Singapore 521101
ගරු, අතිගරු ජනාධිපතිතුමාට, ශ්රී ලංකා ප්රජාතාන්ත්රික සමාජවාදී ජනරජය, ශ්රී ලංකා. මහත්මයාණෙනි, ආයූබෝවන්! වනක්කම්. අද, 2009/07/10 වන දාට මගේ වයස අවුරුදු 71 යි. මම මේ ලිපිය ලියන්නේ කේ.ඒ. සුබ්රමනියම්ගේ බිරිඳ ලෙසයි. ඔහු තම ජීවිතය පරදුවට තබා ශ්රී ලංකා රටට සේවය කළේ ජාතීන් තුනටම එකමුතුව ජීවත් වීමට සහ ඔබේ නිදහස් පක්ෂය බලයට පත්වන ලෙසයි. මම මේ ලිපිය ලියන්නේ තම ජීවිතය පරදුවට තබා රටට සේවය කළ කේ.ඒ. සුබ්රමනියම්ගේ බිරිඳ ලෙස සහ මගේ පුතා (ප්ලොට් මීරන් මාස්ටර්) සත්යරාජ්ගේ මව ලෙසයි. මගේ සැමියා තම ජීවිතය කැප කළ අය සහ මගේ පුතා වැනි අය තම තරුණ කාලය නාස්ති කළ අය, කටුකම්බි වැටවල්වල සිරවී සිටි ඒ ජනතාව සහ ඒ භූමිය මෝසම් වැස්සට පෙර තමන්ගේම ස්ථානවලට ගොස් ඔවුන්ගේ දුක්ඛිත තත්ත්වය අවසන් කළ යුතුයි. නැතහොත් මෝසම් වැස්සට පෙර පාසල් ගොඩනැගිලිවල ජීවත් වීමට සුදුසු පියවර ගත යුතුයි. සැබෑ ශ්රී ලාංකික පුරවැසියෙකු ලෙස, අද ඉතිරිව සිටින සියල්ලන්ම පීඩිත හා පීඩිත අහිංසක සාමාන්ය ජනතාව බව මම ඔබට සහතික වෙමි. ඔවුන්ගේ දොරවල් විවෘත කිරීමෙන් මහාමාර්ග සහ පොකුණු ගොඩනගා ගත හැකිය. 2009 මැයි මාසයේ සිංගප්පූරු රූපවාහිනී වැඩසටහනකදී මම කිව්වා, වියළි ඉඩම් සාරවත් දේශයක් බවට පත් කිරීමට ලෝකය උදව් කළ යුතු බවත්, හදවත් තුළ යහපත් සිතුවිලි තබාගෙන යහපත් සදාචාරයෙන් ජනතාව දැනුවත් කළ යුතු බවත්, සත්යය, අවංකභාවය සහ වෙහෙස මහන්සි වී වැඩ කරන ප්රීතිමත් ශ්රී ලංකාවක් ළගා කරගත යුතු බවත් ය. ඒ නිසා මෙම ලිපියට අවධානය යොමු කර ඉතා පින්වතින් සුදුසු කටයුතු සිදුකරන ලෙස කාරුණිකව ඉල්ලා සිටිම්. ස්තූතියි! මෙය ඔබේ, ඔබේ විශ්වාසවන්ත, වල්ලිඅම්මයි සුබ්රමනියම්. “ගුණධර්මයෙන් හා දැක්මෙන් පිරුණු, ධර්මයේ ස්ථිරව සිටින, සත්යය අවබෝධ කරගත් සහ තම යුතුකම් ඉටු කරන අයට මිනිසුන් ගරු කරනු ඇත.” (ධම්මපදය217)கனம்,
பெருமதிப்புக்கு உரிய ஜனாதிபதி அவர்கட்கு,
இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு அரசாங்கம்
சிறீலங்கா
வணக்கம்! ”ஆயுபோவன்”!!
இன்று 07/10/2009 எனக்கு 71 வயது.எமது இலங்கை நாட்டில் மூன்று இனங்களும் ஒற்றுமை உணர்வுடன் வாழவேண்டுமென்றும் அதற்குரிய ஆளுமையுடைய உங்கள் சுதந்திரக்
கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டுமெனவும் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய
கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை
இழந்த தாயாகவும் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம்
வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம்
மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர அவரவர் சொந்த இடங்களுக்கு போக வேண்டும்.அல்லது பாடசாலை
கட்டடங்களில் மாரி அடைமழைக்கு முன்பாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒரு உண்மையான இலங்கை பிரசையாக உங்களிடம் உறுதியாகக் கூறுகின்றேன், இன்று மீதமாக உள்ள அனைவரும்
அடக்கி ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்களே.அவர்களின் கதவைத் திறப்பதன் மூலம் நெடுஞ்சாலைகளும்
குளங்களும் அமைக்க முடியும்.
வரண்ட நிலங்களை நன்செய் நிலமாக்க, இதயச் சுத்தியுடன் நன்னெறியில் மக்களை
செம்மையாய்ப் பயிற்றிட, உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால் அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள், அதற்கு உலக
நாடுகள் உதவ வேண்டுமென உறுதிபட சிங்கப்பூர் TV எதிரொலியில் May 2009இல் கூறினேன்.
இக்கடிதத்தை அவதானத்துடன் வாசித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!
இங்ஙனம்
தங்கள் உண்மையுள்ள
வள்ளியம்மை சுப்பிரமணியம்.
”சீலமும் காட்சியும் நிறைந்தவர், தருமத்தில் நிலைத்தவர், வாய்மைகளை உணர்ந்தவர், தன் கடமைகளைச் செய்பவர்,
இவர்களையே மக்கள் போற்றுவர்.” (தம்மபதம் 217)
கட்சி தான் ஆட்சிக்கு வரவேண்டுமெனவும் தன் உயிரைப் பணயம் வைத்து வாழ்வை சேவையாக நடாத்திய
கே ஏ சுப்பிரமணியத்தின் (அமரர் 1989) மனைவியாகவும் என் மகன் (PLOTE மீரான் மாஸ்ட்ர்)சத்தியராஜனை
இழந்த தாயாகவும் இக்கடிதத்தை எழுதுகின்றேன்.
எந்த மக்களுக்காக என் கணவர் தன் வாழ்வை அர்ப்பணித்தாரோ எந்த மண்ணுக்காக என் மகன் போன்றோர் தம்
வாலிப வசந்தத்தை அழித்தார்களோ அந்த மக்களும் அந்த மண்ணும் முட்கம்பிவேலிக்குள் முடங்கிய துர்ப்பாக்கியம்
மாரி மழைக்கு முன்பாக முடிவுக்கு வர அவரவர் சொந்த இடங்களுக்கு போக வேண்டும்.அல்லது பாடசாலை
கட்டடங்களில் மாரி அடைமழைக்கு முன்பாக வசிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஒரு உண்மையான இலங்கை பிரசையாக உங்களிடம் உறுதியாகக் கூறுகின்றேன், இன்று மீதமாக உள்ள அனைவரும்
அடக்கி ஒடுக்கப்பட்ட அப்பாவிப் பொது மக்களே.அவர்களின் கதவைத் திறப்பதன் மூலம் நெடுஞ்சாலைகளும்
குளங்களும் அமைக்க முடியும்.
வரண்ட நிலங்களை நன்செய் நிலமாக்க, இதயச் சுத்தியுடன் நன்னெறியில் மக்களை
செம்மையாய்ப் பயிற்றிட, உண்மை நேர்மை உழைப்பு மேலோங்க இன்பமான இலங்கைத்தாய் இயற்கை வனப்பால் அன்பில் உயர்ந்து அழகாய்த் திகழ்வாள், அதற்கு உலக
நாடுகள் உதவ வேண்டுமென உறுதிபட சிங்கப்பூர் TV எதிரொலியில் May 2009இல் கூறினேன்.
இக்கடிதத்தை அவதானத்துடன் வாசித்து தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.நன்றி!
இங்ஙனம்
தங்கள் உண்மையுள்ள
வள்ளியம்மை சுப்பிரமணியம்.
”சீலமும் காட்சியும் நிறைந்தவர், தருமத்தில் நிலைத்தவர், வாய்மைகளை உணர்ந்தவர், தன் கடமைகளைச் செய்பவர்,
இவர்களையே மக்கள் போற்றுவர்.” (தம்மபதம் 217)
2009 Interview by Vasantham Central Singapore TV
No comments:
Post a Comment
வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்