Thursday, October 21, 1971

சுண்ணாக எழுச்சி அல்லது ஒக்டோபர் எழுச்சி ஒக்டோபர் 21, 1966

 


பொலீஸ் தாக்குதலுக்கு முன் ஊர்வலத்தில் வீ.ஏ. கந்தசாமி, டாக்டர் சு.வே. சீனிவாசகம், எம்.முத்தையா . கே. டானியல், ஆர்.கே.சூடாமணி, டி.டி.பெரேரா, சிவப்புச் சட்டையுடன் கே. ஏ. சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை தாங்கிச் செல்கின்றனர்.

'''சுண்ணாக எழுச்சி''' அல்லது '''ஒக்டோபர் எழுச்சி''' என்பது [[தீண்டாமை|தீண்டாமைக்கும்]], சாதியத்துக்கும் எதிராக [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாணத்தில்]] நடத்தப்பட்ட எதிர்ப்புப் போராட்ட ஊர்வலமும், அதைத் தொடர்ந்த எழுச்சியையும் குறிக்கிறது. தீண்டாமைக்கு எதிரான இந்தப் போராட்டத்தை இடதுசாரிகள், குறிப்பாக [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்டு)|இலங்கைப் பொதுவுடமைக் கட்சி (சீன சார்பு)]] முன்னெடுத்தனர். சட்ட அனுமதி [[காவல்துறை|காவல்துறையினரிடம்]] கேட்கப்பட்ட போதும், அது தரப்படவில்லை. எனினும் ஊர்வலம் ஒக்டோபர் 21, 1966 ம் திகதி, [[சுண்ணாகம்|சுண்ணாகத்தில்]] இருந்து புறப்பட்டு, யாழ் முற்றவெளி நோக்கி தொடங்கியது. அந்த ஊர்வலத்தை தடுத்த காவல்துறையினர், ஊர்வலத்தில் கலந்து கொண்டோரைக் கடுமையாகத் தாக்கினர், பலரைக் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து, கலந்து கொண்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும் மோதல் நிலை உருவானது. இதைத் தவிர்க்க முழக்கங்கள் இன்றி ஊர்வலத்தைத் தொடர காவல்துறை அனுமதித்தது. ஊர்வலம் தொடர மேலும் பல மக்கள் சேர்ந்து கொண்டனர், மீண்டும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கொட்டும் மழையிலும் கூட்டம் முற்றவெளியில் நடத்தப்பட்டது. இந்நிகழ்வும், இதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களுமே ஒக்டோபர் எழுச்சி என்று ஈழத்தில் அறியப்படுகிறது.

[[சி. கா. செந்திவேல்]], [[ந. இரவீந்திரன்]]. 1989). இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும். சென்னை: தெற்குப் பதிப்பகம். == பின்புலம் == யாழ்ப்பாணத்தில் 1960 களிலும் [[தீண்டாமை]] பொது இடங்களிலும் தீவரமாகக் கடைப் பிடிக்கப்பட்டு வந்தது. தாழ்த்தப்பட்டோர் பல கோயில்களுக்குள் செல்ல முடியாது, பல பாடசாலைகளில் படிக்க முடியாது, பொது உணவகங்களில் உணவு உண்ண முடியாது, பொதுக் கிணற்றையோ, குளத்தையோ பயன்படுத்த முடியாது என பல விதங்களில் தீண்டாமை வெளிப்பட்டது. தீண்டாமை சாதியத்தின் கோர வெளிப்பாடாக இருந்தது. இது மிக மோசமான முறையில் யாழ்ப்பாணத்திலேயே வெளிப்பட்டது. இதனை எதிர்த்து நீண்ட காலமாக எதிர்ப்புப் போராட்டங்கள் நடைபெற்றன. எனினும் 1960 களில் சர்வதேசப் புரட்சிச் சூழ்நிலை, இந்தத் தளத்திலும் எதிர்ப்புப் போராட்டங்களைக் கூர்மைப்படுத்தியது. அதன் ஒரு திருப்பு முனையாக ஒக்டோபர் எழுச்சி பார்க்கப்படுகிறது.{{cite news|title=Conference held to explore and redress caste oppression|url=http://www.ft.lk/article/575291/Jaffna-Conference-held-to-explore-and-redress-caste-oppression|newspaper=DailyFT By Thulasi Muttulingam|date=22 October 2016|df=}} == வரலாற்றை மாற்றிய ஊர்வலம் == [[படிமம்:21 October 1966.png|left|thumb|பொலீஸ் தாக்குதலுக்கு முன் ஊர்வலத்தில் வீ.ஏ. கந்தசாமி, டாக்டர் சு.வே. சீனிவாசகம், எம்.முத்தையா . [[கே. டானியல்]], ஆர்.கே.சூடாமணி, டி.டி.பெரேரா, சிவப்புச் சட்டையுடன் [[கே. ஏ. சுப்பிரமணியம்]] ஆகியோர் தலைமை தாங்கிச் செல்கின்றனர்.]] ஊர்வலத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் கொழும்பிலிருந்து வந்திருந்த கட்சித் தலைவரான [[நா. சண்முகதாசன்]] சுன்னாகம் பொலிஸ் நிலையம் சென்று ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கும்படி இறுதியாக ஒருமுறை கேட்டுப் பார்த்தார். அப்பொழுதும் பொலிசார் மறுத்துவிட்டனர். அன்றைய தினம் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்களும் கம்யூனிஸ்ட்டுகளும் [[சுண்ணாகம்]] சந்தை வளாகத்திலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சாதியத்தை எதிர்த்த புரட்சிகர முழக்கங்களுடன் பேரணியை ஆரம்பித்தனர். சிறிது நேரத்தில் பிரதான வீதியில் அமைந்திருந்த சுண்ணாகம் பொலிஸ் நிலையம் முன்பாகக் குவிக்கப்பட்டிருந்த நூற்றுக்கு மேற்பட்ட பொலீஸ் படையினர் பேரணியை வழிமறித்துத் தாக்கினர். தலைமை தாங்கி முன்னணியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது கண்மூடித் தனமான குண்டாந்தடித் தாக்குதல் நடாத்தப்பட்டது. மேற்படி தாக்குதலில் தலைமை தாங்கி முன்னணியில் சென்ற வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் இரத்தம் வழிந்தோட பொலீஸ் நிலையத்திற்குள் இழுத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர். அன்றைய பேரணியில் முன்னே சென்று கொண்டிருந்த டாக்டர் சு.வே.சீனிவாசகம், [[கே. டானியல்]], [[எஸ்.ரி.என்.நாகரட்ணம்]], டி.டி.பேரேரா, எம்.முத்தையா மற்றும் அன்றைய வாலிபர் இயக்கத் தலைவர்கள் கடுமையான அடிகாயங்களுக்கு உள்ளாகினர். {{cite book|title=வடபுலத்து பொதுவுடமை இயக்கமும் தோழர் கார்த்திகேசனும்|url=http://noolaham.net/project/148/14737/14737.html }} [[சி. கா. செந்திவேல்]] 2003{{cite book|title=சாதி தேசம் பண்பாடு|url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81 }} [[ந. இரவீந்திரன்]] 2014 அதைத் தொடர்ந்து ஊர்வலத்தில் சென்றவர்கள் நடுவீதியில் ''''சாதி அமைப்புத் தகரட்டும் சமத்துவ நீதி ஓங்கட்டும்'''' முழக்கங்களுடன் அமர்ந்து விட்டனர். பொலிசாரால் ஒன்றும் செய்ய முடியாமல் போய்விட்டது. பின்னர் பொலிசார் இறங்கிவந்து கோசங்கள் எழுப்பாது இரண்டு இரண்டு பேராக நடந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர். அதன் பிரகாரம் தமது பேச்சுச் சுதந்திரம் மறுக்கப்பட்டதை உணர்த்தும் முகமாக வாய்களைக் கறுப்புத் துணிகளால் கட்டிக்கொண்டு [[யாழ்ப்பாணம்]] வரை நடந்து சென்ற செய்தி அறிந்து, வீதியோரங்களில் கூடி நின்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தமது கைகளை அசைத்து தமது ஒருமைப்பாட்டை தெரிவித்துக் கொண்டனர். மாலையில் யாழ் முற்றவெளியில் மாபெரும் பொதுக்கூட்டம் டாக்டர் சு.வே.சீனிவாசகம் தலைமையில் நடைபெற்றது. [[நா. சண்முகதாசன்]], டி.டி.பேரேரா, [[சி. கா. செந்திவேல்]] உட்பட பலர் அங்கு உரையாற்றினர். கைது செய்யப்பட்ட வீ.ஏ.கந்தசாமி, [[கே. ஏ. சுப்பிரமணியம்]], ஆர்.கே.சூடாமணி ஆகிய மூவரும் மருத்துவ சிகிச்சைக்காக நள்ளிரவில் ஜாமீனில் விடுதலையானார்கள். ஆனால் நீதிமன்ற வழக்கு சில ஆண்டுகள் தொடர்ந்தது. குற்றவாளிகள் சார்பாக, அனைத்துலக அரசியல் சட்ட நுணுக்கங்களில் அசாத்தியமான நுண்ணறிவும் திறனும் கொண்ட சட்ட நிபுணர் [[நடேசன் சத்தியேந்திரா]] ஆஜராகி விடுதலை பெற்றுக் கொடுத்தார்.{{cite news |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF |title=தொழிலாளி 1967.11.09 பக்.1, தொழிலாளி 1968.07.17 பக்.1 }} {{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1966.10.22 |title=ஈழநாடு 1966.10.22 பக்.1 }} == எழுச்சியைத் தொடர்ந்த வெகுஜன போராட்டங்கள் == [[சாவகச்சேரி]], [[சங்கானை]], [[அச்சுவேலி]], [[நெல்லியடி]] போன்ற இடங்களில் 1966 அக்டோபர் எழுச்சியைத் தொடர்ந்து தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரிப்போராட்டங்களில் ஈடுபட்ட [[தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம்]] அமைப்பைச் சேர்ந்தவர்கள் பொய்க்குற்றச் சாட்டுக்களின் பேரில் கைது செய்யப்பட்டுச் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தனர். பலர் வெளியே வரமுடியாதவாறு கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களின் இக்கட்டான நிலைமையை தென்னிலங்கை மக்களுக்கும் தெரியப்படுத்தும் பொருட்டு கம்யூனிஸ்ட் கட்சியோடும், ஏனைய முற்போக்கு இயக்கங்களோடும் சம்பந்தப்பட்ட பல முக்கியஸ்தர்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்தனர். அவர்களில் முக்கியமானவர் [[கம்பஹா]] தொகுதிப் பாராளுமன்ற உறுப்பினர் [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்களாகும். இவரை, வடபகுதிப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கும், ஒடுக்கப்பட்ட மக்கள் ஆலயப்பிரவேசம் செய்வார்கள் என்ற அச்சத்தால் பூட்டப்பட்டிருந்த ஆலயங்கள், கோவிற்கேணிகள், கிணறுகளில் அந்த மக்கள் தண்ணீர் எடுப்பதைத் தடுக்கும் விதத்தில் அவற்றைச் சுற்றி முட்கம்பி வேலிகள் அமைக்கப் பட்டிருந்ததையும், ஒடுக்கப்பட்டோர் குடிசைகளுக்குத் தீ மூட்டிய உயர்சாதியினரால் பாதிக்கப் பட்டவர்களின் கையறு நிலைமைகளையும் [[கே. ஏ. சுப்பிரமணியம்]] நேரடியாகக் காண்பித்தார். [[எஸ். டி. பண்டாரநாயக்கா]] அவர்கள் தான் கேட்ட, பார்த்த பாதிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றி பாரளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். {{cite web |url=http://archive.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm |title=கே. ஏ. சுப்பிரமணியம் நிறைவுகளும் ,நினைவுகளும் }} சூத்திரம் கே.சுப்பையா 2012 {{cite news |url=http://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF_1966.11.25 |title=தொழிலாளி 1966.11.25 பக்.1}} {{cite news |url=http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81_1968.07.23 |title=பாரளுமன்றத்தில் [[எஸ். டி. பண்டாரநாயக்கா]], ஈழநாடு 1968.07.23 பக்.1}} போராட்டங்களில் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களின் வாயிலாக கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் சிறைச்சாலைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களுக்காக, நீதிமன்றங்களில் ஆஜராவதற்கு யாழ்ப்பாண சட்டத்தரணிகள் மறுப்புத்தெரிவித்து, சாதியமைப்பின்மீது தமது விசுவாசத்தை வெளிப்படுத்திய வேளை, தென்னிலங்கையிலிருந்து பல சிறந்த வழக்கறிஞர்களை யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வந்து அந்த வழக்குகளிலிருந்து ஒடுக்கப்பட்ட மக்கள் விடுவிக்கப்பட்டார்கள். வழக்கறிஞர்களில் முக்கியமானவர் பின்னர் மீயுயர் நீதிமன்ற நீதிபதியாகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய [[தெ. வ. இராசரத்தினம்|நீதிபதி தெல்லிப்பழை வனராஜா இராசரத்தினம்]] அவர்களாகும். 1989 நினைவுமலர் ஒன்றில் இடம்பெற்ற அவர்களின் கருத்துச் செய்தி:
"நான் சட்டத்தரணியாகப் பணியாற்றத் தொடங்கிய ஆரம்ப கட்டத்திலும் அதன் பின்னரும் தொழிலாளர்களுக்கும் தொழிற் சங்கவாதிகளுக்கும் எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மிக கடினமான வழக்குகளில் எல்லாம் [[கே. ஏ. சுப்பிரமணியம்|சுப்பிரமணியம்]] என்னை ஆஜராகும் படி செய்வித்தார். அந்தக் கட்டத்தில் அரசும் சமுதாயமும் தொழிலாளர்களையும் தொழிற்சங்கவாதிகளையும் பெரும் தொந்தரவுகளுக்கு உட்படுத்திக் கொண்டிருந்தனர். ஆனால் [[கே. ஏ. சுப்பிரமணியம்|சுப்பிரமணியம்]] எல்லோர்க்கும் உற்சாகம் ஊட்டக் கூடிய தலைவராகவிருந்ததால், நாம் வழக்குகளில் தோற்பது மிகவும் அரிது. அவர் சார்பாக நான் ஆஜரான கடைசி வழக்கு [[பன்றித்தலைச்சி அம்மன் கோவில்|சாவகச்சேரியில் ஆலயப் பிரவேசத்துடன்]] தொடர்புற்றிருந்த ஒர் வழக்கு. கிணறுகளை நச்சுப்படுத்துவதற்கு உயர் சாதியினர் முயன்றனர்; ஆலய வளவிற்கு தாழ்த்தப்பட்டவர்கள் புகுவதைத் தடுப்பதற்கு பொலிசார் மேல்சாதியினருக்கு உதவி புரிந்து கொண்டிருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களை ஒழுங்கமைத்துக் கொண்டு இந்தப் படுமோசமான, ஈனத்தனமான செயலைச் செய்யாது பொலிசாரைத் தடுத்தனர். அவர்கள் பொலிசாரைத் தாக்கவும் செய்தனர். பரபரப்புமிக்க வழக்காக இது இருந்ததோடு, உயர் சாதியினர் நீதிமன்றத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர். நாம் வழக்கில் வென்றோம்." - [[தெ. வ. இராசரத்தினம்]] .{{cite book |url= http://www.noolaham.org/wiki/index.php/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D,_%E0%AE%95%E0%AF%87._%E0%AE%8F._(%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D ) |title= சுப்பிரமணியம், கே. ஏ. (நினைவுமலர்) பக்.24 , நீதிமன்றங்களில் ஆஜரான [[தெ. வ. இராசரத்தினம்]]}}
== எழுச்சி ஞாபகார்த்த நிகழ்ச்சிகள் == == இவற்றையும் பார்க்க == * [[சங்கானைக்கு என் வணக்கம்]] == மேற்கோள்கள் == [[பகுப்பு:இலங்கையில் சாதியத்துக்கு எதிரான போராட்டங்கள்]] [[பகுப்பு:தமிழ்ச் சமூகத்தில் சாதிய எதிர்ப்பு இயக்கம்]] [[பகுப்பு:அக்டோபர் நிகழ்வுகள்]] [[பகுப்பு:1966 நிகழ்வுகள்]]

அக்டோபர் 21 -ம் திகதி ஊர்வலம் தாக்கப்பட்டதைக் கண்டித்தும் தீண்டாமைக் கொடுமையை எதிர்த்தும் மீண்டும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் சுன்னாகம் சந்தை வளாகத்தில் 25 - 11 - 1966 அன்று நடைபெற்றது.
தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் நா. சண்முகதாசன் - எஸ். டி. பண்டாரநாயக்கா - கே. டானியல் - வி. ஏ. கந்தசாமி - சுபைர் இளங்கீரன் உட்படப் பலர் உரையாற்றினர்.
இக்கூட்டத்தைத் தொடர்ந்து வடபகுதியெங்கும் பல ஊர்வலங்களும் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.
1967 -ம் ஆண்டு மேதினம் மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியது.



ஈழநாடு 1966.11.27 Thanks to https://noolaham.net/project/404/40346/40346.pdf

















Thanks to https://noolaham.net/project/404/40394/40394.pdf

Sunday, May 16, 1971

15,16 & 17 May 1964 Badulla Conference of the Ceylonese Federation of Communist and Progressive Youth Leagues





The Badulla Conference of the Ceylonese Federation of Communist and Progressive Youth Leagues chaired  by Comrades H. P. Amarapala, N. L. Perera, M. Badurdeen, K.A. Subramaniam and S. Devapriya  Ranasinghe was held on 15,16 & 17 May 1964
இலங்கை கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இளைஞர் கழகங்களின் சம்மேளனத்தின் பதுளை மாநாடு தோழர்கள் எச்.பி.அமரபால, என்.எல்.பெரேரா, எம்.பதுர்தீன், கே.ஏ. சுப்பிரமணியம் மற்றும் எஸ். தேவப்பிரிய ரணசிங்க ஆகியோர் தலைமையில் 1964 மே 15,16 & 17 ஆகிய தேதிகளில் நடைபெற்றது

பதுளையில் நடந்த இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் மாநாட்டில்  சிங்களத் தோழர்களுடன் தோழர் கே.ஏ.சுப்பிரமணியம்



On the final day of the conference 17 May 1964 in the Badulla Conference of the Ceylonese Federation of Communist and Progressive Youth Leagues , Comrade Premalal Kumarasiri made long speech while presided by Comrade K.A Subramaniam. 
இலங்கை கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இளைஞர் கழகங்களின் பதுளை மாநாட்டில் இறுதி நாளான 17 மே 1964 அன்று , தோழர் கே.ஏ.சுப்பிரமணியம் தலைமையில் தோழர் பிரேமலால் குமாரசிறி நீண்ட உரை நிகழ்த்தினார்.
Source https://noolaham.net/project/284/28315/28315.pdf  Page 2

H. P. Amarapala, President of the Ceylon Federation of the Communist and Progressive Youth Leagues; W. A. Dharmadasa, General Secretary of the Ceylon Federation of the Communist and Progressive Youth Leagues

Monday, May 3, 1971

About the banned May Day procession held on 1st May 1969 from 'Thinapathy' (தினபதி) News Paper 03-05-1969

1969 ஆம் ஆண்டு  மே முதலாம் திகதி வெசாக் போயா தினம் - மே தினம் ,.......தினபதி 03-05-1969

1969 மே நாள் மனசைக் கனக்க வைக்கிறது.


“அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு” என்ற இயக்கம் உருவாக்கப்பட்டு, 8 மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து, தொடர்ந்து இயக்கங்களை நடத்தியது. (அத்தோடு உலகின் பல நாடுகளும் தொழிலாளர் உரிமைக்காய் போராடிக்கொண்டிருந்தனர். )
மே 1, 1886 அன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே, மேதினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது. அமெரிக்காவிலுள்ள சிக்காகோ நகரில் 8 மணித்தியால வேலையே வேண்டுமென வெண்கொடி ஏந்திய தொழிலாளர்கள் மேல் , அதிகாரவர்கத்தின் ஆணவம் இரத்தம் சிந்தவைத்து , செங்கொடியாக்கியது . ஆனால் இன்றைய அமெரிக்காவில், புரட்டாசி மாத முதல் திங்களே தொழிலாளர் தினம்! நிற்க,

பௌத்தவாத அரசியலமைப்புக் கொண்ட இலங்கையில் , 1969 ஆம் ஆண்டு ‘மே’ தினத்தன்றும் இதே போல ‘வெசாக் ‘தினத்தைக் காரணமாக்கி, அம்மேதினத்தைக் கொண்டாடுவதை டட்லி சேனநாயக்காவின் யூ.என்.பி அரசு தடைசெய்தது. அந்த தடையை ஏற்றுக்கொள்ளாத புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி யாழ்பாணத்தில் தடையைமீறி ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை நடத்தியது. இக்கதையை நான் , பல தடவைகள் தோழர் மணியம் வாயிலிருந்தும் ,சக தோழர்கள் மூலமும் கேட்டிருக்கிறேன். மீண்டும் அதைப் பகிர நினைக்கிறேன்.

கூட்டத்திற்கும்,ஊர்வலத்திற்குமான வியூகத்தை - தலைமை ஏற்றிருந்த தோழர் கே ஏ சுப்பிரமணியம் வகுத்தார். யாழ் நகரில் , மூன்று திரையரங்குகளும் அருகருகே அமைந்திருந்த வெலிங்டன் தியேட்டர் சந்தியில் ( இன்றைய லிங்கம் கூல்பார்) இருந்து ஆரம்பிப்பதாகத் தீர்மானம். முதல் நாளிரவே கொடி பிடிப்பதற்கான கம்புகள் ஆங்காங்கே மறைத்து வைக்கப்பட்டது. தேவையான கொடிகள் கைக்குட்டைகள் போல மடித்து சேர்ட், டவுசர்களினுள் மறைத்து வைத்துவிட்டு, தியேட்டரில் படம் முடிந்து வெளிவருவது போலவும் , படத்திற்காய் காத்திருப்போர் போலவும் ஊர்வலத்தை ஆரம்பிப்பதாகத் தீர்மானிக்கப்பட்டது. பத்திரிகை நண்பர்களுக்கும். புகைப்படம் எடுப்போருக்கும் நிச்சயம் ஊர்வலம் நடைபெறும் என்ற செய்தி சொல்லப்பட்டது. இதை பொலிசாரும் அறிந்து கொள்வர் என்பது அவர்கள் அறிந்ததே. ஆனால் மேலதிக தகவல்கள் அனைத்தும் இரகசியமாக வைக்கப்பட்டது. வழமைபோல அன்று, மூன்று சிறு குழந்தைகளுக்கும் முத்தமிட்டு , எனக்கு நம்பிக்கை சொல்லி அவர்கிளம்பிவிட்டார். அரசு -மேதினத்திற்கு அனுமதி அளிக்காத்தால் , சந்திப்பு மட்டுமே நிகழும் என நினைத்தேன். அது யாழ்ப்பாணத்தில் மிகப்பெரும் தடையை மீறிய ஆர்ப்பாட்ட ஊர்வலமாக நடைபெற்றது. 

குறித்த நேரத்தில் எழுச்சியுடன் ஆரம்பித்த அவ்வூர்வலம், எங்கு ஆரம்பித்தது என்பதைப் பொலீசார் கண்டறிவதற்கு முன்னரே , ஊர்வலம் பிரதான பஸ் நிலையத்தை அடைந்து விட்டது. அதனால் கிலேசமும், கோபமும் அடைந்த போலீசார் மூர்கத்துடன் கண்ணீர்க்குண்டுகளை வீசித் தாக்கினர். பொலிசாரும் ஊர்வலத்தினரும் தாக்குதலில் ஈடுபட்டனர். சிலர் காயங்களுக்கு ஆளாகினர். தோழர் மணியம் மிகவும் தடுமையான தாக்குதலுக்கு உள்ளானார். ஆஸ்பத்திரியில் பொலிஸ் காவலுடன் வைத்தியம் செய்யப்பட்டு , பின்பு அவர்கள் நீதி மன்றில் நிறுத்தப்பட்டனர். 1966இல் நடந்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டத்தில் உடல் நொருங்கி மாறிவந்த வேளையில் , மீண்டும் அவர் நொருக்கப்பட்டது, என்னை நிறையவே பாதித்தது. தலைமைத் தோழர் குடும்பத்துடன் வெளிநாடு சென்றுவிட்டார். மற்றைய தோழர்களின் உணர்வும், அன்புமே அன்று ஆறுதலாக இருந்தது. ஒரு மாதங்கள் கடந்தும் காயங்கள் மாறாத நிலையில் , ஊர்திரும்பிய தோழர் சண் வீட்டில் , தோழர் கன்சூர் அவர்களால் பராமரிக்கப்பட்டார். நித்திரையின்றித் தவித்தார். எஸ்டிபண்டாரநாயக்க அவர்கள் இத்தாக்குதல் பற்றி பாரளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள். அந்நேரங்களின் நினைவுகள், இன்றும் எனக்கு வலிக்கிறது. அவர் வாழ்வு ஐம்பது வருடங்களாக சுருங்கியதற்கு இவையெல்லாம் காரணமோ? போராட்டங்களுக்கும், தாக்குதல்களுக்கும் ஒளித்து, எந்த உடல் வலிகளும் அற்று அரசியல் பேசியோர் மத்தியில் , நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், அஞ்சேல் என்ற சொல்லுடன் -தோழர் இறுதிவரை வாழ்ந்தார். -வள்ளியம்மை சுப்பிரமணியம்

About the banned May Day procession held on 1st May 1969 from 'Thinapathy' (தினபதி) News Paper  03-05-1969

Sunday, May 2, 1971

1969 Mrs Parameswari Sanmugathasan's letter to Mrs Valliammai Subramaniam about 1969 May Day Rally in Jaffna

தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் மனைவி,  திருமதி. பரமேஸ்வரி அக்கா,  வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு 1969 மேதின பேரணி பற்றி எழுதிய கடிதம்

சத்தியமனை நூலகத்தில் இருந்து ...

தோழர் நா. சண்முகதாசன் அவர்களின் மனைவி,  திருமதி. வள்ளியம்மை சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம் 

 

2 மே  1969


23/7 ஸ்கோஃபீல்ட் ப்ளேஸ்

கொள்ளுப்பிட்டி, கொழும்பு-3


என் அன்புமிக்க சகோதரி,


யாழ்ப்பாணத்தில் மே தினத்தன்று நடந்தவற்றை நேற்று இரவு அறிந்து மிகவும் மனம் வருந்தினோம். முக்கியமாக, எமது தோழர் மணியம் காயப்பட்டதை அறிந்து அளவிட முடியாத துயரம் அடைந்தோம். எங்களுக்கு இப்படியானால், உங்கள் மனம் எவ்வளவு பாடுபடும் என்பதை நான் அறிவேன். என்ன செய்வது ?  நாம் இருக்கும் முதலாளித்துவ ஆட்சிக்கு கீழ் போராட்டம் ஒரு இலேசான பாதை அல்ல. நாம் என்ன கஷ்டத்துக்கும், தியாகத்துக்கும் தயாராக இருக்க வேண்டும். நீங்கள் நல்ல மனோதிடத்துடன் இந்த நேரத்தில் இருந்து, மணியத்துக்கும், குழந்தைகளுக்கும் ஆறுதல் அளிக்க வேண்டும்.


