Monday, January 18, 1971

Symbol of our Marriage - Scythe and Hammer in Gold அரிவாளும் சம்மட்டியும் தங்கத் தாலி



 
Original
AI
Photo above is my Original and below is improved through AI by others. வசிப்பதற்கு வாடகைவீடு எடுக்கப் பட்ட சிரமங்கள் ஏராளம்! எழுதி முடியாது ....திருமணத்தை அவர் (கே-ஏ-சுப்பிரமணியம் அவர்கள் ) எவ்வளவு புனிதமான நிகழ்வாகவும், வரலாற்றுப் பெருமை மிக்க
சம்பவமாகவும், சிக்கனத்துக்குள் கணக்கிட்டு.... உலகினை உருவாக்கும் சிற்பிகளின் இதயத்தை 
ஈர்க்கவேண்டுமென்று கருத்தைக் கொண்டிருந்தாரென்பதை இன்று குறிப்பிடுகின்றேன்;---
                                  இலங்கை வாழ்- அதிலும் யாழ்ப்பாணப் பெண்களின் திருமாங்கல்யம் பாரப்பரிய
முறைப்படிதான் செய்யப்படுகிறது.எனது தாயாரிடமும், அவரது தாயாரிடமும் தொன்று தொட்டுவந்த மாங்கல்யங்களே இருந்தன. “நமது விவாகத்திற்குத் தாலி கட்டுவதானால் நான் எனது
கட்சியின் சின்னமாகிய அரிவாள், சம்மட்டியைத்தான் செய்விப்பேன் “ என்று அழுத்தம் திருத்தமாகக் கூறிவிட்டார். ஆரம்பத்தில் மறுப்புக் கூறினாலும் “உங்கள் கொள்கைக்கு நான் மதிப்பளிக்கிறேன்.நீங்களும் எனது கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று கேட்டுக்கொண்டேன்.


 
19-01-1962 திருமணத்தில் தாலியை திருமதி- புஸ்பலீலா முருகேசு அவர்களின் கையால்
வாங்கி என்கழுத்தில் பூட்டினார்.அவர் யாழ்/ போதனா வைத்திய சாலையில் கடமையாற்றியவர். 
எமது திருமணப்பதிவுக்கும்,திருமணத்துக்கும் நல்லூர்- தோழர்- இராசய்யா அண்ணர் தான் தனது
வாகனத்தையும்,நேரத்தையும் தந்துதவினார்.திருமணப்பதிவு நல்லூர்-இலட்சுமி அம்மையாரின்
நெறியாள்கையில் நடைபெற்றது.தாலி முத்திரைச் சந்தையடி தங்கச் சிற்பி திரு-நடராசா அவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்டது.* இந்த இடத்தில் அந்தத் தங்கச் சிற்பியைப் பற்றிக் கூறியே ஆகவேண்டும்,.அவர் அதி அற்புதமான ஒரு படைப்பாளி.1952ம் வருடம் பிரித்தானிய இளவரசி எலிசபெத் அம்மையார் இலங்கை வந்திருந்தார். அவருக்கு அன்பளிப்பாகக்
கொடுப்பதற்கு பல விற்பன்னர்கள் தங்கள் கைத்திறனை வெளிப்படுத்தி பல ஆக்கங்களை உருவாக்கினர்.திரு-நடராசா அவர்கள் தங்கத்தால் ஒருகடிகாரத்தைச் செய்து வரவேற்புக்குழுவிடம் ஒப்படைத்தாராம்.அம்மையார் அவர்கள் நாட்டிற்கு வந்திறங்கியவுடனே அவரது அன்புத் தந்தையார் காலமாகிய செய்தியும் வந்ததால் நாடு திரும்பி விட்டாராம்..தந்தையின் மறைவுக்குப் பின்னர் எலிசபெத் அம்மையார் மகாராணியாகி  முடிசூடினாராம்.*
செய்யப்பட்ட தாலியுடன், எனக்குத் தெரியாமலே அரைத் தங்கத்தில் ஒரு மாற்று மோதிரமும் செய்யப்பட்டது.


அப்போது ஒரு தங்கத்தின் விலை ரூபா 90/= மாத்திரம் தான். மோதிரத்தில் “ம “ என்ற தமிழ் எழுத்து இருந்தது.அக்கால நாகரீகம் ஆங்கில எழுத்தில் தான் மாற்று மோதிரம்
செய்விப்பார்கள். அவர் ’மணியம்’ நான் ‘ மணி’  அதனால் நான் எந்த விளக்கத்தையும் கேட்கவில்லை.’ம’ வுக்கு விளக்கம் என்னவென்று கேட்டார். ‘ எங்களுடைய பெயர் தான்” என்று
 சாதாரணமாகக் கூறிவிட்டேன். அவரின் விளக்கத்தை நீங்களும் செவிமடுங்கள்;----
*ம* என்பது *மனிதன்*, அவன் பிறந்த *மண்* அவனுள்ளத்தை  ஏற்றுக் கொண்ட *மனம் * அவனைப் புரிந்து கொண்ட வாழ்வு தரும் *மணம்* அதனைத் தொடர்ந்துவரும் * மக்கள்* மக்கள் பலத்தால் வரும் * மகிழ்ச்சி* மண்ணிலே வாழ்ந்தகாலத்தில் அவனது செயற்பாடுகள் ....நடைமுறைகள்....
அடக்கு முறைக்கு குரல் கொடுக்கும் * மறுப்பு * அதனால் ஏற்படும் * மரணம்* கூட *ம* வில் தானே
ஆரம்பிக்கிறது.” என்று பெரிய விரிவுரையே ஆற்றி விட்டார்.........(தொடரும்)
கொண்ட வாழ்வு  இணையும் * மணம்*

No comments:

Post a Comment

வணக்கம்! தங்கள் செய்திக்கு மிக்க நன்றி. அம்மா...வள்ளியம்மை சுப்பிரமணியம்

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF