Sunday, October 31, 2010

கற்றுத் தரும் காடு-வள்ளியம்மை சுப்பிரமணியம்

கற்றுத் தரும் காடு



---------------------------------


உரமின்றி நீரின்றி ஊன்றுகோல் தழுவாமல்


வரமாக மனிதருக்கு வளத்தை வழங்குவதால்


வற்றாத ஈகைக்குணம் வானுயர்ந்த மரங்கள்......


கற்றுத் தரும்காடு காட்டுதே தன்செயலால்.






நிலத்தடித் தண்ணீரை வேர்களால் உறிஞ்சி.....


பலமாகத் திடமாகப் பசுமையாய் உயர்ந்து....


மழைநீரைப் பூமிக்கு வருவிக்கும் தொழிலால்...


பிழையின்றிச் செய்கின்ற பேருதவி ஒன்றினால்....






நப்பாசை சிறிதுமின்றி நலங்கருதாப் பெற்றோர்


பிற்காலத்துத் தங்களது எதிர்பார்ப்பு இன்றி.....


தப்பாது கடமைகளை தாமதியாது செய்கின்றார்


எப்போதும் கற்றுத் தரும்காடு அறிவுரைகள்!


வள்ளியம்மை சுப்பிரமணியம்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF