"Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

"Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the FULL BOOK in PDF

Monday, November 2, 2009

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில் சிங்கைத் தமிழ்ச் சங்கத்தில் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கவியரங்கில் இருந்து சில காணொளிகள்.......

மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 50வது நினைவுநாளை முன்னிட்டு மக்கள் கவிஞர் மன்றத்தின் ஏற்பாட்டில்  சிங்கைத் தமிழ்ச் சங்கத்தில் புதுமைத் தேனீ கவிஞர் மா.அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்புக் கவியரங்கில்  இருந்து சில காணொளிகள்....... உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே  ஒளி செய்கின்றோம்...........


'மக்கள் கவிஞர்' பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 50ம் ஆண்டு நினைவு நாள், சிங்கப்பூர் 01 Nov 2009 இல் இருந்து சில காணொளிகள் உங்கள் பார்வைக்கு மிகுந்த நன்றியுடன் இங்கே ஒளி செய்கின்றோம்........


 
           அமைதிப் பாட்டு.
         -----------
 சிங்கப்பூர்ச் சிக்கனத்தில் வாழ்க்கையை ஓட்டு.
 ம்ங்காத ஐக்கியத்தைப் பழக்கத்தில் காட்டு.
 அயலவனை நேசிக்கக் கரத்தினை நீட்டு.
 சுயமாக உழைத்து மகுடத்தைச் சூட்டு.


 சமூக முன்னேற்ற நெறிகளைத் தீட்டு.
 தமிழின் பெருமையைத் தரணியில் நாட்டு.
 அறவழி தன்னில் பொருளினை ஈட்டு.
 குறைகள் சொல்வோர் வாய்தனைப் பூட்டு.


 இல்லாள் வருந்தாமல் ஒத்துழைத்து வீட்டு -
 அல்லல் களைய ந்ம்பிக்கை ஊட்டு.
 குழந்தையின் சிரிப்பில் தலைதனை ஆட்டு.
 புழக்கத்தில் புரளுதாம் கள்ள நோட்டு.


 வேண்டாத விரயங்கள் துருப்புச் சீட்டு.
 பூண்டநன் நெறிகளை அறிஞ்ரிடம் கேட்டு -
 வாரத்தில் ஒருநாள் குடலினை வாட்டு.
 நேரமே கிடையாது என்பது சாட்டு.

 அருவருக்கும் செயலுக்கு வைப்பாய் வேட்டு.
 திருக்குறள் எழுதிச் சுவரிலே மாட்டு.
 விரும்பும் சமாதான வீணையை மீட்டு.
 திரும்புமே உலகில் அமைதிப் பாட்டு.


  வள்ளியம்மை சுப்பிரமணியம்

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்