Sunday, February 13, 2011

முள் மகுடம் - வள்ளியம்மை சுப்பிரமணியம்.

முள் மகுடம்
                                  -------------------------
அளவுக்கு மிஞ்சிய அதிகமான வருவாய்
பிளவான எண்ணத்தில் பிற்காலச் சந்ததிக்கு
களவாக வெளிநாட்டு வங்கிக் கணக்கினிலே
உளவறியா வண்ணம் பணத்தைப் போட்டு வைத்தார்.
 
நாட்டை முன்னேற்ற நலிந்தோர்க்குக் கைகொடுக்க
வாட்டுகின்ற கொடூர வறுமையை ஒழித்துவிட
ஆட்டிப் படைக்கின்ற அசையாத அப்பணத்தை
மீட்டெடுத்துத் தாய்நாட்டை மேல்நிலைக்கு உயர்த்திவிட.....
 
செத்தொழிந்து போனபின்னும் சேமிப்பு பிள்ளைகட்கு
மொத்தமாகப் பெருகுமென்ற மோசமான கற்பனைகள்.....
அத்தனையும் தவிடுபொடி அரசாங்கப் புலனாய்வு.....
மொத்தமாகச் செயற்பட முழுப்பணமும் தாய்நாட்டில் !
 
வெளிநாட்டு வங்கியிலே வீணாகும் பணமதனை
வெளிக்கொணர்ந்து தாய்மண்ணின் மேம்பாடு செழிக்குமென்றால்....
ஒளிவழியில்  பார்க்குமவர் ஒளியிழந்த பொம்மையானார்
பழிப்பான முள்மகுடம் இதுவென்று உணருவரோ?
 
 
        வள்ளியம்மை சுப்பிரமணியம்.

0 comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume

அமரர் கே ஏ சுப்பிரமணியம் K.A.Subramaniam Commemoration Volume
Please click on the photo above to download the FULL VOLUME in PDF Size 10MB