கிலக் கல்வியைத் தேடிச் சென்று, யாழ்ப்பாணம் இந்துக் கலலூரியில் கல்வி பயின்றார். கீர்த்தி பெற்ற அரசியல், சமூக சிந்தனையாளன் என பிற்காலத்தில் அவரை எல்லோரும் வியந்து போற்றக்கூடிய மன வளர்ச்சித் திறனை அவர் அக்காலத்திலேயே காட்டத் தொடங்கினார். அவருடைய மரணத்திற்குக் காரணமாகவிருந்த, பிறப்புக் காலம் தொடங்கியே இதயக் கோளாறு காரணமாக உடல் பலவீனமடைந்து, பாடசாலை நாட்களில் விளையாட்டுக்களில் பங்குபற்ற முடியாத நிலையில் இருந்தது.
இதய நிலை எப்படி இருந்த போதிலும், பாடசாலைக் காலங்களில் கூட, தெளிந்த சிந்தனை, தெளிவான விளக்கம் என்பவற்றிற்கேற்ப மூளையுள்ளவராக அவர் திகழ்ந்தார். ஆகவே பல்கலைக்கழகத்தில் உபகாரப் பணம் பெற்றுப் படிக்கும் மாணவ அந்தஸ்தைப் பெற்றபோது எவரும் ஆச்சரியப்படவில்லை.
பல்கலைக்கழகத்தில் சமஸ்கிருதம், பாளி ஆகிய கீழைத்தேச மொழிகளில் விசேட படிப்பைக் கைக்கொண்டார். அக்காலத்தில் உலக விவகாரங்களில், குறிப்பாக இந்திய சுதந்திரப் போராட்டத்தில் விசேட அக்கறையுள்ளவராக இருந்தார். முதல் மாணவன் என்ற முறையில் தனது படிப்பு நோக்கத்தையும் மனதில் தெளிவாக்கிக் கொண்டார். பட்டதாரியாகியதுடன் இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மேலும் கீழைத்தேச மொழிகளில் உயர் கல்வி பயில உபகாரப் பணம் பெற்று படிக்கச் சென்றார்.
இது மிக அபூர்வ சாதனையாகும். ஏனெனில் எந்தவோர் வருடத்திலும் ஆறு அல்லது ஏழு மாணவர்கள்தான் இவ்விதமான உபகாரப் பணம் பெற்றுப் படிக்கும் சலுகையை பெறக்கூடியதாக இருந்தது. அதே வருடத்தில் தோழர் அ.வைத்திலிங்கமும் கணிதத்தில் திறமை காட்டி உபகாரப் பணம் பெற்று இங்கிலாந்துக்குப் படிக்கச் சென்றார்.
1 மே 1987ல் நடைபெற்ற ஐக்கிய மே தினக் கூட்டத்தில் பெருமதிப்புக்குரிய தோழர் அ. வைத்திலிங்கம் அவர்கள் உரையாற்றினார். மேலும் தோழர் கே. நவரத்தினம் , தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் மேடையில் அமர்ந்திருக்கிறார்கள்.

இருவரும் தங்களது படிப்பிற்காகத்தான் கேம்பிரிட்ஜ் கலாசாலைக்குச் சென்றார்கள். அவர்கள் தங்கள் படிப்பைத் தொடர வேண்டியதுதான். அக்காலத்து வழக்கமான முறைப்படி, இலங்கைக்குத் திரும்பி வந்ததும் ‘சிவில் சேவையையும்’, ஆயிரம் ரூபாவிற்குக் குறையாத சம்பளம், மந்திரியின் நிரந்தரச் செயலாளர் வேலை என்பனவற்றுடன், இவ்வித உத்தியோகத்துடன் வரும் அந்தஸ்தும் அதிகாரமும் அதிகமாகவுண்டு.
உலகம் முழுவதும் தங்களது காலடியிலிருக்க, படிப்பில் கௌரவிக்கப்பட்ட இவ்விரட்டையர்கள் புரட்சிகரமான பாதையில் செல்லத் தொடங்கினார்கள். இந்தியாவின் இன்றைய பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் திரு.வீ.கே.கிருஸ்ணமேனனின் தலைமையிலிருந்த ‘இந்தியன் லீக்’ என்னும் ஸ்தாபனத்திலும், பின்னர் பிரித்தானிய கம்யூனிஸ்ட் கட்சியிலும் அங்கத்தவர்களாகச் சேர்ந்தார்கள் எங்கள் இரட்டையர்கள். வயதிற்கேற்ற உணர்ச்சி வேகச் செய்கையாகவோ அல்லது அதிகாரத்தை எதிர்க்கும் செய்கையாகவோ அவர்கள் இதைச் செய்யவில்லை. மனித வர்க்கத்திற்கு முதலாளிகளும் சோசலிஸ்ட்டுகளும் என்னத்தைச் செய்கிறார்கள் என்ற கேள்வியை அலசி ஆராய்ந்த முடிவின் அடிப்படையிலேயே, ஓர் விளக்கம் சேர்ந்த செய்கையாகவே அவர்கள் இதைச் செய்தார்கள்.
கேம்பிரிட்ஜில் இரு வருடங்கள் படித்த பின், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்துக்கான இன்னொரு உபகாரப் பணம் பெறும் சந்தர்ப்பம் கிடைத்தது தோழர் கந்தையாவுக்கு.
1940ல் கந்தையாவும், வைத்திலிங்கமும் இலங்கைக்குத் திரும்பி வந்தார்கள். அரசியலிலிருந்து விலகி கிடைக்கக்கூடிய பெரும் உத்தியோகங்களை எடுக்கும்படி நண்பர்களும் உறவினர்களும் அவர்களுக்குப் புத்திமதி கூறி நிர்ப்பந்தித்தார்கள்.
ஆனால், சோசலிசத்தை நோக்கித் தொடர்ந்த பாதையிலிருந்து விலகிச் செல்ல அவர்கள் சம்மதிக்கவில்லை. இலங்கையிலுள்ள புரட்சிகரமான இயக்கத்தில் சேர்ந்தார்கள். வலுவடைந்த சக்தி வாய்ந்த தொழிலாளர்களின் இயக்கத்தைக் கட்டியெழுப்பும் வேலையில் அவர்கள் தங்களுடைய முழுச் சக்தியையும் அர்ப்பணித்து உழைத்தார்கள்.
இலங்கை தொழிற்சங்க சம்மேளனத்தின் ஸ்தாபகராக, அங்கத்தவரும் அமைப்பாளருமாக கந்தையா உழைத்தார். இன்று அது இலங்கையின் மிகப்பெரும் தொழிற்சங்க ஸ்தாபனங்களில் ஒன்றாக இருக்கிறது. மேலும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் கீழைத்தேச மொழிகளில் விரிவுரையாளராகவும் நியமிக்கப்பட்டார். இக்காலத்தில் பல்கலைக்கழகத்தில் முதல் மார்க்சிசக் குழுவொன்றையும் அவர் ஏற்படுத்தினார்.
பெருமதிப்புக்குரிய தோழர் பொன் கந்தையா அவர்கள் இறந்த பின்னர் அவரது மனைவி பரமேஸ் அக்காவை தோழர் சண் திருமணம் செய்திருந்தார். கடந்த காலங்களில் பல்வேறு வாடகை வீடுகளுக்கு குடிபெயர்ந்திருந்தாலும், பல தசாப்தங்களாகக் கவனமாகப் பாதுகாத்து வந்த தோழர் என். சண்முகதாசனின் குடும்பப் புகைப்படம்.