முக்கியமாக மணியத்தின் காயங்களை சீக்கரம் குணப்படுத்துவது எமது முதல் வேலையாக இருக்க வேண்டும். அவர் போலீசாரின் கைதியாக இருந்தாலும் கவர்மெண்ட்து  ஆஸ்பத்திரியில் இருந்தாலும் அங்கு அவருக்கு சரியான சிகிச்சை செய்யப்படாவிட்டால், அல்லது சீக்கிரத்தில் குணமடையாமல் இருந்தால், நீங்கள் ஆரும் வெளியிலிருந்து நல்ல டாக்டரையும் கொண்டுவந்து காட்டி நல்ல வைத்தியம் செய்ய வேண்டும். அப்படி செய்வதற்கு சட்டத்தில் அனுமதி உண்டு. போலீசாரின் மிரட்டலுக்கு பயப்பட வேண்டாம். அவர்கள் சட்டத்துக்கு மீறி சர்வதிகாரம் செலுத்துகிறார்கள். நாம் போராடியே எமது சாதனைகளை அடைய வேண்டும். எப்படியாவது மணியத்துக்கு சிறந்த சிகிச்சை விரைவில் செய்து அவரின் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும். அதற்கு வேண்டிய பண உதவிகள் அனுப்புவோம். இன்று விடுதலை தினமாகிய படியால் தபால் கந்தோர் மூடி இருக்கிறது. நாளைக்கு தந்தியில் காசு அனுப்புவோம்.


எங்களுக்கு உடனே உங்கே வந்து மணியத்தைப் பார்க்க இருக்கும் அவா அளவு கடந்தது . ஆனால் நாளை காலை ஒன்பது மணிக்கு சண் உக்கு ஒரு வழக்கு. அதுவும் மே தினத்தையொட்டி போலீஸ் வைத்தது .  நாளையின்று காலை நானும் இவரும் அல்பேனியாவுக்கு போகிறோம். மாத முடிவில் திரும்பிடுவோம். ஆனபடியால் உங்கே வர முடியாத நிலையில் இருக்கிறோம். 


எங்கள் அருமை தோழர் மணியத்திடம், நானும் ‘சண்’ உம் மிக அன்புடன் விசாரித்ததாக சொல்லுங்கள். மனதை தளரவிடாது மாவோவின் சிந்தனையால் சக்தியை ஊட்டி தைரியமாக இருக்கும்படி சொல்லுங்கள். அவர் சீக்கிரத்தில் பூரண சுகம் அடைய வேண்டும் என்பதே எமது பிரதான வேலை..  உங்கே அளிக்கப்படும் சிகிச்சை சரி இல்லாவிடில், வெளியிலிருந்து நல்ல டாக்டர்களை வருவித்து தாமதிக்காமல் வேண்டியவற்றை  செய்யவும். அதற்கு அவர்கள் அனுமதி தர சட்டம் இருக்கிறது. சட்டத்தையும் மீறி மறுத்தால்  போராட அஞ்சவேண்டாம் .



எதற்கும் எமது காரியாலயத்திற்கு தந்தி மூலமோ அல்லது டெலிபோன் மூலமோ தேவையானவற்றுக்கு அறிவியுங்கள். எஸ் டி பண்டாரநாயக்கா வுக்கும் அறிவிக்கலாம். அவர் சீக்கிரம் உங்கே வருவார். பிள்ளைகளை துக்கப்பட விடாமல் சந்தோஷமாக இருக்க பண்ணுங்கள். கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இவை எல்லாம் நன்மைக்கே. எமது பலம் அதிகரிப்பது கண்டு எமது எதிரிகள் அஞ்சுகிறார்கள். அதனால் அடக்குமுறைகளை அளவுக்கு மீறி கையாளுகிறார்கள்.


வேறு என்ன எழுத? எழுத எழுத எவ்வளவோ எழுதலாம். நேரில் கண்டு கொள்ள இயலாமைக்கு மிகவும் வருந்துகிறோம். தைரியத்தை கைவிட வேண்டாம். புரட்சி வணக்கங்கள்.

பரமேஸ்வரி அக்கா. 



ஈழநாடு 1969.05.02 Page 1






ஈழநாடு 1969.05.01 Page 1




ஈழநாடு 1969.04.30 Page 1 ஈழநாடு 1969.04.30 Page 1




ஈழநாடு 1969.04.29 Page1  ஈழநாடு 1969.04.29 Page1 





About the banned May Day procession held on 1st May 1969 from 'Thinapathy' (தினபதி) News Paper 03-05-1969  மே நாள் மனசைக் கனக்க வைக்கிறது.

Saturday, May 1, 1971

K. A. Subramaniam speech on 1st May 1970 ஆண்டு ’மே’ தினத்திலன்று கே. ஏ. சுப்பிரமணியம் உரையாற்றியது

 1970ம் ஆண்டு ’மே’ தினத்திலன்று யாழ்நகரையே உலுக்கிய மேதின ஊர்வலம் வீரத்தின் விளைநிலமாம் சங்கானையில் ஆரம்பமாகி யாழ்-நகரமண்டபத்தை வந்தடைகிறது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தலைமை உரையாற்றிய கே. ஏ. சுப்பிரமணியம் 1969 மேதின அரச அடாவடித்தனங்களை எடுத்துரைத்து “என்னைச் சுட்டுச் சதை--சதையாக வீசியெறிந்தாலும் எனது உடலில் இருந்து சிந்தும் ஒவ்வொரு துளி இரத்தத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் விடுதலைப் போராளிகள் தோன்றுவார்கள்! அவர்கள் மக்கள் விடுதலைப் போராட்டத்தை முன்னெடுப்ப்பார்கள்” என்று வான் அதிரும் கரவொலிக்கு மத்தியில் கூறினார்கள்.


About the banned May Day procession held on 1st May 1969 from 'Thinapathy' (தினபதி) News Paper 03-05-1969

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரான சம்பவமொன்றை இவ்வேளையில் நினைவுகூருவது பொருத்தமானது என்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

"1965 முதல் 1970 வரையான காலத்தை இலங்கையின் முதலாவது தேசிய அரசாங்கம் ஆட்சி புரிந்தது. இதன் பிரதமராக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் டட்லி சேனநாயக்க இருந்தார். இவரது தேசிய அரசில் அங்கம் வகித்த் பிரமுகர்கள் எவரும் இப்போது அரசியலில் இல்லை.


 1968ம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி தொழிலாளர் தினமன்று வெசாக் தினமும் ஒன்றாக வந்தது. பௌத்தத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சிங்கள அரசாங்கம் மே தினத்தை உத்தியோகபூர்வமாகத் தடைசெய்தது. பிரதான அரசியற் கட்சிகள் அனைத்தும் இதனை ஏற்றுக் கொண்டன.


 தேசிய அரசாங்கத்தில் தமிழரசுக் கட்சியின் பிரதிநிதியாக செனட்டர் மு. திருச்செல்வம் உள்;ராட்சி அமைச்சராக பதவி வகித்தார். இதனாலோ என்னவோ, தமிழ் அரசுக் கட்சி  அரசாங்கத்தின் முடிவை ஏற்றுக் கொண்டது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே பௌத்தம் இலங்கையின் அதிகாரபூர்வ மதம் என்பதை தமிழரசுக் கட்சி ஏற்றுக் கொண்டதை இதனூடாகப் பார்க்கலாம்.


ஆனால், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் யாழ்ப்பாணக் கிளை அரசாங்கத்தின் இந்த முடிவை முழுமையாக எதிர்த்தது. மே முதலாம் திகதியே யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்தப்படுமெனவும் அறிவித்தது.


இதற்கு பொலிஸ் அனுமதி கிடைக்கவில்லை. அதனை ஏற்றுக் கொள்ளாத மேற்படி யாழ்ப்பாணக் கிளையின் செயற்பாட்டாளரான கே.ஏ. சுப்பிரமணியம் மே தின ஏற்பாடுகளை ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தினார்.


இதனால் பொலிசார் தீவிரமான செயற்பாட்டில் இறங்கினர். எக்காரணம் கொண்டும் யாழ்ப்பாணத்தில் மே தினம் நடத்த அனுமதிக்கக்கூடாதென்ற உத்தரவு கொழும்பிலிருந்து வடமாகாண பொலிஸ் சுப்பிரிண்டனுக்குப் பிறப்பிக்கப்பட்டது.


அப்போது பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர். சுந்தரலிங்கம் பணிபுரிந்தார். குடாநாட்டு ஊடகவியலாளர்களுடன் நெருக்கமான உறவைக் கொண்டிருந்த சாமர்த்தியசாலி இவர். உதவி பொலிஸ் சுப்பிரிண்டனாக ஆர்.தவராசா இருந்தார். மிகக்கடும்போக்கான, ஆனால் நேர்மையான அதிகாரி இவர்.


அவ்வேளை நான் யாழ்ப்பாணம் ஷஈழநாடு| பத்திரிகையின் அலுவலக செய்தியாளராக இருந்தேன். அமரர்களான செல்லத்துரை (வீரகேசரி), பரராஜசிங்கம் (தினகரன்), கதிரவேலு (டெய்லி நியூஸ்), புஸ்பரத்தினம் (டெய்லி மிறர்), அரசரத்தினம் (தினபதி) ஆகியோர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களாக அப்போது பணிபுரிந்தனர்.


சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரமுகர் சுப்பிரமணியம் ஊடகவியலாளர்களுடன் அந்நியோன்யமாகப் பழகுபவர். சீனப் படங்களுடனான கலண்டர்கள், பலவர்ண அச்சுப் புத்தகங்கள் போன்றவற்றை வருடாவருடம் அன்பளிப்பாக வழங்குபவர்.


இதனால், இவர்கள் நடத்தவுள்ள மே தினக்கூட்ட இடத்தை அறிவதற்காக பொலிஸ் சுப்பிரிண்டன் ஊடகவியலாளரான எங்களுடன் அடிக்கடி தொடர்பில் இருந்தார்.


