Monday, July 13, 1981

என்னை வளர்த்த பெற்றோர் ஆசைப்பிள்ளை செல்லமுத்து

என் தந்தை ஆசைப்பிள்ளை சிங்கப்பூர் 1932



பொன்னர் ஆசைப்பிள்ளை 30.03.1898 — 13.07.1981
 , அம்மா தன் மூத்த பெண் குழந்தையுடன் வாழ இலங்கையில் விட்டிட்டு அந்தக் காலத்தில்....1925 ம் ஆண்டில் என் தந்தையார் சிங்கப்பூர் நாட்டிற்கு கப்பல் மூலம் சென்று விட்டாராம்.
பெற்றோர்
பொன்னர் ஆசைப்பிள்ளை 30.03.1898 — 13.07.1981
இராமுப்பிள்ளை செல்லமுத்து 12.12.1905 — 21-7-1981

இங்கு என் தந்தை ஆசைப்பிள்ளை. தாயார் செல்லமுத்து. தங்கை, தம்பி, அக்கா மகன் ஆகியோருடன் நான்.

என் தந்தை ஆசைப்பிள்ளை. தாயார் செல்லமுத்து 1980
என் அன்னை என்னை வளர்த்த தாய் அம்மா இராமுப்பிள்ளை செல்லமுத்து 12.12.1905 — 21-7-1981



 

Monday, May 25, 1981

கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடும் ! போராளி சுந்தரம் 1980/81 இல் எழுதிய கடிதமும் மனம் வருந்திய மிகத் தவறும் !


கலாநிதி ஆ. தியாகராசா M.A.M.Litt PhD ( 17 ஏப்ரல் 1916 – 25 மே 1981) அவர்கள்   அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக வட்டுக்கோட்டைத் தொகுதியில் 1970 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் அ. அமிர்தலிங்கத்தை 725 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.





 
எமது மக்களின் தரமான வாழ்விற்காக 1981 யாழ் மாவட்ட அபிவிருத்திசபைத் தேர்தலில் ஐ.தே.கவின் தலைமை வேட்பாளராகப் போட்டியிட்ட, முன்னாள் வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் "கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மிகத்தவறு!"



முப்பதுவருடங்களாக ஆசிரியராகவும், அதிபராகவும் கடமையாற்றிய கலாநிதி ஆ. தியாகராசா M.A.M.Litt  PhD அவர்கள் காரைநகரிலுள்ள யா/கலாநிதி ஆ. தியாகராசா மத்திய மகா வித்தியாலயம்  அதிபராக நியமனம் பெற்றகாலம் கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படுகின்றது


"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!" ...வள்ளியம்மை சுப்பிரமணியம்


தோழர்- சுந்தரம் அவர்கள் தோழர்- மணியம்
அவர்களுடன் உரையாடும் போது என்காதில் விழுந்த சில
செய்திகளின் துளிகள்.... "கலாநிதி ஆ.தியாகராசா மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு மிகத்தவறு!".



                        (சுந்தரம்) சதாசிவம் சிவசண்முகமூர்த்தி

தொலைநோக்கு அரசியல், அசாத்திய துணிவு, நேர்மை, கடின உழைப்பு, தன்னலங்கருதாத தியாகம், இவற்றிக்குமப்பால் மனித நேயம், தோழமை இவையெல்லாம் ஒன்று சேர்ந்த, மக்களை நேசித்த மகத்தான, சமூக போராளி சுந்தரம் 1980/81 இல்  
சுழிபுரம்  ஸ்ரீலங்காவில் இருந்து மேற்கு ஜெர்மனி நண்பருக்கு எழுதிய கடிதம்,

"இனிய நண்பா நீண்ட நாட்களின் பின் தான் உங்களுடன் தொடர்பு கொள்ள முடிகிறது. மன்னிக்கவும். தங்கள் நலன், நிலை  முதலியன நான் அறிய விரும்புகிறேன்.நட்புகளை நான் மறப்பதில்லை நண்பர்கள் என நான் மதித்தவர்கள் என்னை மறந்து போனார்கள் அவர்கள் மறந்தனால் எனக்கு எந்தவித நட்டமும் இல்லை. ஆனால் மனக்கவலை தான் நீங்கள் அப்படி இல்லை என நம்புகிறேன். உங்களுக்கு என்ன கஷ்டமோ என எனக்குத் தெரியாது. ஆனால் உணர்கின்றேன் .  நீங்கள்பல மாதங்களுக்கு முன்னர் அனுப்பிய மடலுக்கு  பதில் அனுப்ப முடியாது போனது குறித்து வருந்துகிறேன். தயவுசெய்து இக்கடிதத்துக்கு பதில் எழுதவும். உங்களைப் பற்றி நாளாந்த வாழ்க்கை பற்றி  வேலைகளை பற்றி நண்பர்களை பற்றி சூழலை பற்றி எழுதவும்.


நான் நலம். வீட்டிலும் அவ்வாறே.  ஆறு மாதங்களுக்கு முன்னர் அப்பாவை கைது செய்து மூன்று நாட்களின் பின்னர் விடுதலை செய்தனர் . என்னால் பகிரங்கமாக நடமாட முடியாத நிலை எனினும் நடமாடுகின்றேன். இயங்குகிறேன். எடுத்த துறையில் 100% வேலை செய்கிறேன்............


...... தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழக் கோரிக்கையை கைவிட்டு விட்டது . அமைச்சர்களுக்கு இராசதுரை மாலை போட்டதால் கட்சியை விட்டு விலக்கி ஒதுக்கி விளக்கம் கேட்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தலைவர்கள்  ( அமீர்,  சிவா ) அத்துலத்முதலிக்கும்  முகம்மதுவுக்கும் சுபாஷில் விருந்து அளித்தார்கள். ஜே ஆரின் ( J R ) பிறந்ததின விழாவில் முதல் ஆளாக வரிசையில் நின்று ஜே ஆருக்கு பரிசளித்தார் (மாஜி) தலைவர் அமீர்.   இராசதுரை , கனகரத்தினம் தங்களை மட்டும் முதலாளித்துவ ஜே ஆர் ஆட்சி கும்பலுக்கு அடகு வைத்தார்கள் . அமீர் சிவா பிற்போக்குத் தலைமை, கட்சியையும் இனத்தையும் தங்களுடன் சேர்த்து அடகு வைத்துவிட்டனர். இந்த அரசை எதிர்த்து ஏன் போராட வேண்டும் ? என அமீர் பகிரங்கமாக கேட்கிறார்.  இன்பம்,   செல்வரத்தினம் …… பிணங்களை பார்த்த நாம் …. …. காலம் பதில் சொல்லும் …….  பதிலை எதிர்பார்க்கிறேன் ….. மிகுதி அடுத்த மடலில் …..  தோழமையுடன் மூர்த்தி  முகவரி சுழிபுரம்  ஸ்ரீலங்காவில் இருந்து மேற்கு ஜெர்மனிக்கு"












      

பின்குறிப்பு:----


என்குழந்தைகள் சிறுபொறி வெளியிட்டது  1976ல்........... 

புதியபாதை கை யெழுத்துப்பிரதிகள் 1977/78ல் பார்வைக்குக் கிடைத்தது. 

அச்சுவாகனமேறியது 1979/1980 ....

1980/81ல்.........வீடுகளுக்குச் சென்று கைகளில் ஒப்படைப்பதில் மிகக் கவனமாகச் சுந்தரம் செயற்படுவார். 



"மரணம் வழங்கும் மனித வெறி ஓயட்டும்!" ...வள்ளியம்மை சுப்பிரமணியம்  Updated in 2009


Monday, December 1, 1980

English News Paper 'Red Banner' published by K.A. Subramaniam from 1978 to 1981 இல் கே ஏ சுப்பிரமணியத்தினால் வெளியிடப்பட்ட ஆங்கிலப் பத்திரிகை


1978-1981 இல் கே ஏ சுப்பிரமணியத்தினால் வெளியிடப்பட்ட Red Banner ஆங்கிலப் பத்திரிகையின் ஒரு பிரதி அண்மையில் கிடைக்கப்பெற்றேன். உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றேன்............


































                                   







Please click here for more details Video


http://www.getcited.org/pub/101005741 

Saturday, December 15, 1979

1979 Delegation to China with Comrade K. Thanigasalam and meeting with Comrade Ji Pengfei


Comrade Maniam calls on Comrade Ji Pengfei during his visit in 1979.  Comrade Ji Pengfei was head of the International Liaison Department of the Communist Party of China Central Committee, then vice-premier and secretary-general of the State Council from 1980 to 1982, and finally head of the Hong Kong and Macau Affairs Office.


The letter above written by K. A. Subramniam in mid December 1979  to his wife about his visit to Kunming, which is the capital and largest city of Yunnan province, People's Republic of China.[5] Also known as Yunnan-Fu, today it is a prefecture-level city and the political, economic, communications and cultural centre of the province as well as the seat of the provincial government. The headquarters of many of Yunnan's large businesses are in Kunming. Its economic importance derives from its geographical position. It is positioned near the border with Southeastern Asian countries, serving as a transportation hub in Southwest China, linking by rail to Vietnam and by road to BurmaLaos and ThailandThe Stone Forest or Shilin (ChinesepinyinShílín) is a notable set of limestone formations about 500 km2 located in Shilin Yi Autonomous CountyYunnan Province, People's Republic of China, near Shilin approximately 90 km (56 mi) from the provincial capital Kunming.
மணி ,  Dec 1ம் திகதி தொடக்கம்  6ம் திகதி வரை வியட்நாம் எல்லை புறமுள்ள சீனாவின்  யுனான் மாகாண குன்மிங் நகரத்தில் தங்கினோம் .இங்கு சீன வியட்நாம் எல்லை யுத்தம் நடந்தது தெரியும் தானே. பல இடங்களைப் பார்வையிட்டோம் . இந்த மாகாணத்திலுள்ள ஜனத் தொகையில் 1/3 பகுதியினர் 22 தேசிய சிறுபான்மையின குழுக்கள். அதிகம் கற்றுக்கொள்ள வாய்ப்புண்டு . இங்கே தான் உலகத்திலேயே மிகப் பெரிய கற்காடு இருக்கிறது  ( Stone Forest ). இத்தாலி  தேசத்திலும் இருக்கின்றது .அது சிறியது - தினசரி பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாட்டவர்கள் உட்பட பார்த்து மகிழ்வர் .இயற்கை வளங்களுடனும் வகை  வகையானா பூந்தோட்டங்களுடனும் பண்டைய கலையை சித்தரிக்கும் கட்டிடங்களும் ஓவியங்களும் நிரப்பப் பெற்றுள்ளது - பலவித தானியங்கள் , மா ,பலா  உட்பட பலவகை  கனிகைகள்  இங்கு இருக்கின்றன -








 

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
ஒரு கம்யூனிஸ்ட் இணையர் வாழ்வின் சந்திப்புகள் Please click on the Book Cover Image of the above photo to download the English Version of the FULL BOOK in PDF