Sunday, May 9, 2010

அன்னையர் தினத்திலே.............வள்ளியம்மை சுப்பிரமணியம்.

அன்னையர் தினத்திலே.............


மக்களே தாய்பற்றி எழுதுவது வழக்கமாம்.......அந்த

அக்கறையில் அன்னையே எழுதி அனுப்புகிறாள்.



பிள்ளைகள் உணர்வினைப் பெற்றவள் சொல்வதே

கொள்ளை இன்பமாம் அன்னையர் நாளிலே........



உண்ண உணவளித்து உறங்க இடமளித்து

வண்ணத்தில் உடைகள்பல வாங்கித் தருமொருவர்!



’கணனி’க்கு மேலே ’கமரா’வும் பொருத்தி

கைத்தொலை பேசியும் கருணையுடன் தருமொருவர்!



அம்மாவின் வயதுக்கு இதுவொன்றும் வேண்டாமென்றால்

“சும்மா இருங்கள். சுழலும் உலகில் உழைக்கும் தாயாக........



இவ்வளவு காலமும் இரவுபகல் பாராமல்

எம்மோடு நீங்கபட்ட இன்னல்கள் போதாதோ?



நான்தரும் பால்பழங்கள் நன்றாக நீயருந்தி

கூன்விழாத முதுகுடன் குதூகலிக்க வேணு’’மென்றார்.



நன்றாகத் தமிழ்த்தாயின் உறவிலே பெற்றமக்கள்................

அன்னையர் தினத்திலே பொன்னாடை போர்த்தி

சின்னமேசை விளக்கும் சிறப்பாக எனக்களித்ததுடன்

’என்வீட்டுக்கு வந்து உன்தமிழால் உரையாடு......

உன்னுடைய ஊக்கம் இளைஞர்க்கு வழிகாட்டும்”



இத்தனைநாள் இல்லாத கருஞ்சிவப்புக் கரைவைத்த

அத்தனை மதிப்பான சேலைதந்தார் மகளொருவர்!

‘அம்மா பசிகிடந்து ‘அல்சர்” வந்ததென்று

தம்மால் முடிந்தவரை தகுமுணவு தருமொருவர்!



செல்லும் திசையெல்லாம் திருப்தியாய்ச் செய்திகளை

சொல்லும் புகைப்படமும் அனுப்பிடுவார் இன்னொருவர்

அம்மாவின் பொறுமையும் அசையாத ந்ம்பிக்கையும்

நம்முடைய வாழ்வுதனில் நடைமுறைக்கு ஏற்கு”மென்பார்.



வள்ளியம்மை சுப்பிரமணியம்.

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF