Monday, August 30, 2010

கடலிற் சிந்திய எண்ணெய்..........

                                                 கடலிற் சிந்திய எண்ணெய்

                                                  ---------------------------------------------

எண்ணெய்யே......!

                                        ஐம்பெரும் பூதங்களுடன் ஐக்கியம் ஆனவன்நீ.....

                                        செம்மையாக நிலத்திலே ஓடுகின்ற வாகனங்கள்

                                        நம்பிக்கையாய்க் கடல்தனிலே பயணிக்கும் கப்பல்கள்

                                        கும்மிருட்டில் பறக்கின்ற அண்டவெளி ஊர்திகட்கும்.........


                                        ஆக்கமான உந்துசக்தி.... ஆதாரசுருதி நீதானே!

                                        ஊக்கமும் ஒத்துழைப்பும் ஒருங்கே கொடுத்துதவி..........

                                       நோக்கமேது மில்லாது நொடிப்பொழுதில் கடல்நீர்மேல்....

                                       தேக்கமாக அழித்துக் குவித்தாயே உயிரினத்தை!

நீயோ...........

                                       அடிநிலத்துக் கிணற்றுக்குள் அசுத்தமாய்ப் பிறந்தவுன்னை

                                       துடிப்பான மனிதசக்தி துரிதமாகச் செயற்பட்டு...........

                                       வடிகட்டித் தரம்பிரித்து வாகனத்துத் தகுதிப்படி..........

                                       கொடிகட்டிப் பறக்குமாறு கலசத்துள் அனுப்பினரே!

மானிடனே............

                                       நடமாடும் மனிதர்களை நாசமாக்கி அழிப்பதற்கு.....

                                      உடம்பிலே குண்டுகட்டி உருக்குலைந்து சிதறுதற்கு....

                                     இடங்கொடுக்க எண்ணாதே நோக்கத்தை மாற்றிவிடு!

                                     கடலிற் சிந்திய எண்ணெய்க் கதைகேட்ட பின்னாலே!


*இக் கவிதை “ யூனிக்கோட்” எழுத்துருவில் எழுதப்பட்டது

Wednesday, August 25, 2010

24 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் காணொளி (1986) சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்) சிறையில் இருந்து எழுதிய திருமண வாழ்த்து...

இன்று 9 வருடங்கள் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்) சத்தியராஜனை  இழந்து ...... என் மகனை நினைவு கூர்ந்து ............
    மலர்வு:----30-10-1962                                   உதிர்வு:----25-08-2001




24 வருடங்களின் பின்பு வெளிச்சத்திற்கு வரும் காணொளி(1986) சத்தியராஜன் ( PLOTE மீரான் மாஸ்ட்ர்) சிறையில் இருந்து எழுதிய திருமண வாழ்த்து


யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து  என் மகன் சத்தியராஜன் எழுதிய திருமண வாழ்த்து (1986) 


பாட்டாளி பாராள வேண்டும் என்ற தந்தை - அவர்
பாதைதனைத் தொடர்ந்து செல்லும் அன்னை
அடக்குமுறை தனை உடைத்தெறிவோம் என்ற அண்ணன்
அநியாயம் கண்டு குமுறும் தம்பி
அன்பிற்கோர் மாமா மாமி
ஆசைக்கோர் அங்கிள் அன்ரி
அறிவு சொல்லும் தோழர்
ஆதரிக்கும் சுற்றம் இவர்கட்கு
அருமை பெருமையாக பிறந்தாய்
அன்பு பாசத்துடன் வளர்ந்தாய்
கருணை இரக்கம் உந்தன் பழக்கம்
கலக்கம் தயக்கம் இல்லை அது உன் வழக்கம்
சமூக மாற்றம் வேண்டி நிற்கும் ஒருவன்
வாழ்வு தனில் உந்தன் துணைவன்
வாழ்க்கை தனில் அவன் பணி தொடர வேண்டும்
அவர்களுள் நாமறிந்த இருவர்
மார்க்ஸ் / ஜென்னி (அப்பா / அம்மா)
அவர்கள் போல் நீயும் வாழ்வில்
வெற்றி கொள்ள வாழ்த்துகின்றேன்.


யாழ்ப்பாணம் இராணுவகோட்டைச் சிறையில் இருந்து சத்தியராஜன் 19-11-1986

Friday, July 23, 2010

இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!

 இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

கணவனால் மனைவியின் நினைவுக்குக் கட்டிவைத்த
         காலத்தால் அழியாத காதல்சின்னம் தாஜ்மஹால்!

துணைவனை மனைவியவள் தூண்போலவே தாங்கி
        பணிவாகக் குறிப்பறிந்து பொதுச்சேவைக் கனுமதித்தாள்.

சாதிமதம் பேசுகின்ற உயர்சாதிக் குடிப்பிறந்து........
       பேதங்கள் பார்க்காது பெருமகனார் வாழ்ந்தாரே!

ஒடுக்கப் பட்டமக்களை ஒருமித்த தோழரென்று.....
      மதித்து வரவேற்று மரியாதை செலுத்தியதால்....

கூடாத சாதியென்று குறிப்பிட்ட ஒருசிலரை......
       வாடகை வீட்டினிலே உரிமைக்காரன் விடமாட்டான்.

சொந்தமாக வீடுகட்டச் சிந்தித்தாள் அம்மணியாள்
      சொந்தபந் தங்களிடம் மண்டியிட மனமில்லை!

மாற்றுச் செயலாக வங்கியிலே கடனெடுத்து.....
       நாற்பது+ இருபத்தைந்து =ஆயிரம் சதுர அடி....
வேற்றுநாட்டு ஓடுகள் விலையதிகம் என்பதனால்....
      மேற்கூரை கூட ’அஸ்பெஸ்டாஸ்’ தகடுகளாம்.
பார்ப்பதற்கு வீடாகக் பார்வையிலே தெரிந்தாலும்....
      இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

மிடுக்காகக் கணவனின் மீண்டுவரா நிகழ்ச்சிக்கு
    அடுக்கடுக்காய் அவர்தோழர் அலுவல்கள் நடாத்தியதால்....
இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!


கணவனால் மனைவியின் நினைவுக்குக் கட்டிவைத்த
         காலத்தால் அழியாத காதல்சின்னம் தாஜ்மஹால்!

துணைவனை மனைவியவள் தூண்போலவே தாங்கி
        பணிவாகக் குறிப்பறிந்து பொதுச்சேவைக் கனுமதித்தாள்.

சாதிமதம் பேசுகின்ற உயர்சாதிக் குடிப்பிறந்து........
       பேதங்கள் பார்க்காது பெருமகனார் வாழ்ந்தாரே!

ஒடுக்கப் பட்டமக்களை ஒருமித்த தோழரென்று.....
      மதித்து வரவேற்று மரியாதை செலுத்தியதால்....

கூடாத சாதியென்று குறிப்பிட்ட ஒருசிலரை......
       வாடகை வீட்டினிலே உரிமைக்காரன் விடமாட்டான்.

சொந்தமாக வீடுகட்டச் சிந்தித்தாள் அம்மணியாள்
      சொந்தபந் தங்களிடம் மண்டியிட மனமில்லை!

மாற்றுச் செயலாக வங்கியிலே கடனெடுத்து.....
       நாற்பது+ இருபத்தைந்து =ஆயிரம் சதுர அடி....
வேற்றுநாட்டு ஓடுகள் விலையதிகம் என்பதனால்....
      மேற்கூரை கூட ’அஸ்பெஸ்டாஸ்’ தகடுகளாம்.
பார்ப்பதற்கு வீடாகக் பார்வையிலே தெரிந்தாலும்....
      இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

மிடுக்காகக் கணவனின் மீண்டுவரா நிகழ்ச்சிக்கு
    அடுக்கடுக்காய் அவர்தோழர் அலுவல்கள் நடாத்தியதால்....
இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!

Saturday, July 17, 2010

» மரண அறிவித்தல்: அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்(J.P)

» மரண அறிவித்தல்

பெயர்: அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்





அம்பலப்பிள்ளை இலங்கைநாயகம்(J.P)
(முன்னாள் உத்தியோகத்தர், விவேகானந்தா அச்சகம், யாழ்ப்பாணம்)
கொல்லங்கலட்டி, கிளானையைப் பிறப்பிடமாகவும் தற்போது நவாலி வடக்கு, மானிப்பாயை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அ.இலங்கைநாயகம் நேற்று (16.07.2010) வெள்ளிக்கிழமை  அதிகாலை காலமானார்.
அன்னார் கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ் சென்றவர்களான அம்பலப்பிள்ளை  தெய்வானைப்பிள்ளை தம்பதியினரின் கனிஷ்ட புத்திரனும் சடச்சப்பை, கொல் லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான இலங்கை யைப்பிள்ளை  அன்னப்பிள்ளை தம்பதியரின் மருமகனும் கமலாம்பாளின் (பாப்பா) அன்புக்கணவரும் இலங்காதிலகம், சுதாகினி, சுதாகரன் (லண்டன்), சுகந்தா(ஜேர்மனி), சுதர்சினி (ஜேர்மனி)  ஆகியோரின் அன் புத் தந்தையும் சோதிலிங்கம், சுரேஸ்வரன், சசிகலா (லண்டன்) அருள்(ஜேர்மனி), சக்திவர தன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும் சதீஷ்குமார்(லண்டன்), கஜனி (இலங்கை மின்சார சபை, யாழ்ப்பாணம்), சுபாணி, ரவிநாத், கஜந்தா, நீரஜா, ஜனுஜன் (லண்டன்), அபி லாஷ், ஜசிகா (ஜேர்மனி), ஆரணி, அபர்ணா, அமித்தா(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் அமரர்களான தங்கமணி, நடராசா, மனோன்மணி, சுப்பிரமணியம் மற்றும் சிவனேசம் (கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும் அமரர்களான சிவசுப்பிரமணியம், முத்துப்பிள்ளை, சபாரத் தினம் மற்றும் வள்ளியம்மை(சிங்கப்பூர்), அமரர் சின்னத்தம்பு மற்றும் கைலாயபிள்ளை காமாட்சி (பிரான்ஸ்), நாகலிங்கம் இராசம்மா ஆகியோரின்  அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விவரம் பின்னர் அறிவிக்கப்படும். இந்த அறிவித் தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.



தகவல்: மனைவி, மக்கள், மருமக்கள்.
மருமகன் : கா.சோதிலிங்கம்
மகன் : இ.சுதாகரன்(லண்டன்)
00442085545463
நவாலி வடக்கு, மானிப்பாய்.
021 3002132, 021 4922312.
(100687)

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF