Saturday, September 4, 2010

பிறந்தநாள் வாழ்த்து திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .....ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி! சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!

திருநிறைசெல்வி “சுபாரா இரவீந்திரன்” .பிறந்தநாள் வாழ்த்துப் பாக்கள் 05 09 2010.
             ............
      இலங்கை நாட்டில் யாழ்ப்பாணப் பகுதியில்
     துலங்கும் வட்டுக் கோட்டைத் தொகுதியில்
     நீர்வளமும் நிலவளமும் உயர்ந்த பனைமரமும்
     போர் வளமும்  சூழ்ந்த பதற்றமான காலத்தில்
    “சுபாரா” பெயருடன் வந்து பிறந்த வரமிவர்.
    அபார வரலாற்றைக் கொண்ட ”சத்திய மனை” யின்
    அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி என்று
    தப்பாது அன்புகாட்டும் அயலோர் உறவுகளும்...
    நாட்டு நிலைமையால் தமிழ்நாடு சென்று
    காட்டும் முன்னேற்றம் கல்வியில் தானென்று
    இளம்வயதில் மறைந்த பெரிய மாமாவின்
    உளம் நிறைந்த  கனவை நனவாக்க
    அமேரிக்க பல்கலைக் கழகத்தில் படிக்கின்ற
    உண்மைப் பேற்றினைப் பெற்ற செல்வியாம்.
 
ஒளிவிடும் விண்மீன் வருவதும் உறுதி!
சூழ்ந்திடும் இருள் அகல்வதும் உறுதி!
வள்ளியம்மை சுப்பிரமணியம்






From Sunday "Thinakkural" 13 February 2005
 
          

1 comment:

  1. சுகந்தன்November 1, 2009 at 10:55 AM

    கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடுமெனின்
    ஔவை வீட்டு அம்மிக்கல்லும் அழகுதமிழ் சொல்லும்

    சுபாரா!
    கவிதை சூப்பரா இருக்கு.

    ReplyDelete

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF