"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Friday, July 23, 2010

இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!

 இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

கணவனால் மனைவியின் நினைவுக்குக் கட்டிவைத்த
         காலத்தால் அழியாத காதல்சின்னம் தாஜ்மஹால்!

துணைவனை மனைவியவள் தூண்போலவே தாங்கி
        பணிவாகக் குறிப்பறிந்து பொதுச்சேவைக் கனுமதித்தாள்.

சாதிமதம் பேசுகின்ற உயர்சாதிக் குடிப்பிறந்து........
       பேதங்கள் பார்க்காது பெருமகனார் வாழ்ந்தாரே!

ஒடுக்கப் பட்டமக்களை ஒருமித்த தோழரென்று.....
      மதித்து வரவேற்று மரியாதை செலுத்தியதால்....

கூடாத சாதியென்று குறிப்பிட்ட ஒருசிலரை......
       வாடகை வீட்டினிலே உரிமைக்காரன் விடமாட்டான்.

சொந்தமாக வீடுகட்டச் சிந்தித்தாள் அம்மணியாள்
      சொந்தபந் தங்களிடம் மண்டியிட மனமில்லை!

மாற்றுச் செயலாக வங்கியிலே கடனெடுத்து.....
       நாற்பது+ இருபத்தைந்து =ஆயிரம் சதுர அடி....
வேற்றுநாட்டு ஓடுகள் விலையதிகம் என்பதனால்....
      மேற்கூரை கூட ’அஸ்பெஸ்டாஸ்’ தகடுகளாம்.
பார்ப்பதற்கு வீடாகக் பார்வையிலே தெரிந்தாலும்....
      இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

மிடுக்காகக் கணவனின் மீண்டுவரா நிகழ்ச்சிக்கு
    அடுக்கடுக்காய் அவர்தோழர் அலுவல்கள் நடாத்தியதால்....
இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!


கணவனால் மனைவியின் நினைவுக்குக் கட்டிவைத்த
         காலத்தால் அழியாத காதல்சின்னம் தாஜ்மஹால்!

துணைவனை மனைவியவள் தூண்போலவே தாங்கி
        பணிவாகக் குறிப்பறிந்து பொதுச்சேவைக் கனுமதித்தாள்.

சாதிமதம் பேசுகின்ற உயர்சாதிக் குடிப்பிறந்து........
       பேதங்கள் பார்க்காது பெருமகனார் வாழ்ந்தாரே!

ஒடுக்கப் பட்டமக்களை ஒருமித்த தோழரென்று.....
      மதித்து வரவேற்று மரியாதை செலுத்தியதால்....

கூடாத சாதியென்று குறிப்பிட்ட ஒருசிலரை......
       வாடகை வீட்டினிலே உரிமைக்காரன் விடமாட்டான்.

சொந்தமாக வீடுகட்டச் சிந்தித்தாள் அம்மணியாள்
      சொந்தபந் தங்களிடம் மண்டியிட மனமில்லை!

மாற்றுச் செயலாக வங்கியிலே கடனெடுத்து.....
       நாற்பது+ இருபத்தைந்து =ஆயிரம் சதுர அடி....
வேற்றுநாட்டு ஓடுகள் விலையதிகம் என்பதனால்....
      மேற்கூரை கூட ’அஸ்பெஸ்டாஸ்’ தகடுகளாம்.
பார்ப்பதற்கு வீடாகக் பார்வையிலே தெரிந்தாலும்....
      இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால்  தானெமக்கு!

மிடுக்காகக் கணவனின் மீண்டுவரா நிகழ்ச்சிக்கு
    அடுக்கடுக்காய் அவர்தோழர் அலுவல்கள் நடாத்தியதால்....
இற்றைவரை சத்தியமனை தாஜ்மஹால் தானெமக்கு!

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்