இவரின் தலைமையில்தான் இன்று கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான சண்முகதாசனும் நானும் இவர் செல்வாக்கில் ஈடுபட்டோம். வேறெவரிலும் பார்க்க கந்தையாதான் எங்களுக்கு உத்வேகமூட்டும் சோசலிசம் பற்றிய கண்ணோட்டங்களை எடுத்துக் காட்டினார். வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம், அறியாமை ஆகியவற்றை அகற்றி, சோவியத் நாடு சாதித்த பெரும் சாதனைகளையும் உற்சாகமூட்டும் முறையில் எங்களுக்கு விளக்கிக் காட்டினார்.
ஆனால் அவர் நீண்ட காலம் பல்கலைக்கழக விரிவுரையாளராக இருக்க முடியவில்லை. அவரது ஏகாதிபத்திய எதிர்ப்புக்காக அவர் உடனே பதவி நீக்கம் செய்யப்பட்டார். மேலும் அவரைத் தலைவராகக் கொண்ட ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியும் அடக்குமுறைச் சட்டப்படி தடை செய்யப்பட்டது. ஆனால் கந்தையா மனம் தளராது பல துறைகளில் உற்சாகத்துடன் தனது கடமையைச் செய்து, ஆங்கில வாரப்பதிப்பு ‘கேசரி’ என்ற பத்திரிகைக்கு ஆசிரியராகவும் இருந்தார்.
1943ல் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்ட பொழுது கந்தையா அதன் தலைவர்களில் ஒருவராக முக்கிய இடம் பெற்றார். சில வருடங்களுக்குப் பின் கந்தையா பல்கலைக்கழகத்தில் வரவேற்கப்படக்கூடிய நிலையை அடைந்து, உதவி நூலகராக நியமிக்கப்பட்டார். பல்கலைக்கழக மாணவர்களுக்கு சோசலிசக் கொள்கையைப் போதனை செய்து ஊக்குவிக்கக்கூடிய நிலையில் கந்தையா திரும்பவுமிருந்தார். ஆனால் இந்த உத்தியோகமும் நீடிக்கவில்லை. இனவாதப் போக்கில், பிழையான பாதையில் கொண்டு செல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓர் புதிய தலைமையைக் கொடுக்க வேண்டுமென கந்தையா தீர்மானித்தார். 1956ல் தேர்தலில் போட்டியிட்டு பாராளுமன்றத்தின் பருத்தித்துறை அங்கத்தவரானார்.
பாராளுமன்ற அங்கத்தவராக, தமிழர்களின் பிரதிநிதியான முதல் சோசலிஸ்ட் என்ற முறையில் இலங்கை அரசியலிலும் மக்களின் வர்க்க ஒற்றுமைக்கான, ஜனநாயகத்துக்கான, சோசலிசத்துக்கான போராட்டத்திலும் ஓர் புதிய கண்ணோட்டத்தை கந்தையா புகுத்தினார். தமிழர்களிடையே உண்மை நண்பர்களை சுதந்திரப் போராட்டத்துக்காக சேர்க்க முடியுமென அவர் சிங்கள மக்களுக்குக் காட்டினார். அதேபோல தமிழிரின் மொழியை, கலாச்சாரப் பின்னணியைப் பற்றி விளங்கியவர்கள் சிங்களவர்களிடையே உண்டென்ற உண்மையை அவர் தமிழர்களுக்கும் எடுத்துக் காட்டினார்.

தியாகச் கூடர் அணைந்துவிட்டது. கந்தையாவின் இதயத் துடிப்பு நின்றுவிட்டது. ஆனால் அவரது இயக்கம் தொடர்கிறது. அவருடைய அரசியல் மாணவர்கள், அவருடைய கட்சித் தோழர்கள், அவருடைய நண்பர்கள் ஆகியோரின் இதயங்களில் அவரின் இயக்கம் வளருகின்றது. தியாகச் சுடர் எரிந்து கொண்டேயிருக்கிறது. இலங்கை மக்கள் சோசலிசத்தை நோக்கி ஓர் சக்திவாய்ந்த முன்னேற்றத்தை அடைந்து விட்டார்கள். அந்த சோசலிச நோக்கம் கந்தையாவின் இதயத்தில் என்றுமே சுடர்விட்டு மக்கள் உள்ளத்தில் ஜீவஜோதியாக பிரகாசித்துக் கொண்டிருக்கும்."- மு.கார்த்திகேசன்


பிள்ளை ராதா கந்தையா


தனிச் சிங்களச் சட்டம் கொண்டு வரப்பட்ட போது பெருமதிப்புக்குரிய  தோழர் பொன் கந்தையா நெருக்கடியிலிருந்து நெருக்கடிக்கு என்ற தலைப்பில் நாடாளுமன்றத்தில் புகழ் கொண்ட உரை

பாராளுமன்றத்தில் முழங்கிய பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா
1956ல் பதவிக்கு வந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவின் அரசாங்கம், ‘சிங்களம் மட்டும்’ சட்டத்தை பாராளுமன்றத்தில் கொண்டு வந்தபோது, தமிழர்களின் வரலாற்றில் அவர்களால் தெரிவுசெய்யப்பட்ட ஒரே கம்யூனிஸ்ட் பாராளுமன்ற உறுப்பினரான (1956 - பருத்தித்துறை தொகுதி) பெருமதிப்புக்குரிய தோழர் பொன்.கந்தையா, அந்த மசோதா மீது ஆற்றிய உரையின் சில பகுதிகள், அதன் முக்கியத்துவம் கருதி கீழே தரப்படுகின்றது.


"கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு எதிராக எனது கருத்துக்களைச் சொல்ல நான் இப்பொழுது எழுகின்றேன். இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக சிங்களமும் தமிழும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது தான் எமது கருத்தாகும். “நிச்சயமாக சிங்கள மொழியைப் பாதுகாக்க வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று ஒரு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கூறுவதற்கு உரிமை இருக்கின்றது. அதனாற்தான் “தமிழ் மொழியைக் காப்பாற்ற வேண்டுமானால் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வாக்களியுங்கள்” என்று பருத்தித்துறையில் நானே கூறியுள்ளேன். ஏன்? ஏனென்றால், எமது கம்யூனிஸ்ட் கட்சி தான், இறுதியில் எமது நாட்டின் சுயபாசைகளையும் பண்பாடுகளையும் பாதுகாக்கக் கூடிய பாதுகாவலனாக இருக்கப் போகின்றது என்பது எங்களுக்குத் தெரியும்." "கௌரவ சபாநாயகர் அவர்களே! இந்த மசோதாவுக்கு நான் எதிர்ப்புத் தெரிவிக்கின்றேன். இந்த மசோதாவை எதிர்ப்பதற்கான எனது நோக்கு, நான் ஒரு தமிழனாக இருக்கின்றேன் என்ற உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டதல்ல. ஒரு தமிழன் என்ற வகையில், எனக்கு அருமையாக இருக்கின்ற அனைத்தையுமே இந்த மசோதா திருடுகின்றது என்றே நான் நம்புகின்றேன். எனது கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இது மறுக்கின்றது என்பதோடு, கேடு சூழும் இந்தச் சட்டம், சட்டப் புத்தகத்திலிருந்து நீக்கப்படாதிருப்பின், எமது குழந்தைகளினதும் அவர்தம் தலைமுறைகளினதும் எதிர்காலத்தையும் மறுத்துக் கொண்டிருக்கும். இந்த மசோதாவின் மூலம் அரசாங்கம் இந்த நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும், நாட்டின் குடிமக்ளாகவும் இருந்து கொண்டு வாழும் பயனுள் வாழ்க்கையையும் அதற்கா
உரிமையையும் மறுக்கின்றது. நாங்கள் கொண்டிருந்த, கொண்டுள்ள, கொண்டிருக்க வேண்டும் என்று அவாவுகின்ற எல்லாவற்றையுமே இது எங்களுக்கு மறுக்கின்றது.
எனது தாய் எனக்கு உணவூட்டியபோது பாடிய அந்த மொழியை, எனது மனைவி எனது குழந்தைக்கு அதனது முதல் மகிழ்ச்சியையும் வருத்தத்தையும் வெளிப்படுத்த பயிற்சியளித்த அந்த மொழியை, எனது தாயோடும் மனைவியோடும் குழந்தைகளோடும் பேசுவதற்கு இந்த அரசோ அல்லது வேறு எந்த அரசுதானுமோ அல்லது உலகின் கொடுங்கோலன் எவனுமோ தடைபோட முடியாது. எனது சொந்த மொழியைப் பேசுவதற்கு எவரும் தடைபோட முடியாது. சட்டங்களும் தடுக்க முடியாது. அந்த உரிமை பிரச்சினையாக இல்லை. பிரச்சினையாக இருப்பதெல்லாம், நான் இந்த நாட்டின் குடிமகனாக இருந்து கொண்டு, நாளாந்த வாழ்விலும் அரசிலும் எனது மொழியை பிரயோகிக்கக் கூடிய உரிமைதான். எனது மொழி உரிமையை நீங்கள் மறுக்கின்ற பொழுது, இந்த நாட்டின் தமிழ் மகனாக நான் கொண்டிருக்கின்ற , கொண்டிருக்கக் கூடிய உரிமைகள் ஒவ்வொன்றையுமே நீங்கள் மறுக்கின்றீர்கள். நானும் எனது மக்களும் இல்லாது போய்விட வேண்டும், முடிந்துவிட வேண்டும் என்று உங்கள் போக்கில் நீங்கள் எடுத்த முடிவை எங்களுக்குப் பரிசாக வழங்குகிறீர்கள்."
- --பொன் கந்தையா 

Respectable Comrade Pon Kandiah was a member of  the Ceylon Parliamentary Delegation - 1957 visit to the Soviet Union - [ standing, centre of photo] 
இலங்கை நாடாளுமன்றக் குழு உறுப்பினராக பெருமதிப்புக்குரிய  தோழர் பொன் கந்தையா  இருந்த போது  - 1957 சோவியத் யூனியனுக்கு விஜயம் - [நின்று, புகைப்படத்தின் மையம்]