மே மாதம் முதலாம் திகதி எங்களை எங்கள் அலுவலகத்திலேயே இருக்குமாறும், உரிய நேரத்தில் தாம் தொடர்பு கொள்வதாகவும் திரு. சுப்பிரமணியம் ஏற்கனவே எம்மிடம் கூறியிருந்தார். அன்று காலையிலிருந்து நானும் மற்றைய ஊடகவியலாளர்களும் அவரது தொலைபேசி அழைப்புக்காக அதனருகில் தவம் கிடந்தோம். (அப்போது செல்லிடத் தொலைபேசிகள், முகநூல்கள் கிடையாது).


மறுபுறத்தில், வெளிமாகாணங்களிலிருந்து 2000க்கும் அதிகமான பொலிசார் யாழ்ப்பாணத்தில் இறக்கப்பட்டு குவிக்கப்பட்டிருந்தனர். கலகம் அடக்கும் பொலிசாரும் ஒருபுறத்தில். யுத்த பூமிபோல யாழ்ப்பாணம் அன்று காட்சியளித்தது.


குடாநாட்டில் சாதி ஒழிப்பு, ஆலயப் பிரவேசம் போன்றவைகளில் நீண்டகாலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டு வந்தனர். சங்கானையில் நிற்சாமம், தென்மராட்சியில் மந்துவில், வடமராட்சியில் நெல்லியடி, வலிகாமம் வடக்கில் மாவிட்டபுரம், யாழ்நகரில் ஆரியகுளத்தடி என்பவை இவர்களின் போராட்டக் கோட்டைகளாக விளங்கிய இடங்கள்.


இதனால், இவ்விடங்களில் மே தின ஊர்வலமோ கூட்டமோ நடத்தப்படலாமென்ற சந்தேகத்தில் பெருமளவான பொலிசார் ஆயுதபாணிகளாக நிறுத்தப்பட்டிருந்தனர்.


மாலை சுமார் ஐந்து மணிவரை எந்தவித அசமாத்தமும் இல்லை. யாழ்நகர் வெறிச்சோடிக் காணப்பட்டது, ஆங்காங்கே பொலிஸ் ஜீப் வண்டிகள் உறுமிக் கொண்டு திரிந்தன. சுப்பிரமணியம் அவர்களின் தொலைபேசி அழைப்பை எதிர்பார்த்து நாம் களைத்துப் போயிருந்தோம்.


ஐந்தேகால் மணியளவில் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அடுத்த ஐந்து நிமிடங்களில் வின்ட்சர் தியேட்டர் அமைந்திருக்கும் ஸ்ரான்லி வீதி - கஸ்தூரியார் வீதிச் சந்திக்கு வருமாறு ஓர் அநாமதேயக் குரல் தெரிவித்தது. அடுத்த விபரம் கேட்பதற்கிடையில் அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. சிலவேளை இது பொலிசாரின் தந்திர யுக்தியாக இருக்கலாமோவெனவும் எண்ணத் தோன்றியது. ஆனாலும் அந்தத் தொலைபேசி அழைப்பை நிராகரிக்க முடியவில்லை.


இரண்டு நிமிடங்களில் நான் அவ்விடத்துக்குச் சென்றுவிட்டேன். மற்றைய பத்திரிகை நண்பர்களும் இளைக்கக் களைக்க வந்த சேர்ந்தனர்.


 வின்ட்சர் தியேட்டரும் ராஜா தியேட்டரும் அச்சந்தியில் எதிரும் புதிருமாக உள்ளன. பிற்பகல் ஐந்தரை மணியளவில் இரண்டு தியேட்டர்களிலும் 2:30 மணி பகல் படக்காட்சி முடிந்து சுமார் 500க்கும் அதிகமானவர்கள் வெளியே வந்தனர். வழக்கமாக படம் பார்க்க வரும் கூட்டமென்று நாம் நினைத்தோம்.


இரு அணியினரும் ஒன்றாக இணைந்து தங்கள் பொக்கற்றுக்குள் இருந்த சிவப்புத் துணிகளை மேலே உயர்த்தியவாறு திடீரென "தொழிலாளர் வாழ்க" என கோசமெழுப்பினர். எங்கிருந்து வந்ததோ தெரியாது, சிவப்புத் துணியில் எழுதப்பட்ட ஷதொழிலாளர் தினம்| என்ற பெரிய பதாதையை முன்னால் தாங்கிக் கொண்டு இருவர் செல்ல அந்தக் கூட்டம் அவர்கள் பின்னால் வேகமாகக் கோசமிட்டவாறு ஓடிச் சென்றது.


கஸ்தூரியார் வீதி, பள்ளிவாசல் ஒழுங்கை, சப்பாத்துக்கடை ஒழுங்கை, மலாயன் கடைச் சந்தி என்று சகல குறுக்கு ஒழுங்கைகளாலும் ஆறு ஓடுவதுபோல ஆர்ப்பாட்டமிட்டவாறு அவர்கள் ஊர்வலமாகப் பாய்ந்து பாய்ந்து சென்றனர்.


சத்திரத்துச் சந்தி தாண்டி யாழ்ப்பாணம் பெரிய தபாற் கந்தோரடியை (முற்றவெளியின் முன்னால்) ஊர்வலத்தின் முற்பகுதி தாண்டும்போது கே.ஏ.சுப்பிரமணியமும் மற்றும் முக்கியஸ்தர்களும் அங்கு காணப்பட்டனர்.


சில நிமிடங்கள் தாண்டியிருந்தால் ஊர்வலம் யாழ். பொலிஸ் நிலையத்தைச் சென்றடைந்திருக்கும். அதற்கிடையில் பெரிய ட்ரக் வண்டிகளில் பொலிசார் கொண்டு வந்து இறக்கப்பட்டனர். அவர்களின் குண்டாந்தடிகள் ஊர்வலகாரரை பதம் பார்த்தன. கண்ணீர் புகை பிரயோகம் செய்யப்பட்டது.


கீழே விழுந்த சுப்பிரமணியம் அவர்கள்மீது இலக்கு வைத்து பொலிசார் தாக்கினர். அவர் இரத்த வெள்ளத்தில் காணப்பட்டார். ஆனாலும் ஊர்வலத்தினர் அச்சமடைந்து திரும்பிச் செல்லவில்லை. அவ்விடத்திலேயே அமர்ந்துவிட்டனர்.


சுப்பிரமணியம் அவர்களை நிலத்தில் இழுத்துச் சென்ற பொலிசார், எதிரே வந்த பஸ் வண்டியின் முன்னால் தூக்கி வீசினர். பஸ் வண்டி அவர்மீது ஏறாத குறை.


பொலிசாரைப் பொறுத்தளவில் மே தினக்கூட்டம் தடுக்கப்பட்டதென்ற நிம்மதி. ஆனால், அதனை ஏற்பாடு செய்தவர்களைப் பொறுத்தமட்டில் வெசாக் தின பிரகடனம் முறியடிக்கப்பட்டு தொழிலாளர் தினம் யாழ்ப்பாணத்தில் உணர்வுபூர்வமாக வெற்றி கண்டது என்ற பெருமை.


இங்கு குறிப்பிடக்கூடிய முக்கியமான ஒன்று, அதனை ஏற்பாடு செய்தவர்களின் அபாரமான திட்டமிடல். எவருக்கும் ஒருபோதும் தெரியாதவாறு சுமார் 500 பேரை பகல் படக்காட்சிக்கு இரண்டு தியேட்டர்களுக்கும் உள்ளே அனுப்பியதும், அவர்களது பொக்கற்றுகளுக்குள் மறைத்து வைத்திருக்கும் வகையில் சிவப்புத் துணிகளைக் கொடுத்தனுப்பியதும் வித்தியாசமான ஏற்பாடு.  எக்காரணம் கொண்டும் இதனை முற்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போனது பொலிசாரின்  புலனாய்வுக்குக் கிடைத்த படுதோல்வி.


நேர்த்தியாக ஏற்பாடான இந்தப் பேரணி, சுமார் ஐந்து நிமிடத்துக்குள் ஒரு மைல் தூரத்தை பாய்ந்து பாய்ந்து சென்று முன்னேறியது பொலிசாரின் கண்களுக்குள் எண்ணெய் ஊற்றியதுபோல.  ஆயிரக்கணக்கான பொலிசார் குவிக்கப்பட்டும் பேரணி ஆரம்பமாவதைத் தடுக்க முடியாமல் போனது தொழிலாளர்களுக்குக் கிடைத்த வெற்றி.


அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது."

The above was Written by "பனங்காட்டான்" on April 22, 2018 


My reply below as follows with some minor corrections for the above article:

தங்கள் வரலாற்றுப் பதிவுக்கு மிக்க நன்றி. எனக்கு தெரிந்த சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். 1969 ஆண்டு மே நாள் நிகழ்வு பௌத்தர்களின் புனித நாளான வெசாக் நாளன்று வந்ததால் அன்று மே தினப் பேரணிகளுக்கு அன்றைய டட்லி சேனநாயக்க அரசு தடை விதித்திருந்தது. இந்த உத்தரவை மீறி இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) உறுப்பினர்கள் கொழும்பில் பெரும் ஊர்வலம் ஒன்றை நடத்தினர். எஸ். டி. பண்டாரநாயக்கா, டி.கே.டி ஜினேந்திரபாலா, மற்றும் வாட்சன் பெர்னாண்டோ ஆகியோர் மே 1, 1969 அன்று கொழும்பில் கைது செய்யப்பட்டனர். நண்பர் மூத்த பத்திரிகையாளர் எஸ். எம்.கோபாலரத்தினம், தோழர் மணியம் பற்றி எழுதிய 1989 குறிப்பை மீண்டும் வாசித்தேன்.... https://sathiamanai.blogspot.com/2017/12/blog-post.html வேற்று அரசியலும், வேறு தளத்திலும் இருந்து உண்மைகளை எழுதியது , மிகுந்த ஆறுதலைத் தந்தது. உண்மைகள, தியாகங்கள் புதைந்தழிந்து போகா. …... "அன்றைய தாக்குதலில் படுகாயமுற்ற திரு.சுப்பிரமணியம் யாழ். மருத்துவமனையில் சில நாள் சிகிச்சை பெற்றபின் சீனா கொண்டு செல்லப்பட்டு மேற்சிகிச்சை வழங்கப்பட்டது."- நான் இதை எழுதுவதன் நோக்கம் என்னவென்றால், தோழர் மணியம் 1969ஆம் ஆண்டு மேதினத்தில் படுகாயப்பட்டதும், அவருக்கு தோழர் சண்முகதாசன் தனது வீட்டில் வைத்து வைத்தியம் செய்ததும் முன்னர் எழுதியிருந்தேன். அக்காலகட்டத்தில் தோழர் மணியத்தை வைத்தியத்திற்காக சீனாவுக்கு அனுப்ப தோழர் சண்முகதாசன் பல முயற்சிகள் எடுத்தாராம். ஆனாலும் அம்முயற்சிகள் கைகூடவில்லை. இது தோழர் சண்ணுக்கு, சீனக் கட்சி மீது விசனத்தை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில் இருந்து சீனா பற்றிய அவரது கண்ணோட்டம் மாற்றமடைய தொடங்கியது. தோழர் மணியம் தனது உடல் நலம் பற்றி பெரிதாக அக்கறை கொள்ளவில்லை. ஆனாலும் அவர்களுக்கிடையே சீனா பற்றிய வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தது. தன்னை முன்னிலைப்படுத்திய எந்த ஒருவிடயத்தையும் அவர் விரும்பியிருக்கமாட்டார். அன்று தோழர்களுடன் சேர்ந்து கைச்சாத்திட்ட 1963 ஆண்டு உடன்படிக்கையின்படி தனது மனச்சாட்சிக்கு ஏற்ப சுயநலமின்றி தோழர் மணியம் வாழ்ந்து மறைந்தார்.-வள்ளியம்மை சுப்பிரமணியம்


-Valliammai Subramaniam 29 Nov 2020.

Saturday, April 3, 1971

1967 Conference in Albania Kongresi I 5-te I BRPSH. அல்பேனியாவில் 1967 நடைபெற்ற மகாநாடு

https://lh3.googleusercontent.com/LUQ6q-uxkRi-EF73vnosZJtSZ3qpIV-R5cJFN-9q9BnMz9OB3Y9UYNjWCmRFOqqAPrMgD5aA1Hqq1tAm7p4VZOMQ9w1jSSPtbcsiGJpTqYRaSOCsmTywzftmqJUWzahsRrOpGxh5
தோழர் மணியம் அவர்களுடன் சில சிங்கள தோழர்கள் மக்கள் சீனத்திலும், ஐரோப்பிய அல்பேனிய நாட்டிலும் நடை பெறும் வாலிபர் மாநாடுகளில் பங்கு பற்றுவதற்காக அழைக்கப்பட்டனர். அல்பேனியாவில் 1967 நடைபெற்ற மகாநாட்டில் ஜேவிபி ரோகன விஜயவீராவும் கலந்துகொண்டார் எனச் சொன்னார். அங்கு, இவர்களைப் போலவே பல நாட்டு முற்போக்கு வாலிப இயக்கத்
தோழர்களும் சமூகமளித்திருந்தனராம். எழுச்சி மிகு வாலிப மாநாட்டு உரைகளும், அங்கு எடுக்கப்பட்ட தீர்மானங்களும் தங்களைப் புதுமையான வழியில் சிந்திக்கத் தூண்டும் வகையில் அமைந்திருந்தனவாம். ஒவ்வொரு தன்னலமற்ற தோழர்களின் செயற்பாடுகள் எப்படி மக்களைச் சென்றடைகின்றன என்பது பற்றிச் சிந்திக்க வைத்ததாக அமைந்திருந்தன எனக் கூறினார். பல படங்கள் இருந்தன. ஒன்றுடன் ஒன்று ஒட்டிய நீண்ட படங்கள் முழு மகாநாட்டையும் அடக்கியதான படங்கள் இருந்தன. புலப் பெயர்வு பலதை இழக்கப்பண்ணிவிட்டது.



5th Congress of BRPSH.
Notes from Enver Hoxha's Diary, June 1967.

MONDAY
JUNE 26, 1967
Amid great enthusiasm, the 5th Congress of the Youth Union was opened in the "Partizani" sports palace. After the report, discussions began. Our wonderful youth discuss with fire, with political and ideological maturity. Your heart becomes a mountain when you hear how the young delegates who have come from all four corners of the country speak. "All the opportunities have been created for us to progress, to line up together with our brothers and friends," they say from the congress stand. A worker from Elbasan, excited the young people with her discussion. "Our excursions in the mountains became bread excursions" - said the young delegate from Kuçi i Kurveleshi. Young men and women talk about the wonderful initiatives they have taken and will take in the future.
In their congress, the young men and women have brought the enthusiasm, the revolutionary youth momentum.
Congress continues its work.

TUESDAY
JUNE 27, 1967
Discussions of young men and women continue in
5th Youth Congress. Fiery discussions, unwavering faith in the future and boundless love for the Party. Wonderful was the discussion of the young Mirdita Martine Noku, who spoke without paper.

THURSDAY
JUNE 29, 1967
The youth congress successfully concluded its proceedings. Indescribable enthusiasm of our youth, which showed its strength, skills, knowledge, and inexhaustible energies at this congress. We are proud and we are convinced that with such youth the baton of the revolution is in safe hands.

In the photo: View from the "Partizani" sports palace, where the 5th Congress of the BRPSH took place, June 1967

Thanks to https://www.facebook.com/Shqiperia-n%C3%AB-Vitet-e-Socialismit-1815233871857586/photos/a.1815516985162608/3494609893919967 

Sunday, March 21, 1971

Socialism and the working class. Compromise of left-wing leaders சோசலிசமும் தொழிலாளி வர்க்கமும் . இடதுசாரித் தலைவர்களின்வர்க்க சமரசம்

Socialism and the working class. Compromise of left-wing leaders 
சோசலிசமும் தொழிலாளி வர்க்கமும் . இடதுசாரித் தலைவர்களின் வர்க்க சமரசம் 

தொழிலாளி 1964.06.20


Sunday, March 14, 1971

Khrushchev, the guardian of the colonial system. The clown's policy killed Lumumba. The struggle is the way for liberation காலனி முறையின் காவலன் குருச்சேவ் கோமாளியின் கொள்கை லுமும்பாவை கொன்றது போராட்டமே விடுதலை மார்க்கம்

Khrushchev, the guardian of the colonial system. The clown's policy killed Lumumba. The struggle is the way for  liberation 

காலனி முறையின் காவலன் குருச்சேவ் கோமாளியின் கொள்கை லுமும்பாவை கொன்றது 

போராட்டமே விடுதலை மார்க்கம் 

தொழிலாளி 1964.05.16



Khrushchev, the guardian of the colonial system. The clown's policy killed Lumumba. The struggle is the way for liberation 

The policy of the crony Khrushchev clown of the colonial system killed Lumumba 

The struggle is the only way for liberation

 

Worker 1964.05.16

The policy of the crony Khrushchev clown of the colonial system   killed Lumumba. 


காலனி முறையின் காவலன் குருச்சேவ்  கோமாளியின் கொள்கை லுமும்பாவை கொன்றது. 

The struggle is the only way for liberation 

The next treatment Khrushchev would use to dismantle the colony was disarmament. Bernstein , a revisionist of the Second International, also said that "international treaty and disarmament can uphold equality between nations." Revisionist Kautsky also said that "Western European countries can reduce military spending by doing public works in China, Turkey, and South America, such as railroads, to help develop businesses."

When Lenin criticized the disarmament of that day, he said that the main mistake of their demand for disarmament was to slip away from the material problems of the revolution. Or a new kind of disarming proponents of disarmament! Do you stand for revolution? ” He asked in an article entitled 'War Plan'.

At this point, Khrushchev, who boasted of being Lenin's successor, immersed himself in Lenin's views on the armed revolution. Yet he has brought back to the forefront the reactionary view of the Second International revisionists that the liberation of the colonial people is possible only through disarmament.

"Disarmament means the disarmament of war forces, the elimination of military fanaticism, the elimination of armed interference in the internal affairs of another country, and the complete and final abolition of all forms of colonialism," Khrushchev said.

Not only that, 'disarmament will greatly increase the chances of assisting new countries. Allocating 8-10 percent of the $ 12 billion annually to military spending would help eradicate hunger, disease and illiteracy in the region within 20 years. ”

According to Khrushchev, the people of the oppressed countries did not engage in anti-colonial and liberation struggles, and it seemed as if the imperialists could wait until they were merciful and agree to disarmament, but once the disarmament was over, they would be freed and slaughtered. It is utterly strained, nothing but the original opportunism, and yet waxing and waxing imperialism.

Imperial Instrument United Nations


Khrushchev's next call for the abolition of the colony is to implement it through the United Nations. "Who else but the UN can guide the abolition of colonial rule?" Khrushchev asks.

Today's UN They dominated the former 'League of Nations' just as the imperialists had taken over the council. In reference to this Stalin said that today the world is divided into two camps so that they 'cannot make the alley. One is the imperialist camp and the other is the socialist camp. Imperialism on the verge of death is holding the last trumpet of the 'League of Nations' and trying to save itself by siding with the thieves of other nations. This is a futile effort. Because time and circumstance work against it and in favor of socialism. ”

But the existence of one League of Nations, the old Trinitarian Kautsky said, "represents a great achievement of the ambition for peace, a lever that no other institution can provide for the preservation of peace."

He did not stop with this. 'Today the United States is the most powerful power in the world. He said it was possible to prevent a war within the League of Nations, or work with it.

Today, Khrushchev also describes the United Nations-not accommodating the People Republic of China, home to a quarter of the world's population, as the father of peace. Today he is also promoting that the abolition of colonization can be accomplished with the help of the UN.

'We appeal to this high-level UN body for the rationality and foresight of the West. We appeal to their governments and representatives. Let us agree to the move to end colonial rule and accelerate the natural course of history, ”he told the UN.

But what has the UN really achieved? It helped to liberate the Congo from Belgian imperialism and turn it into a US colony.

It’s good to have a little perspective on this. In the Congo, described as a "repository of global raw materials", Belgium carried out spontaneous exploitation.

Meanwhile, the UK joined. It is rich in all kinds of chemicals, metals such as gold, silver, uranium, cotton, cocoa, coffee, rubber, etc. This has aroused great appetite in the United States. Congo was liberated on June 30, 1960.

But in five days the United States created a state of chaos and prompted the UN to intervene. At this point, a 1959 research report by the U.S. Senate Foreign Relations Committee found that Congo's minerals were helping the U.S.'s industrial and military needs. Therefore, our future relationships must be such as to guarantee the continued availability of these provisions. "

On the pretext of suppressing the Congolese insurgency, Khrushchev also supported the United States, which dreamed of eliminating the colony through the UN for its own needs. At the UN General Assembly on July 13, 1960. Russia joins UN Security Council Voted to send troops to the Congo. Not only that: on July 15, 1960 Khrushchev told Patrice Lumumba by telegram  that " the UN Security Council has taken effective action”. But what happened? Lumumba was murdered. Antoine Gizenga, who came after him, was imprisoned. The Congo escaped from the wolf's mouth and was captured by the tiger. This is how Khrushchev's policy of annihilating the colony through the UN ended.

The United States, still dreaming of building a stronghold in the Mediterranean, has provoked ethnic strife between Turkey and Greece in tiny Cyprus. (The role of the United States in the Sri Lankan ethnic conflict is significant.) President Macarios has also rejected US and British deployment of "peacekeeping forces".

The Cyprus issue was brought to the UN. Russia has failed to abide by its decision to send UN troops to Cyprus. This is Khrushchev's second aid to the United States. Formerly in Congo, today in Cyprus, therefore, the United States has sent PS Gyani , from the American new colony of India, as UNEF Commander-in-Chief. We must not forget that Indian forces also helped the United States in the Congo.

Is this the abolition of colonies by the UN? Or create new colonies for America? Today is a critical time to think about that. Here we recall what Mario de Andrade, the leader of the people's movement for the liberation of Angola (MPLA), said.

"We are fighting today for those political rights that we have failed to achieve in a peaceful way. The gift of the Salazar regime to our demands for peace is to reject freedom and unleash repression. This is forcing the Angolan people to take up arms”.

போராட்டமே விடுதலை மார்க்கம் 

அடுத்து குருஷ்சேவ் காலனியத்தை ஒழிப்பதற்குக் கொடுக்கும் சிகிச்சை ஆயுத ஒழிப்பாகும். இரண்டாவது சர்வதேசியத்தை சேர்ந்த திரிபுவாதி பேர்ன்ஸ்டைனும் ‘சர்வதேசிய உடன்படிக்கை, ஆயுத ஒழிப்பு இவற்றின் மூலம் நாடுகள் மத்தியில் சமத்துவ உரிமைகளை” நிலை நிறுத்த முடியும் என்று கூறினார்.  திரிபுவாதி கவுட்ஸ்கியும், ‘மேற்கு ஐரோப்பிய நாடுகள் இராணுவ செலவினங்களைக் குறைத்துக் கொள்வதால் சீனா, துருக்கி, தென் அமெரிக்கா ஆகிய இடங்களில் புகையிரத வீதிகள் போன்ற பொது வேலைகளைச் செய்து தொழில் அபிவிருத்திக்கும் உதவி செய்ய முடியும்” என்று கூறினார்.

அன்று ஆயுத ஒழிப்பைப் பற்றி விமர்சனம் செய்தபோது லெனின் அவர்கள் ‘ஆயுத ஒழிப்புக்கான கோரிக்கையின் பிரதான தவறு என்னவெனில், புரட்சியின் ஸ்தூலமான பிரச்சினைகளிலிருந்து நழுவப் பார்ப்பதாகும். அல்லது ஆயுத ஒழிப்பின் ஆதரவாளர்கள் ஆயுதமற்ற ஒரு புதியவகையான! புரட்சிக்காக நிற்கிறார்களா?” என்று ‘யுத்தத் திட்டம்” என்ற கட்டுரையில் கேட்டிருக்கிறார்.

இப்படி இருக்கும் பொழுது தன்னை லெனினின் வாரிசாகத் தம்பட்டம் அடிக்கும் குருஷ்சேவ் ஆயுதப் புரட்சி பற்றிய லெனினின் கருத்துக்கு முழுக்குப் போட்டுவிட்டார். இன்னும் காலனி நாட்டு மக்கள் விடுதலை பெறுவது ஆயுத ஒழிப்பினால் சாத்தியம் என்ற இரண்டாவது அகிலத் திரிபுவாதிகளின் பிற்போக்குக் கருத்தை திரும்பவும் அரங்கிற்குக் கொண்டு வந்திருக்கிறார்.

‘ஆயுத ஒழிப்பு என்பதன் அர்த்தம் யுத்த சக்திகளை நிராயுத பாணிகளாக்குவது, இராணுவ வெறியை அகற்றுவது, இன்னொரு நாட்டின் உள் விவகாரங்களில் ஆயுதத் தலையீடு நிகழ்த்துவதை இல்லாமாற் செய்வது, எல்லா வடிவங்களிலுமான காலனியத்தை முற்று முழுதாகவும், இறுதியாகவும் ஒழித்துக் கட்டுவதாகும்” என்று குருஷ்சேவ் கூறியுள்ளார்.

அது மாத்திரமல்ல, ‘ஆயுத ஒழிப்பு புதிதாக அமையும் நாடுகளுக்கு உதவியளிக்கும் வாய்ப்புகளைப் பெரிதும் அதிகரிக்கச் செய்யும். இராணுவச் செலவினங்களுக்கு ஆண்டுதோறும் 12,000 கோடி டாலர்களில் 8-10 வீதத்தை ஒதுக்கினால், அது துன்ப துயரங்களால் வாடும் பிரதேச மக்களின் பசி, நோய், கல்வியின்மை ஆகியவற்றை 20 ஆண்டுகளுக்குள் ஒழித்துக்கட்ட துணை புரியும்” என்றும் கூறினார்.

குருஷ்சேவின் கருத்துப்படி அடக்கி ஒடுக்கப்பட்ட நாடுகளின் மக்கள் காலனிய எதிர்ப்பு, விடுதலைப் போராட்டங்களில் ஈடுபடாமல், ஏகாதிபத்தியவாதிகள் கருணை கூர்ந்து, ஆயுத ஒழிப்புக்கு இணங்கும்வரை காத்திருந்தால் போதும், ஆயுத ஒழிப்பு நிறைவேறியதும் அவர்கள் அடிமை விலங்கை அகற்றி, நேரே கைலாயம் போய்விடலாம் என்பது போலிருக்கிறது. இது முழுக்க முழுக்க திரிபுவாதம், அசல் சந்தர்ப்பவாதம் அன்றி வேறல்ல, இன்னும் ஏகாதிபத்தியத்தையும் பூசி மெழுகுவதாகும்.

ஏகாதிபத்தியக் கருவி ஐக்கிய நாடுகள் சபை

காலனி ஒழிப்புக்கு குருஷ்சேவ் கூறும் அடுத்த மருந்து, ஐக்கிய நாடுகள் சபை மூலம் அதை நிறைவேற்றுவதாகும். ‘காலனி ஆட்சியை ஒழிப்பதற்கு ஐ.நா சபையின்றி வேறு யார் வழிகாட்ட முடியும்?” என்று கேட்கிறார் குருஷ்சேவ்.

இன்று உள்ள ஐ.நா. சபையை எப்படி ஏகாதிபத்தியவாதிகள் கைவசப்படுத்தி இருக்கிறார்களோ, அப்படியே முன்னிருந்த ‘லீக் அப் நேஷன்ஸ்” உம்  அவர்கள் ஆதிக்கத்தில் இருந்தது. இதைக் குறிப்பிடும்போது ஸ்டாலின் அவர்கள் ‘சந்து செய்ய முடியாதபடி இன்று உலகம் இரண்டு முகாங்களாகப் பிரிந்து இருக்கிறது. ஒன்று ஏகாதிபத்திய முகாம், மற்றது சோஷலிச முகாம். மரணப்படுக்கையில் இருக்கும் ஏகாதிபத்தியம் ‘லீக் அப் நேஷன்ஸ்” என்ற கடைசித் துரும்பைப் பிடித்து, இதர நாடுகளின் திருடர்களையும் ஓரணியில் சேர்த்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சிக்கிறது. இது வீண் முயற்சியாகும். ஏனெனில் காலமும் சூழ்நிலையும் அதற்கு எதிராகவும், சோஷலிஸத்துக்குச் சார்பாகவும் வேலை செய்கின்றன” என்றார்.
ஆனால் பழைய திரிபுவாதி கவுட்ஸ்கி ‘லீக் அப் நேஷன்ஸ் ஒன்று இருப்பதே சமாதான லட்சியத்துக்கு ஒரு மகத்தான சாதனையாகும் சமாதானப் பாதுகாப்பிற்கு வேறெந்த ஸ்தாபனமும் அளிக்க முடியாத நெம்பு கோலை இது பிரதிநிதித்துவப்படுத்துகின்றது” என்று கூறினார்.

இத்துடன் நின்று விடவில்லை அவர். ‘இன்று அமெரிக்கா உலகின் மிகப் பலம் வாய்ந்த வல்லரசாகத் திகழ்கிறது. அது ‘லீக்அப் நேஷன்ஸின்” உள்ளே, அல்லது அதனோடு சேர்ந்து வேலை செய்தால் யுத்தத்தைத் தடுப்பது சாத்தியம்”என்று கூறினார்.

இன்று குருஷ்சேவும் அமெரிக்கா கைவசப்படுத்தியுள்ள ஐ.நா.வை, உலகின் நாலில் ஒரு பங்கு மக்கள் வாழும் சீனாவை அங்கத்துவ நாடாக இல்லாத ஐ.நா.வை சமாதானத்தின் பிதாவாக வர்ணித்து வருகிறார். இன்று ஐ.நா.வைக் கொண்டு காலனிய ஒழிப்பை நிறைவேற்றலாம் என்றும் விளம்பரம் செய்து வருகிறார்.

‘இந்த உயர்தர ஐ.நா சபையிலிருந்து மேலை நாடுகளின் பகுத்தறிவுக்கும், தூரதிருஷ்டிக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். அவற்றின் அரசாங்கங்களுக்கும், பிரதிநிதிகளுக்கும் வேண்டுகோள் விடுக்கிறோம். காலனிய ஆட்சியை ஒழிக்கும் நடவடிக்கைக்காக நாம் உடன்பட்டு, வரலாற்றின் இயற்கையான போக்கை துரிதப்படுத்துவோமாக” என்று ஐ.நா.விலும் பேசினார்.

ஆனால் ஐ.நா உண்மையில் சாதித்ததென்ன? பெல்ஜிய ஏகாதிபத்தியத்திலிருந்து சுதந்திரமடைந்த காங்கோவை அமெரிக்காவின் காலனியாக மாற்றத் துணை செய்ததன்றி வேறல்ல.

இது பற்றிச் சிறிது கண்ணோடிப் பார்ப்பது நல்லது. ‘உலக மூலப் பொருள்களின் களஞ்சியம்” என்று வர்ணிக்கப்படும் காங்கோவில் பெல்ஜியம் தன்னிச்சைப்படி சுரண்டல் நடத்தி வந்தது.

இடையில் இங்கிலாந்தும் இதிற் சேர்ந்து கொண்டது. அங்கு எல்லாவிதமான ரசாயன மூலப் பொருட்களும், தங்கம், வெள்ளி, உரேனிமயம் போன்ற உலோகங்களும், பருத்தி, கொக்கோ, கோப்பி, றப்பர் முதலியவையும் ஏராளமாக உண்டு. இது அமெரிக்காவுக்கு கைவசப்படுத்த வேண்டுமென்ற பெரும் பசியைக் கிளப்பிவிட்டது. 1960 ஜுன் 30ல் காங்கோ விடுதலையடைந்தது.

ஆனால் ஐந்து நாட்களில் அமெரிக்கா ஒரு குழப்ப நிலையை உண்டாக்கிவிட்டு, ஐ.நா.வைத் தலையிடுமாறு தூண்டியது. இந்த இடத்தில், அமெரிக்க செனட் வெளிவிவகாரக் கமிட்டி 1959ல் வெளியிட்ட ஆராய்ச்சி அறிக்கையில் காங்கோவின் கனிப்பொருள்கள் அமெரிக்காவின் தொழில், இராணுவத் தேவைகளுக்கு உதவியாக இருக்கின்றன. எனவே, இந்த வழங்கல்கள் தொடர்ந்தும் கிடைப்பதை உத்திரவாதம் செய்யக்கூடிய அளவு எமது எதிர்கால உறவுகள் அமையவேண்டும்” என்று கூறியிருந்ததை இங்கு நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும்.

காங்கோ கிளர்ச்சியை அடக்கும் சாக்குப் போக்கில், அமெரிக்கா தனது தேவைக்காக ஐ.நா மூலம் காலனியத்தை ஒழித்துவிடக் கனவு காணும் குருஷ்சேவும் அமெரிக்காவுக்கு ஆதரவு அளித்தார். 1960 ஜுலை 13ந் தேதி நடந்த ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சிலில் ரஷியா ஐ.நா. படையை காங்கோவுக்கு அனுப்ப வேண்டும் என்று வாக்களித்தது. அது மாத்திரமல்ல: ஜூலை 15ல் குருஷ்சோவ் ‘ஐ.நா. பந்தோபஸ்து கவுன்சில் பயனுள்ள நடவடிக்கையை எடுத்திருக்கிறது” என்று லுமும்பாவுக்கும் தந்திமூலம் தெரிவித்தார். நடந்தது என்ன? லுமும்பா கொலைசெய்யப்பட்டார். அவருக்கு பின் வந்த கிஸெங்கா சிறையில் அடைக்கப்பட்டார். காங்கோ ஓநாயின் வாயிலிருந்து தப்பி, புலியிடம் அகப்பட்டுக் கொண்டது. இப்படித்தான் ஐ.நா மூலம் காலனியத்தை ஒழித்துக் கட்டும் குருஷ்சேவின் கொள்கை முடிவடைந்திருக்கிறது.

இன்னும் மத்திய தரைக்கடலில் வலுவிடம் ஒன்றை அமைக்கக் கனவு கண்டுவந்த அமெரிக்கா சின்னஞ் சிறு சைப்பிரஸில் துருக்கி, கிரேக்க மக்களுக்கிடையில் இனக்கலவரத்தைத் தூண்டி விட்டது. (இலங்கை இனக் கலவரத்திலும் அமெரிக்காவின் பங்கு உண்டு என்பது இங்கு சிந்தித்தற்குரியது.) இதை, ஜோர்ஜ் போல் என்ற அமெரிக்க துணைக் காரியதரிசி நிக்கோஸியாவுக்குச் சென்று திரும்பியதும், இனக்கலவரம் தீவிரமடைந்தது நிரூபிக்கின்றது. அத்துடன் அமெரிக்காவும், பிரிட்டனும், ‘சமாதான பாதுகாப்புக்கான படைகளை” அனுப்புவதை ஜனாதிபதி மக்காரியோஸ் நிராகரித்துவிட்டார்.

மேற்படி சைப்பிரஸ் பிரச்சினை ஐ.நாவுக்கு கொண்டுவரப்பட்டது. ஐ.நா படைகள் சைப்பிரஸக்கு அனுப்பும் தீர்மானம் வந்தபோது ரஷ்யா தனது ரத்துரிமையைப் பாவிக்கத் தவறிவிட்டது. இது அமெரிக்காவுக்கு குருஷ்சேவ் செய்த இரண்டாவது உதவி. முன்பு காங்கோவில், இன்று சைப்பிரஸில், எனவே, அமெரிக்காவின் புதிய காலனியான இந்தியாவின், P.S. ஜியானியை ஐ.நா படைத் தளபதியாக அமெரிக்கா அனுப்பியிருக்கின்றது. காங்கோவிலும் இந்தியப் படைகள் அமெரிக்காவுக்கு உதவி செய்ததை நாம் மறந்துவிடக்கூடாது,

இது ஐ.நா மூலம் காலனிகளை ஒழிப்பதா? அல்லது அமெரிக்காவுக்குப் புதிய காலனிகளைப் படைப்பதா? என்று சிந்திக்க வேண்டிய ஒரு நெருக்கடியான கட்டம் இன்று வந்துவிட்டது. இங்கு அங்கோலா விடுதலைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் மரியோ டி அன்ட்ராடே அவர்கள் கூறியதை நினைவூட்டுவோமாக.

‘‘எந்த அரசியல் உரிமைகளை சமாதான வழிகளில் பெறப் பாடுபட்டுத் தோல்வி கண்டோமோ, அந்த உரிமைகளைப் பெற இன்று போராட்டம் தொடுத்திருக்கிறோம். சுதந்திரத்தை நிராகரித்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விட்டதுதான் எமது சமாதானக் கோரிக்கைளுக்கு சலஸார் ஆட்சி தந்த பரிசு. இது அங்கோலா மக்களை ஆயுதம் தாங்கிப் போராட நிர்ப்பந்தித்துள்ளது” என்று கூறினார். - கே. ஏ. சுப்பிரமணியம் 1964.05.16

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" - Encounters in the Life of a Communist Spouse

English "Oru Communist Inaiyar Valvin Santhippukal" -  Encounters in the Life of a Communist Spouse
Please click on the photo to download the English Version of the FULL BOOK in PDF